மன்னிக்கத் தெரிந்த இதயம் ஒரு பெருங்கடல் போன்றது, எதையும் உள்வாங்கும். ஆனால், துரோகங்கள் என்னும் பனிப்புயல் தொடர்ந்து தாக்கும் போது, அந்த மென்மையான அலைகளும் உறைந்துபோய் எவராலும் ஊடுருவ முடியாத பாறையாக மாறிவிடுகின்றன.
தொடர்ந்து மன்னிப்பதாலோ என்னவோ வாழ்க்கை ஒரு கடினமான விஷயமாக இவர்களுக்கு மாறிவிடுகிறது ! அவர்களின் புதிய சுபாவம். இனி யாரையும் அவ்வளவு எளிதாகத் தன் வாழ்க்கைக்குள் அனுமதிக்கக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வு உருவாக்குவதை தடுக்க முடியாது
எல்லையற்ற பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. அலைகளைப் போல எல்லோரையும் வரவேற்ற மனம், ஒருகட்டத்தில் குளிர்ந்து, எதற்கும் அசைந்து கொடுக்காத கல்லாக மாறிவிடும் எதார்த்தம் இது.
ஒரு காலத்தில் எல்லோரையும் வரவேற்கும் திறந்த சத்திரமாக இருந்த நல்லவர்களின் மனம், உலகத்தின் சுயநலத்தைக் கண்டபின்பு, கடுமையான காவல் கொண்ட கோட்டையாக மாறிவிடுகிறது
தங்களை அழித்துக் கொண்டாவது மற்றவர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் நல்லவர்கள், ஒரு கட்டத்தில் தங்களின் தியாகம் மற்றவர்களால் மிகவும் மலிவாகவே மதிக்கப்பட்டது என்பதை உணரும் தருணத்தின் வலி இது
எல்லாக் கேள்விகளுக்கும் அன்பையே பதிலாகத் தந்த உதடுகள் ஒருநாள் மௌனமாக மாறுகின்றன என்றால், அங்கே வார்த்தைகள் தீர்ந்துவிடவில்லை; அவர்கள் கொடுத்த அன்பின் மதிப்பு தீர்ந்துவிட்டது என்று அர்த்தம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக