செவ்வாய், 9 செப்டம்பர், 2025

MUSIC TALKS - KANMOODI THIRAKKUMPODHU KADAVUL EDHIRE VANDHATHU POLA ADADA EN KAN MUNNADI AVALE VANDHU NINDRAALE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

கண்மூடி 
திறக்கும் போது
கடவுள் 
எதிரே வந்தது 
போல

அடடா 
என் கண் முன்னாடி 
அவளே வந்து நின்றாளே

குடை இல்லா 
நேரம் பார்த்து
கொட்டி போகும் 
மழையை போல

அழகாலே 
என்னை நனைத்து 
இதுதான் காதல் 
என்றாளே !

தெரு முனையை 
தாண்டும் வரையில்
வெறும் நாள்தான் 
என்று இருந்தேன்
தேவதையை 
பார்த்ததும் இன்று
திருநாள் 
என்கின்றேன்

அழகான
விபத்தில் இன்று
ஹையோ நான் 
மாட்டிக்கொண்டேன்
தப்பிக்க 
வழிகள் இருந்தும்
வேண்டாம் என்றேன்

உன் பேரும் தெரியாது
உன் ஊரும் தெரியாது…\
அழகான பறவைக்கு 
பேர் வேண்டுமா

நீ என்னை 
பார்க்காமல்
நான் உன்னை 
பார்கின்றேன்
நதியில் விழும் 
பிம்பத்தை 
நிலா அறியுமா

உயிருக்குள் 
இன்னோர் உயிரை
சுமக்கின்றேன் 
காதல் இதுவா
இதயத்தில் 
மலையின் எடையை
உணர்கின்றேன் 
காதல் இதுவா

வீதி உலா 
நீ வந்தால்
தெருவிளக்கும் 
கண்ணடிக்கும்

வீடு செல்ல 
சூரியனும் 
அடம்புடிக்குமே
நதியோடு 
நீ குளித்தால்
மீனுக்கும் 
காய்ச்சல் வரும்
உன்னை தொட்டு 
பார்க்கதான் 
மழை குதிக்குமே

பூகம்பம் வந்தால் கூட
பதறாத 
நெஞ்சம் எனது
பூ ஒன்று 
மோதியதாலே
பட்டென்று 
சரிந்தது இன்று


கருத்துகள் இல்லை:

கதைகள் பேசலாம் வாங்க - 10

  ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை  கவனித்தத...