ஞாயிறு, 24 செப்டம்பர், 2023

CINEMA TALKS - THEEYA VELAI SEIYANUM KUMARU - TAMIL REVIEW - திரை விமர்சனம் !!

 



பொதுவாக 2013 களில் வெளிவந்த திரைப்படங்களின் மேல் ஒரு நல்ல அபிப்ராயம் எனக்கு உள்ளது. காரணம் என்னவென்றால் இந்த காலத்தில்தான் நல்ல நகைச்சுவையான கலகலப்பான திரைப்படங்கள் வெளிவந்தன, ஒரு கல் ஒரு கண்ணாடி , பாஸ் என்கிற பாஸ்கரன் என்று சந்தானம் காம்பினேஷன்னில் வந்த நிறைய திரைப்படங்கள் படத்துக்கு ஹிட் கொடுத்தது. பொதுவாக சீனியர் நகைச்சுவை ஆக்டர்கள் மத்தியில் சந்தானம் அவருடைய கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்காத காமெடி டைம்மிங் சந்தானம் அவர்களின் பிளஸ் பாயிண்ட். பொதுவாகவே கலகலப்பான பொழுதுபோக்கு படங்களில் அனுபவமான ரசனையை புரிந்துகொண்ட பிரசன்டேஷன் வேண்டும் எனும்போது இயக்குனர் சுந்தர் சி போல சிறப்பாக யாராலும் கொடுத்துவிட முடியாது. கலகலப்பு , கலகலப்பு 2 , வின்னர் , ஆம்பள போன்ற படங்கள் ஃபெஸ்டிவல் ரிலீஸ் படத்துக்கான எதிர்பார்த்த எண்டர்டெயின்மெண்ட் கொடுப்பதில் குறை வைப்பதே இல்லை. அந்த வகையில் இந்த படமும் நல்ல கமர்ஷியல் எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த காமெடி படம்தான். 

படத்துடைய கதை , இந்த படத்தில் சதீஷ் காதலை சேர்த்து வைப்பதை ஒரு புரஃபஷன்னாகவே பண்ணிக்கொண்டு இருக்கிறார் , நிறைய வருடங்கள் காதலர்களின் பிரச்சனைகளில் அனுபவமுள்ள சதீஷ் அவருடைய உதவி கேட்ட குமாருக்காக பெரிய லெவல் ட்ரைனிங் கொடுத்து சஞ்சனாவை திருமணம் செய்வது வரைக்கும் கொண்டுவந்து கரை சேர்க்கிறார் ஆனால் இதன் பின்னால்தான் கதையில் மிகப்பெரிய டுவிஸ்ட் இருக்கிறது. படம் பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். மற்றப்படி ஒரு கமர்ஷியல் படத்துக்கான அத்தனை விஷயங்களும் இந்த படத்தில் உள்ளது. 

படத்தில் விஷுவல்லாக பார்க்கும்போது எந்த குறையும் இல்லை. ஒளிப்பதிவு வேற லெவல். மியூசிக் கூட சூப்பர்தான். ஆனால் பாராட்டப்பட வேண்டிய விஷயம் சித்தார்த் மற்றும் ஹன்ஸிகாவின் பெர்ஃபார்மன்ஸ். காதலில் எப்போதுமே ஸ்மார்ட்டான சித்தார்த் இந்த படத்தில் ஃபர்ஸ்ட் ஹால்ஃப் மொத்தமுமே காதலுக்காக போராடும் சராசரி ஐடி காதலராக இயல்பான நடிப்பை கொடுத்துள்ளார் என்றால் ஹன்ஸிகா ஒரு ஒரு சின்ன சின்ன எக்ஸபிரசன்ஸ்ஸிலும் பிரகசிக்கிறார். யாராவது காமிரா எக்ஸ்பிரஷன்ஸ்க்கு ரெஃபரென்ஸ் கேட்டால் இந்த படத்தில் இவரின் சஞ்சனா பாத்திரத்தை கண்டிப்பாக எக்ஸாம்பில் சொல்லலாம். மேலும் காதலுக்கு எப்போதுமே சப்போர்ட் பண்ணும் குடும்பம் ஒரு நல்ல கிரேயடிவ் கான்செப்ட் - படத்துக்கு சிம்பிள்ளாக இருந்தாலும் நன்றாக இருக்கிறது. 

மொத்தத்தில் விஷுவல்லாக நல்ல எக்ஸ்பீரியன்ஸ் இந்த படம் எப்போது பார்த்தாலும் உங்களுக்கு கிடைக்கும்.  

1 கருத்து:

Chellam சொன்னது…

கவுண்டமணி - மிஸ்டர் மெட்ராஸ், கர்ணா மாறி சிட்டி சப்ஜெட்ல ஹீரோக்கு ஈக்வலா படங்கள் பண்ணிட்டு இருந்தாரு.

ஆணழகன், எல்லாமே என் ராசாதான், தாய்குலமே தாய்குலமேனு வடிவேலு ஒரு பக்கம் வேகமா காமெடியில் முன்னேறி வந்துட்டு இருந்த சமயம்தான் முறைமாமன் ரிலீஸ் ஆச்சி.

இந்த முதல் படத்திலே சுந்தர் சி -யை ரொம்ப பிடிச்சி போக காரணம் அப்பவே இந்த கதையோட லைவ்லினஸ் அதை மனோரமாவையும் கவுண்டரையும் வெச்சே கொண்டு வந்திருப்பாரு.

அந்த கேரக்டருக்கு அவ்ளோ பொருந்தி போய் இருப்பாரு கவுண்டர். அவரே சிட்டி சப்ஜெட் உள்ளத்தை அள்ளிதா பண்ணும் போதும் கவுண்டர் கேரக்டருக்கு ரொம்ப பொருத்தமா தெரிவாரு.

உதாரணமா மேலே சொன்ன மற்ற படங்கள்ல காமெடி நல்லாவே இருந்தாலும் இவர் படங்கள்ல கௌண்டர் சம்திங் ஸ்பெஷல்தான். மெயின் லீட் காமெடியனை அந்த கேரக்டர் உள்ளே பொருத்தறதுல மனுசன் கில்லாடி.

அதனால தான் இப்பவும் இவர் படங்களோட காமெடி டிராக் மட்டுமில்லாம காமெடியனோட கேரக்டர் பேரும் சேர்ந்து பேசப்படுது.

இன்னொரு விசயம் அவர் கதையில் வரும் மொத்த கேரக்டர்ஸும் ரொம்ப ஹேப்பியா தெரிவாங்க.

அவரோட பெரும்பாலான காட்சிகள்ல நிறைய ஆர்டிஸ்ட்ங்க இருப்பாங்க. அதும் கிளைமாக்ஸ்ல மொத்த கேரக்டர்ஸும் வெச்சி ஒரு சேஸிங் சீன் வெச்சிருப்பாரு அதுதான் அவரோட ஸ்பெஷல்.

கவுண்டர் ஃபீல்ட் அவுட்டு ஆனதும் சத்யராஜ், பிரபுக்கு அப்பறம் ஞாபகம் வந்ததே சுந்தர் சி தான்.

ஆனா கைப்புள்ளையா வடிவேலை வெச்சி வின்னர் பண்ணதே அவரோட ரெண்டாவது இன்னிங்க்ஸ் னுதான் சொல்லனும்.

வடிவேலு சினிமால நடிக்க முடியாத சூழல் வந்ததும். சினிமாவோட கலர் சேஞ்ச் ஆனதும் ஒரே டெம்ப்ளேட்ல படங்கள் பண்ணிட்டு இருந்த இவரும் காணாமதான் போனாரு.

ஆனா நாளைய இயக்குனர்ல பார்த்த ஷார்ட் பிலிம்ஸ் கூடவே இப்ப டிரண்டையும் பிடிச்ச அடுத்தடுத்த ஹிட்கள் மூலம் திரும்ப மூனாவது முறையா பீல்ட்ல நின்னது இயக்குனர்ல சுந்தர்.சி மட்டும்தான்.

கூடவே இப்ப டிரெண்டிங்ல இருக்கும் காமெடியண்ஸை யூஸ் பண்ணிகிட்டாரு.

நாயகனா அவதாரம் எடுத்தப்பவும் ஒன்னு ரெண்டு படங்கள்ல போய்டுவார்னு நம்ம யூகங்களை உடைச்சி நிலைச்சி நிக்கறாரு.

நாம என்னதான் அவரை பேசிகிட்டே இருந்தாலும் இப்பவும் மூக்கித்தி அம்மன் பட வேலைல பிஸியாதான் இருக்காரு. அவர் இருக்கும் வரை இந்த சினிமா அவரை விடாது.

மோகன் பிரபு

GENERAL TALKS - வேலையை முடிக்கும் நவீன மெஷின் ?

இந்த நவீன சிஸ்டம் இயங்குவதே மனிதர்களின் ‘பயத்தையும் ஆசையையும்’ மூலதனமாகக் கொண்டுதான். ஈஸி இஎம்ஐ (EMI), கிரெடிட் கார்டுகள், வீட்டுக் கடன்கள் ...