செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

THINGS ONLY SELVARAGAVAN FILMS CAPTURE !



மனசு ரெண்டும் பார்க்க 
கண்கள் ரெண்டும் தீண்ட 
உதடு ரெண்டும் உரச 
காதல் வெள்ளம் 
இங்கு பொங்குதே
நரம்பில் ஒரு நதி பாயுதே 
இது என்ன வேட்கை ?

காதல் வலி உடல் காயுதே 
இது என்ன வாழ்க்கை ?
ஒரு பார்வையில்
ஒரு வார்த்தையில் 
ஒரு தீண்டலில் 
நான் மீண்டும் பிறப்பேனே

காதல் சருகான பின்பு 
மோகம் வந்தாலே
சாபம் கண்ணில் 
முள் வைத்து மூடி 
தூங்க சொன்னாலே பாவம்

உன் மார்பில் வழிகின்ற 
நீர் அள்ளி 
மருந்து போல 
குடிப்பேன் 
என் பித்தம் கொஞ்சம்
தணிப்பேன் 
உன் பாத சுவடுக்குள் 
சுருங்கி விழுந்து 
மரிப்பேன்

உடல் சீறுதே 
நிறம் மாறுதே 
வலி ஏறுதே 
இது என்ன கலவரமோ ?

நிலவின் ஒளியில்
அலைகள் எரியுமா 
அலையின் வேதனை 
நிலவு அறியுமா
வேதனைகள் நெஞ்சில் 
சுகமா எங்கும் பரவுதடி

உடலே உடலே
உறைந்து போய்விடு
மனமே மனமே 
இறந்து போய்விடு 
பாதையிலே
சிறு கல்லாய் என்னை
கிடக்க விடு

உன் பார்வையில்
என்னை கொன்றுவிடு
பெண்ணே உன் கூந்தலில்
என்னை புதைத்து விடு
பெண்ணே

உன் பார்வையில்
என்னை கொன்றுவிடு
பெண்ணே உன் கூந்தலில்
என்னை புதைத்து விடு
பெண்ணே

கொல்வதற்கு முன்னே 
ஒரு முத்தமிடு பெண்ணே 
அதை மறக்காதே
ஒரு பார்வையில் 
ஒரு வார்த்தையில் 
ஒரு தீண்டலில் நான் 
மீண்டும் பிறப்பேனே







1 கருத்து:

Love Guru சொன்னது…


சமத்துவம் என்பதே ஆண் பெண் பொருத்த வரை உண்மை இல்லை ...! ஆண் ஒரு விடயத்தை யோசிப்பது போல் பெண் யோசிப்பதில்லை ...! அவங்களுக்கு கடமை பற்றிய நிலைபாடு வேற நம் நிலைபாடு வேற ...! விட்டுக் கொடுப்பதெல்லாம் மிக குறைவாய் ஆதாயம் இருந்தால்தான் ஆண்கள் செய்வார்கள் பெண்களுக்கு விட்டுக் கொடுப்பதே வாழ்வு ...!

ஆண்கள் நேர் கோட்டில் சிந்திப்பவர்கள் பெண்கள் 4 பக்கமும் சிந்திப்பவர்கள் ...! இங்கே சமத்துவமெல்லாம் சரிபட்டு வராது ...! ஒருவரை ஒருவர் எந்த நிலையிலும் மதித்து வாழ்ந்தாலே போதும் ...!

LIFE TALKS - நமது பாரம்பரிய உணவுகளை விட்டுக்கொடுக்கிறோம் !

  இன்றைய அவசர உலகத்தில், மனிதர்கள் தங்களின் தனித்துவமான உணவுப் பாரம்பரியத்தை மிக எளிதாக மறந்து, மேற்கத்திய மற்றும் "நவீன" கலாச்சார...