பொதுவாக, ஆண்கள் தங்கள் மனைவியும் குழந்தைகளும் அதிக பணம் மற்றும் பொருட்களால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்று நினைக்கலாம். ஆனால் இது உண்மை இல்லை. உண்மையான மகிழ்ச்சி நீங்கள் அதிகம். பணம் தொடர்பான விஷயங்களில் பெண்களுக்கு நீங்கள் எவ்வளவு கொடுத்தாலும் பணம் என்ற வகையில் அவர்களுடைய சந்தோஷம் என்பது இருக்காது. இதனை இன்னும் எளிமையான வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு பையனுடைய வாழ்க்கை என்பது நிறைய பேருடைய வாழ்க்கையோடு கம்பேரிஸன் செய்து அவைகளில் முதன்மையானதாக இருக்க வேண்டும் என்பதை குறித்ததாக இருக்கிறது. ஆனால் ஒரு பெண்ணுடைய வாழ்க்கை என்பது.எப்பொழுதுமே அதிகப்படியான அன்பையும் ஆதரவையும் பெற்ற ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதை பொறுத்து அமைந்துள்ளது. ஆகவே பெண்களுடைய பெர்ஸ்பெக்டிவ்ல் கரன்ஸி என்பது சரியான ஆதரவும், பாதுகாப்பும் மட்டுமே நிஜமான தாள்களும் கூட.பெருவாரியான மாற்றத்தை செய்து வைப்பதில்லை. உதாரணத்துக்கு ஒரு கணவர் ஒரு மனைவியின் நோய் வாய்ப்பட்டிருக்கும் தருணத்தில் அவரோடு இல்லாமல் வேறு எங்கோ இருந்தால் அதனை விட ஒரு மனைவிக்கு வருத்தமான விஷயம் என்பது இருக்கவே இருக்காது. அந்த நிலையில் அந்த கணவர் எவ்வளவு கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும்.அந்த நேரத்தில் அங்கே இல்லாமல் போனதை விடவும் வருத்தப்பட வைக்கக் கூடிய விஷயம் என்பது வேறு எதுவுமே இருக்காது. அன்பில் இந்த வகையான பாதுகாப்பு மிகவும் அவசியமான ஒன்றாகும். ஒரு பாதுகாப்பு இல்லாத அன்பு என்பது வங்கியில் இருக்க வேண்டிய பணத்தை நெடுஞ்சாலையில் நடுவில் தூக்கி எறிவதற்குச் சமமாகும். அது எப்பொழுது வேண்டுமென்றாலும் காற்றில் அடித்துக் கொண்டும் செல்லலாம். காணாமலும் போகலாம்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 10
ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை கவனித்தத...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாத...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக