இந்த படத்துடைய கதை - விஜய் சூர்யா (மகேஷ் பாபு) என்பவரை மையமாகக் கொண்டது. அவர் மும்பைக்கு வந்து, அந்த நகரத்தை ஆள வேண்டும் என்ற தீவிர ஆசையுடன் இருக்கிறார்.
அரசியல் முறைகள் ஊழலால் சிதைந்துவிட்டதால், அவர் குற்ற உலகத்தைத் தன் உயர்வுக்கான கருவியாக பயன்படுத்துகிறார். அவரது கடுமையான திட்டங்கள் மற்றும் அச்சமில்லாத அணுகுமுறை விரைவில் அவரை நகரின் சக்திவாய்ந்த மனிதராக மாற்றுகிறது.
இதனால் காவல்துறை மற்றும் எதிரி கும்பல்கள் அவரை கவனிக்கத் தொடங்குகின்றன. சூர்யாவின் பேரரசு வளர்ந்தபோது, அவர் சித்ரா (காஜல் அகர்வால்) என்ற பெண்ணை சந்திக்கிறார். அவர் ஒரு காவல் ஆணையரின் மகள். இவர்களுக்கிடையிலான காதல், கதைக்கு உணர்ச்சி நிறைந்த பரிமாணத்தை தருகிறது.
ஆனால் அதே சமயம், சூர்யாவின் பேராசையை சிக்கலாக்குகிறது. படம் ஒழுக்கம், ஊழல், மற்றும் வணிக குற்றம் இடையே உள்ள மங்கலான கோடுகளை ஆராய்கிறது.
உச்சக்கட்டத்தில், சூர்யாவின் பயணம் ஒரு கும்பல் தலைவனின் உயர்வு மட்டுமல்ல, பேராசை சமூகத்தை எப்படி மாற்றுகிறது என்பதற்கான கூர்மையான கருத்துரையாக வெளிப்படுகிறது.
படத்துடைய கடைசியில் பேராசையும் மோசமான செயல்பாடுகளும் அதிகாரமும் மட்டுமே ஜெயிக்கும் என்று ஒரு கமேர்ஷியல் கதையில் வில்லனை ஹீரோவாக காட்டிய புதுமையான படம். தமிழ் டப்பிங் செம்ம இன்டெரெஸ்ட்டிங்காக இருக்கும், வசனங்கள் புதுமையாக இருக்கும்.
பிசினஸ் மேன் பண்ணுனா நல்லா இருக்குனு சொல்லறீங்க , அனிமல் படத்தை மட்டும் குறை சொல்லறீங்களே என்று நீங்கள் நினைப்பது எனக்கு கேட்கிறது, பொறந்ததுல இருந்து பணக்காரராக இருப்பவர் தப்பு பண்ணுவதும் கஷ்டப்பட்டு முன்னேற நினைத்து தவறு செய்வதும் மாறுபட்டது !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக