வியாழன், 29 ஜனவரி, 2026

GENERAL TALKS - சொந்த சுயநலத்துக்கு முக்கியம் கொடுப்பவர்கள் !

 


ஒரு பெரிய குடும்பத்தில், தந்தை தனது மூன்று மகன்களையும் அழைத்து, “நான் வயதானவன். உங்களுக்குள் யார் உண்மையான குடும்பத்தின் மதிப்பை புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றார். அவர் ஒவ்வொருவருக்கும் ஒரு சிறிய வீடு கட்டும் பொறுப்பை அளித்தார். முதல் மகன், “எனக்கு வேகமாக முடிக்க வேண்டும்” என்று நினைத்து, மலிவு பொருட்களால் வீடு கட்டினான். இரண்டாவது மகன், “அழகாக இருக்க வேண்டும்” என்று நினைத்து, வெளிப்புற அலங்காரத்தில் அதிகம் செலவழித்தான். மூன்றாவது மகன், “நிலையானதாக இருக்க வேண்டும்” என்று நினைத்து, வலுவான அடித்தளத்துடன் வீடு கட்டினான். சில நாட்களில், ஒரு பெரிய புயல் வந்தது. முதல் மகனின் வீடு உடைந்தது; இரண்டாவது மகனின் வீடு அழகாக இருந்தாலும், அடித்தளம் பலவீனமாக இருந்ததால் சிதைந்தது. மூன்றாவது மகனின் வீடு மட்டும் உறுதியாக நின்றது. தந்தை மகிழ்ச்சியடைந்து, “குடும்பம் என்பது அழகோ வேகமோ அல்ல; உறுதியான அடித்தளம் தான். அதுவே உங்களை பாதுகாக்கும்” என்றார். குடும்ப உறவுகள் வலுவாக இருக்க, அடித்தளமாக நம்பிக்கையும் ஒற்றுமையும் வேண்டும். வெளிப்புற அழகு அல்ல, உள்ளார்ந்த உறுதி தான் நிலைத்திருக்கும் - சொந்த விருப்பத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆட்கள் நிலைக்க மாட்டார்கள் ! 

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

ஒரு வழக்கறிஞர் அளித்த பேட்டியை பார்த்தேன்.

"சார், விஜய்யை ஒரு கிறித்துவனாக பார்க்காதீர்கள்.

ஒரு இஸ்லாமியனாக பார்க்காதீர்கள்.

ஒரு இந்துவாக பார்க்காதீர்கள்.

அட, அவனை ஒரு மனுஷனாவே பார்க்காதீர்கள்.

(அடப்பாவி மனுஷா...எதோ சீரியசா சொல்ல வாராருனு ஆர்வமா பார்த்தா பகீர்னு சிரிக்க வெச்சிட்டார்...🤣)

நான் ஏன் இப்படி கடுமையா சொல்றேன்னா, கரூர் சம்பவத்தில் 41 பேர் இறந்துட்டாங்க. இதற்கு யார் வேண்டுமானாலும் காரணமாக இருக்கட்டும். ஆனால், இவர்கள் எல்லாம் இறந்தது விஜய் கூட்டத்தில் தானே? உங்கள் மனது எவ்வளவு பதை பதைக்க வேண்டும்..?

நீங்க கார்ல போறீங்க...சாலையில் ஒருவர் மீது ஏற்றி விடுகிறீர்கள். அவர் ஒரு காலை இழந்து விட்டால், அந்த இழப்பே உங்களுக்கு ஒரு தீராத துன்பத்தை ஏற்படுத்தும் தானே? 'அய்யயோ, நம்மால் ஒருவரின் கால் போய்டுச்சே' என உங்களால் நிம்மதியாக தூங்க முடியுமா..?

இப்படி இருக்கும்போது உங்களை பார்க்க வந்த 41 பேர் இறந்ததை கண்கூட பார்த்துவிட்டு மலேசியாவுக்கு போய் 'தளபதி கச்சேரி' என டான்ஸ் ஆடுறியே...நீ எப்படிடா மனுஷனா இருக்க முடியும்...?

மக்களுக்கு ஏதாவது நன்மை செய்ய வேண்டும் என விஜய்க்கு 1% கூட எண்ணம் இல்லை.

உதாரணத்திற்கு, ஈழத்தமிழர்களுக்கு நிதி வசூல் செய்தபோது, சின்ன சின்ன துணை நடிகர்கள் கூட 5,000, 10,000 ரூபாய் எனக் கொடுத்தார்கள். ஒரு மேக்கப்மேனின் உதவியாளர் கூட 5,000 ரூபாய் கொடுத்தார்.

ஆனால், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கும் இந்த தற்குறி விஜய் வெறும் 500 ரூபாய் தான் கொடுத்தான். இந்த வீடியோ இப்போதும் யூடியூப்பில் இருக்கு.

மக்களுக்காக எல்லாம் இவன் வரவில்லை.

கோடிகளில் புழங்கியாகிவிட்டது. உலக சுகங்களை எல்லாம் அனுபவித்தாகி விட்டது. ரசிகர்கள் மூலம் பெரும் புகழ் கிடைத்து விட்டது.

ஆனால், கிடைக்காத ஒன்றே ஒன்று.

அதிகாரம்.

அதுவும், தலைவா படத்தை ரிலீஸ் பண்ண முடியாமல் கொட நாட்டில் 3 மணி நேரம் கை கட்டி நின்றது விஜய்க்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தி விட்டது. தமிழகம் புகழும் என்னை அடிமையாக நிற்க வைத்த அந்த அதிகாரத்தை அடைய வேண்டும் என்பதற்காக தான் விஜய் அரசியலுக்கே வந்துள்ளார்.

கூடுதலாக,

சினிமாவில் 40 ஆண்டுகள் இருந்த தனக்கு அதிகாரம் கிடைக்கவில்லை. ஆனால், தனக்கு பின்னால் ஓரிரு படங்களில் மட்டும் நடித்த உதயநிதி ஸ்டாலினுக்கு அரசாங்கமே கிடைத்துள்ளது.

இந்த எரிச்சலும் விஜய் அரசியலுக்கு வர காரணமாக அமைந்துவிட்டதே தவிர....மக்களுக்கு நன்மை செய்யும் எண்ணம் விஜய்க்கு எள்ளளுவும் கிடையாது.

100% உண்மை தான் 👌👌👌

CINEMA REVIEW TAMIL - PIRATES OF THE CARIBBEAN 3 - AT WORLDS END - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

POTC : DEAD MAN'S CHEST - பாகத்தின் இறுதியில் ஜாக் ஸ்பேரோ கிராகனால் விழுங்கப்பட்ட பிறகு, வில் டர்னர், எலிசபெத் ஸ்வான் மற்றும் மீண்டும் உ...