இப்போது எல்லாம் வாழ்க்கையே போராட்டமாக போகிறது மக்களே, யாராலும் யாரையும் நம்ப முடியாது, எல்லோருமே ஒருவரோடு ஒருவர் சண்டைபோட ஒரு நேரடி காலமாக இந்த காலம் இருக்கிறது, சக்திகள் இருப்பவர்கள் சக்திகள் இல்லாதவர்களை கட்டுப்பட்டுக்குள்ளே கொண்டு வர எல்லைகளை பாராமல் வீதி மீறலாக வேலை செய்கிறார்கள், நமக்குள்ளே ஆழமான நம்பிக்கைகள் இருந்து என்ன பிரயோஜனம், போலிகளுக்கு மட்டுமே இங்கே முக்கியத்துவம் கிடைக்கிறது, உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் செல்லும் இடங்களில் எல்லாம் மற்றவர்களால் துன்பப்படுத்தப்படுகிறார்கள் மக்களே, விரிவற்ற ஒரு குறுகலான பார்வையை மட்டுமே பணம் இல்லாதவர்களால் பார்க்க முடியும், பணம் இருப்பவர்கள் காணும் உலகமே வேறானது, மக்கள் கஷ்டப்படுகிறார்கள், பணம் இருப்பவர்கள் மேல் பொறாமை அடைய கூடாது என்று மக்கள் நினைப்பது சரியானது, இது அதிர்ஷ்ட நோக்கத்தால் உருவாகிறதே தவிர்த்து இந்த இடைவெளி உழைக்கும் மக்களுக்கு தங்களுடைய கனவுகளை தங்களால் அடைய முடியும் என்ற நம்பிக்கையை குறைத்துவிடுகிறதோ என்ற கேள்வியை எழுப்புகிறது, நிறைய கேள்விகளுக்கு பதில்கள் கிடைப்பது இல்லை, காலங்களும் கடந்துகொண்டே இருக்கிறது, நாட்களும் எண்ணப்பட்டுக்கொண்டு இருக்கிறது, நமக்கு தேவையானது சரியான கேள்விகள், சரியான பதில்கள், சரியான முடிவுகள், போலியாக ஒரு சிஸ்டம் இருக்கும்போது அந்த சிஸ்டம் கொடுக்கும் உண்மைத்தன்மை நியாயமற்றது என்றே இருக்கும், உண்மையாக அந்த சிஸ்டம் மாற்றப்பட வேண்டும், சர்வாதிகாரம் என்று இதனை வரையறுக்க முடியாது, சிறப்பான மக்கள் ஆட்சி எப்பொழுதுமே உலகத்துக்கு கேள்வி கேட்க அதிகாரம் வழங்குகிறது, கேள்விகள் கேட்கப்பெறும் நாட்கலாகா மக்களுக்கு நன்மைகள் கிடைக்கிறது, கேள்விகள் ஆராயப்பட வேண்டும், சரியான தீர்வுகள் கொடுக்கபட வேண்டும், வாழ்க்கை கொடுக்கும் இந்த வாய்ப்புகளில் சிக்கலான ஒரு விஷயம் என்று எதை சொல்லலாம் என்றால் நிறைய தேர்வுகளை கடந்து தேர்ச்சி அடைந்த ஒரு அனுபவ முதிர்ச்சி பெறுவதுதான், குழந்தைத்தனம் இந்த விஷயத்தை வழங்காது, இந்த நவீன வாழ்க்கை வேகமானது, இது நடப்பு சாத்தியம் இல்லாத வேகத்தில் மக்களை ஓட சொல்கிறது, என்ன பண்ணுவது என்பதை நாம்தான் முடிவு எடுக்க வேண்டும் !!
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த உங்களின் விருப்பமான தமிழ் கருத்துப்பகிர்வு தளம்! COPYRIGHT © 2023 - 2026 | NICE TAMIL BLOG | ALL RIGHTS RESERVED | DMCA PROTECTED SUPPORT • SHARE • SUBSCRIBE - ENJOY OUR BLOG - DON'T MISS THE ENTERTAINMENT OF READING THE BIGGEST PERSONAL BLOG EVER ! ENGLISH VERSION IS UNDER DEVELOPMENT ! ✔❤ #TAKE-CARE #BE-WELL ! GREETINGS FROM NTB!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
LIEE TALKS - விளையாட்டு முறை கோட்பாடு என்று சொல்லப்படுவது என்ன ?
1. மூலோபாய சார்புநிலை மற்றும் ஆட்டக் கோட்பாட்டின் அடிப்படை (Strategic Interdependence) ஆட்டக் கோட்பாடு (Game Theory) என்பது மூலோபாய ரீதியா...
-
EN-2026/03 The 2010 film Prince of Persia: The Sands of Time follows the journey of Dastan, an orphan in the Persian Empire who is adopt...
-
டிஸ்னி நிறுவனம் தனது ஒட்டுமொத்தப் பூங்காக்கள் மற்றும் அனுபவங்கள் (Experiences) துறையிலிருந்து 2025 ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் $36 பில்ல...
1 கருத்து:
பைனான்ஸ்காரன் பான்பராக் ரவி, பட்டாசு பாலு எல்லாம் வீட்டுக்கு அனுப்பறான், நல்லாதானே இருக்கான், எதுவும் தப்பு இல்லை!
கருத்துரையிடுக