செவ்வாய், 26 ஆகஸ்ட், 2025

GENERAL TALKS - மோசமான இடத்தில் மோசமான ஆட்கள் !




இந்த உலகத்தை பற்றி ஒரு விஷயம் சொல்லவேண்டும் என்றால் ஒரே நபர் அல்லது சிறிய குழுவின் கையில் முழு அதிகாரமும் இருப்பதை மக்கள் எப்போதுமே சப்போர்ட் பண்ண கூடாது, இது ஜனநாயக சுதந்திரங்கள், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை பெரும்பாலும் பாதிக்கிறது. இத்தகைய ஆட்சிகளில் எதிர்ப்பு குரல்கள் அடக்கப்படுகின்றன, ஊடகங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றன, மேலும் பொதுமக்கள் தங்கள் வாழ்க்கையை பாதிக்கும் முடிவுகளில் பங்கேற்க முடியாமல் தவிக்கின்றனர். இந்தக் கட்டுப்பாடற்ற அதிகாரம் ஊழல், மனித உரிமை மீறல்கள் மற்றும் பொதுநலத்திற்குப் பதிலாக தனிப்பட்ட அல்லது அரசியல் நலன்களை முன்னிலைப்படுத்தும் கொள்கைகளுக்கு வழிவகுக்கிறது. கட்டுப்பாடுகள் இல்லாததால், இவ்வகை ஆட்சி புதுமையை அடக்குகிறது, சிறுபான்மையினரின் குரல்களை புறக்கணிக்கிறது, மேலும் பயம் மற்றும் ஒத்திசைவு நிரம்பிய சூழலை உருவாக்குகிறது—இது ஒரு நீதிமிக்க சமத்துவமான சமூகத்தின் அடித்தளத்தையே சிதைக்கும். இது எப்படி மக்கள் ஒரு சாதிக்காக , ஒரு இனத்துக்காக , பணம் கொடுக்கும் போதையில் ஆதரிக்கலாம் ? கவனமாக இருங்கள் மக்களே இப்படிப்பட்ட ஆட்கள் எல்லாம் காலையில் கைகுலுக்கிவிட்டு மாலையில் முதுகில் குத்துபவர்கள் எனவே அதிகாரத்தை மிக கவனமாக நீங்கள் பயன்படுத்த வேண்டும். உங்களை ஆட்சி பண்ணும் ஆட்கள் நல்லவர்களா என்று நீங்கள்தான் கவனித்து பொறுப்பு கொடுக்க வேண்டும் !

1 கருத்து:

குரு சொன்னது…

கோபம் நம்மை தீர்த்துக்கட்டிவிடும் என்று அட்வைஸ் பண்ணுவார்கள் அன்பும் அதையே செய்துவிடும் என்று தெரியாத மானங்கெட்ட ஜென்மங்கள்

- யாரோ

LIFE TALKS - ஒரு இயற்கையான கட்டுப்படுத்தும் முறை ?

  அப்பள சோடா மற்றும் சோடியம் குளோரைடு (சமையல் உப்பு) ஆகிய இரண்டின் கலவையானது, எறும்புகளின் உடலமைப்பு மற்றும் ஈரப்பத ஒழுங்குமுறை அமைப்பைக் கு...