image pending
இங்கே பிரச்சனை என்னவென்றால் கடினமான உழைப்பு மூலமாக மனிதனுக்கு கிடைக்கக்கூடிய தொகை மிகவும் குறைவானது, ஆனால் எடுக்க வேண்டிய ரிஸ்க் என்பது மிகவும் அதிகமானது. இதனால், மற்றவர்களிடமிருந்து நம்முடைய பணத்தை காப்பாற்றுவது மிகப்பெரிய சவாலாகிறது.
நஷ்டத்தில் இருக்கும்போது ஆபரேட்டிங் செலவுகள் என்ற பெயரில் எடுக்கப்படும் தொகையும், நேரடியாக கடையை உடைத்து கொள்ளையடிப்பதும், இரண்டும் ஒரே மாதிரியான கொள்ளைதான். வருத்தமாக இருக்கிறது மக்களே. வரிகளை அதிகமாக செலுத்தினால், அது கூட மறைமுக கொள்ளையாகவே மாறுகிறது. இத்தகைய அடிப்படை விஷயங்களைப் பார்க்கும்போது மனதுக்கு மிகுந்த கஷ்டம் ஏற்படுகிறது.
நேரடியாக கொள்ளையடிப்பவர்கள் பயமுறுத்தி கொண்டாடுகிறார்கள்; மறைமுகமாக அதிகாரம் பெற்றவர்கள் நல்லாட்சியின் பெயரில் அதையே செய்கிறார்கள். இதனால், மூளை சோகம் அடைந்துவிடும் போல தோன்றுகிறது.
இந்த மூளையை கட்டுப்படுத்தும் ஆசை, எல்லாவற்றையும் ஒரு எல்லைக்குள் அடைத்து வைக்க வேண்டும் என்ற சக்தியாளர்களின் நோக்கமாகிறது. போர் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் சூழலில், எந்த வகையிலும் சுதந்திரமாக வாழ்வது கடினமாகிறது.
இப்போது டிஜிட்டல் முன்னேற்றங்கள்தான் மிகவும் சாதாரணமாக மாறிவிட்டது. உண்மையான விஷயங்களுக்கு மதிப்பு குறைந்து, கற்பனையான விஷயங்களுக்கு மட்டும் அதிக மதிப்பு கொடுக்கப்படுகிறது. மக்கள் உண்மையை சேகரிப்பதை மறந்து, கற்பனையைத் தேடி அலைகின்றனர்.
பிரச்சனைகள் இருந்தால், அவற்றை தற்காலிகமாக சரி செய்யலாம்; ஆனால் நிரந்தரமாக நீக்க வேண்டுமெனில், நமது சூழல் முழுவதையும் மாற்ற வேண்டும். இது கடினமான காரியமாக இருந்தாலும், நடக்காத காரியம் கிடையாது.
சக்தியாளர் எப்போதும் தன் செயல்களை கண்காணித்து, ஆதரவு தருபவர்களுக்கு கட்டுப்பாட்டை வழங்குகிறார். அந்த ஆதரவைப் பயன்படுத்தி, குற்றங்களைச் செய்வது சாதாரணமாகி விட்டது. சக்தியாளருக்கு ஆதரவாக இருப்பவர்கள், சமூகத்தில் தவறான செயல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக