வெள்ளி, 29 ஆகஸ்ட், 2025

TALKS WITH NTB BLOG - #001




சமூக ஊடகங்களின் வருகையிலிருந்து, பொழுதுபோக்கு காணொளிகள் மூலமாக கிடைக்கும் புகழ் மற்றும் செல்வாக்கு மக்களுக்கு அடிப்படையாக மாறியுள்ளது. 

அவர்களின் இடுகைகளில் நிறைய குரல்கள் வர வேண்டும். நிறைய பேர் தங்களைப் பார்க்க வேண்டும். சோசியல் மீடியா வியூக்கள் மூலம் ஒரு அடையாளம் இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். 

ஆனால் இது  சரியான ஆடுகளம் அல்ல என்று புரிந்துகொள்ள வேண்டும். வழக்கமாக ஒரு கல்லூரியை முடித்து, பட்டதாரி பட்டம் பத்திரத்தை வாங்கும்போது, கிடைக்கும் ​​விஷயம் ஒரு கெளரவமான அடையாளமாகும். 

நீங்கள் இந்த சமூக ஊடகங்களில் அதிகம் பார்க்கப்பட்ட ஒருவாராக இந்த விஷயங்களைப் பொறுத்து நீங்கள் பணம் சம்பாதிக்கிறீர்கள் என்று நீங்கள் நினைக்கலாம். இந்த வகையான விஷயங்கள் உங்களை பணக்காரர்களாக மாற்றப்போகிறது என்றாலும் எப்படி பயன்படுத்துவது என்று ஒரு விஷயமிருக்கிறது

உதாரணத்துக்கு ஒரு கல்லூரி பேராசிரியர் பிசிக்ஸ் கெமிஸ்ட்ரி மற்றும் பயாலஜி போன்றம் கடினமான விஷயங்களை மற்றவர்களுக்கு புரிய கூடிய வகையில் தெளிவான காணொளி காட்சி அமைப்புகளாக சோசியல் மீடியாவில் பதிவு பண்ணுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். 

ஆனால் இந்த மாதிரியான விஷயங்கள் சோசியல் மீடியாக்களில் அதிகம் பேரால் பார்க்கப்படும் அதற்கான சேர்க்கப்படுவது இல்லை.

மாறாக பெண்கள் தவறாக வகையில் பேசுவதையும், பழகுவதையும் தவறான வகையில்.சோசியல் மீடியாவை பயன்படுத்தி லைவ் மூலமாக டொனேஷன் கேட்டு.அதிகமாக சப்ஸ்கிரைபர்களை பெற்று பணம் சம்பாதிக்க முயற்சி செய்வதையும் இந்த காலத்தில் பார்க்க முடிகிறது. இது எவ்வளவு பெரிய கேவலம் தெரியுமா?

சோசியல் மீடியாவில் இந்த மாதிரியான விஷயங்கள் உடனடியாக களைய எடுக்கப்பட வேண்டும். பணம் சம்பாதிப்பதற்காக நிறைய விஷயங்களை பின்பற்றலாம். ஆனால் அதற்காக ரசிகர் மன்றம் என்ற தராதரமற்ற வெப்சைட் போல ஒரு விஷயத்தை சோசியல் மீடியாகளாக இருக்கும் ஃபேஸ்புக் போன்ற விஷயங்கள் பயன்படுத்துவதை எப்பொழுதுமே மக்கள் வன்மையாக கண்டிக்க வேண்டும். 

காரணம் என்னவென்றால் தவறான காணொளிகளை காப்பார்ப்பதற்காக இது போன்ற சோஷியல் மீடியாக்களை பயன்படுத்துவதை வருங்காலத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் ஒரு செயலாக நம்மால் எப்பொழுதுமே சொல்ல இயலாது.


 

கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...