(:::[♡]:::) (:::[♡]:::) (:::[♡]:::) (:::[♡]:::) (:::[♡]:::) (:::[♡]:::) (:::[♡]:::)
சமீபத்தில் எனது நண்பர் ஒருவரிடமிருந்து ஒரு உதாரணத்தைக் கண்டேன், அது எதையாவது கற்றுக்கொள்வது எப்படி என்பதை விளக்குவதற்கு மிகவும் உதவியாக இருந்தது. வேலைக்காக அந்த நாட்டின் மொழி பேச தெரியாத போதும் கஷ்டப்பட்டு பயணம் செய்து ஒரு நாட்டிற்குச் செல்லும் ஒரு இளைஞன் அங்கே தன் உடைமைகளை இழந்து, உணவுக்காகப் போராடுகிறான்.
அந்த நேரத்தில், அந்த நாட்டு மொழியில் ஒரு கடையில் ஒரு பலகையில், "இங்கே இலவச உணவு வழங்கப்படும்" என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால். அந்தப் பலகையைப் படிக்க முடியாமல், அவனும் அந்தக் கடையைக் கடந்து செல்கிறான்.
ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வது என்பது உங்களுக்கு இந்த வகையில் தான் மிகவும் அதிகமாக பலனளிக்கும். இப்படிப்பட்ட நேரங்களில்தான் நீங்கள் உங்களுக்கு இந்த மாதிரியான தகவல்கள் தெரிந்திருந்தால் இந்த மாதிரியான செயல்களை நாம் செய்திருக்கலாமே என்று.நடந்து முடிந்த விஷயங்களுக்கெல்லாம் கவலைப்பட்டுக்கொண்டு இருப்பீர்கள்.ஆனால் நீங்கள் சரியான நேரத்தில் சரியான விஷயங்களை கற்றுக்கொண்டு இருந்திருந்தால் உங்களுக்காக இந்த கவலை இருந்திருக்கவே இருந்திருக்காது.
ஆகவே நாட்கள் இது வரை போனது போனதாகவே இருக்கட்டும். இன்று இந்த நொடியிலிருந்து புதிதாக அனைத்தையுமே கற்றுக் கொள்ளுங்கள்.கற்றுக்கொள்வதற்கான நேரம் குறைவாக இருந்தாலும் மற்றவர்கள் கற்றுக் கொள்வதின் மூலமாக சேர்த்த அளவுக்கு செல்வத்தை நீங்களும் சேர்த்து விட்டால் நீங்களும் வெற்றியாளர் தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக