திருமணம் கடந்த உறவுகளை ஆதரிக்க கூடாது. இது பையனாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் குடும்ப உறவுகளில் உணர்ச்சி மற்றும் மன அழுத்தங்களை ஏற்படுத்தும். ஒரே நேரத்தில் பல வாழ்க்கைத் துணைகளுக்கு ஒரு ஆண் அல்லது பெண் அன்பை பேற நினைத்தால் சமமான அன்பும் கவனமும் வழங்க முடியாததால், பொறாமை, பாதுகாப்பின்மை மற்றும் போட்டி மனப்பான்மை உருவாகும்.
குறிப்பாக பெண்கள் உறவுகளில் பெண்கள் பெரும்பாலும் தன்னாட்சி இழப்பை எதிர்கொள்கின்றனர், மேலும் பாரம்பரியக் கட்டுப்பாடுகளுக்குள் வாழ வேண்டிய நிலை ஏற்படுகிறது. இது அவர்களின் தனிப்பட்ட வளர்ச்சியைத் தடுக்கும். இத்தகைய சூழலில் வளரும் குழந்தைகள் அடையாளம், நிலைத்தன்மை மற்றும் உணர்ச்சி பிணைப்பில் குழப்பமடைந்து வளர வாய்ப்பு அதிகம்.
இதைவிட முக்கியமாக, திருமணம் கடந்த உறவுகள் சமூக சமத்துவத்தையும், பெண்களின் உரிமைகளையும் பாதிக்கும். இது பெரும்பாலும் கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளில் குறைவுடன் தொடர்புடையதாக இருக்கிறது,
மேலும் இந்த வானவில் ஆட்கள் இது போன்ற விஷயங்களில் நிலையாக சப்போர்ட் செய்தால் குடும்பக் கலவரங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சட்ட ரீதியாகவும் சிக்கல்கள் ஏற்படுகின்றன
உரிமை பிரச்சனைகள், குழந்தை பராமரிப்பு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு இல்லாத உறவுகள் போன்றவை. சிலர் இதை மதச்சார்பான அல்லது கலாச்சார தேர்வாகக் கருதினாலும், பல்கல்யாணத்தின் பரந்த சமூக விளைவுகள் சமத்துவம், சம்மதம் மற்றும் உணர்ச்சி நலன் ஆகியவற்றை பாதிக்கும்.
ஒருவருக்கு ஒருவர் என்று சொல்லப்படும் காதல் மட்டும்தான் வெகுவாக மக்களிடம் திருமண வாழ்க்கையில் இருக்க வேண்டிய விஷயம். குழந்தைகளை கஷ்டப்படுத்துவது போல ஒரு முடிவுகளை நாம் எப்போதும் எடுக்க கூடாது.
1 கருத்து:
ஒரு தெலுங்கு டப்பிங் படம். விஜய் சூப்பரில் ஓடிக் கொண்டிருந்தது.
நாகர்ஜூனாவுக்கு தகப்பன் மகன் என இரட்டை வேடம், தகப்பன் இறந்துவிட மகனோ வேலை வேலை என இல்லறத்தில் நாட்டமின்றியே இருக்கிறான்.
குடும்பத்தில் சச்சரவு. "இப்பிடி இவ்வளோ பிரச்சனைய விட்டுட்டு எங்கள விட்டுட்டு போயிட்டியே.
நீ இருந்தா எல்லா பிரச்சனையும் தீர்ந்து இருக்குமே!" என்று அம்மா உருக, யமனே மனமிறங்கி நாகர்ஜுனாவை பூமிக்கு அனுப்பி வைக்கிறார்.
பொண்டாட்டி கண்ணுக்கு மட்டும்தான் புருஷர் தெரிவார். அதுவும் பேய் புருஷர்.
மகனுக்கும் மருமகளுக்கும் ஒரு நல்ல இணக்கத்தை உண்டாக்க வேறு வழியில்லாமல் மகனின் உடலுக்குள் புகுந்து மருமகளின் இடுப்பில் மயிலிறகை வைத்து வருடிக் கொண்டிருப்பார், திராட்சை பழத்தை தூக்கி தொப்புளில் போடுவார்.
என்னடா காட்சிகள் ஒருமாதிரி போகிறதே இப்போது யார் சேனலை மாற்றுவது என்று யோசித்தபடியே மகனைப் பார்த்தேன் அவன் என்னைவிட உன்னிப்பாகப் படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
மனைவி வந்தார் : ஹான் ரொம்பச் சௌவுரியம். தகப்பனும் மவனும் ஒரே புள்ளைய சைட் அடிங்கடா, வெளங்கிடும்.
டேய் தகப்பா, இது உனக்கே நியாயமா இருக்கான்னு நெட்ல ஒருத்தர் போட்டு இருக்காரு, தற்குறியை எல்லாம் ஹீரோ கதாப்பாத்திரமா டிசைன் பண்ற ஆளுங்ககிட்ட வேற என்ன மயிரை எதிர்பார்த்து இருக்கனும், சல்லிப்பசங்க.
இடுப்பு நல்லா இருக்குன்னு ஆறுதல் அடைய வேண்டியதுதான்!
கருத்துரையிடுக