எவ்வளவு பாதுகாப்பு கொடுத்தாலும், சக்தியாளர் அதை உடைத்து விடுகிறார். ஒவ்வொரு முறையும் ப்ராஜெக்ட் உடைக்கப்படும் போது மனிதனுக்குள் கோபம் பெருகுகிறது. இந்த கோபம் ஒருநாள் வெளிப்படையாக காட்டப்பட வேண்டும் என்பதே மனிதனின் இயல்பு.
மனிதனின் வாழ்க்கை வெறும் முப்பது ஆயிரம் நாட்களுக்குள் அடங்குகிறது. அந்த குறுகிய காலத்தில் உடல் நலம், மனநிலை, சூழ்நிலை, சுற்றுச்சூழல், வானிலை, பொருளாதாரம், எண்ணங்கள் அனைத்தும் சக்தியாளரின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்படுவது மிகப்பெரிய தவறு.
கனவுகள் என்பது விலைக்கு வாங்கக்கூடிய பொருள் அல்ல. எந்த விலை கொடுத்தாலும், அவற்றை எளிதில் யாருக்கும் கொடுத்து விட முடியாது. அதனால், இந்த ப்ராஜெக்ட் நம் நினைவில் தனிப்பட்டதாகவும், நிறைவேற்றப்பட வேண்டியதாகவும் இருக்கிறது.
நல்ல மனிதர்களை தொழில் வெற்றி அடைய செய்வது பல நேரங்களில் சர்வதேச அளவில் நல்லதைக் கொண்டுவரக்கூடியது. ஆனால் சக்தியாளரின் சொந்த விருப்பு வெறுப்பு காரணமாக, உலகளாவிய முன்னேற்றம் தடுக்கப்படுகிறது. இதனால், நம்மால் விடியலை உருவாக்க முடியாமல் போகிறது.
இந்த நிறுவனத்திற்காக மிகப்பெரிய கஷ்டங்களையும், இழப்புகளையும் அனுபவித்துள்ளோம். ஆனால் அதை விட்டுக் கொடுத்தால், அது நல்லதாக இருக்காது. சக்தியாளர் வழங்கும் திட்டங்கள் நலத்திட்டங்கள் அல்ல; அவை நம்மை சேதப்படுத்தும் பாதிப்புகள் மட்டுமே.
மலைப்பொழிவு முதல் வெயில் காலம் வரை அனைத்தும் மற்றவர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது. ஆனால் மரங்களை காப்பாற்றினால் மட்டுமே உலகம் சிறப்பாக அமையும். சுற்றுச்சூழல் பாதுகாப்பே மனித வாழ்வின் அடிப்படை.
இப்போது இந்த நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரே நபர் நான் மட்டுமே. இருந்தாலும், நிலைமையை மாற்ற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த நிறுவனத்தின் அடிப்படை நோக்கம் போர் மற்றும் அமைதி என்ற இரண்டு விஷயங்களுக்கிடையிலான நுணுக்கமான வேறுபாட்டை கண்டுபிடித்து, மனிதனுக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதே.
இந்த உலகத்தில் அமைதி நிச்சயமாக உருவாகும் மக்களே ! நம்பிக்கையாக செயல்பட வேண்டும் !! நமக்கான ஒரு சரியான நேரம் என்பது கண்டிப்பாக நமக்கு கிடைக்கும் என்று நம்புவோம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக