இந்த படம் 2013 இல் வெளிவந்தது , இந்த படத்துடைய கதை - விஷ்வா இப்போது ஆஸ்ட்ரேலியாவில் தமிழ் பசங்க என்ற நடன அமைப்பாளர்களின் குழுவை அமைத்து அவருடைய நண்பர் லோகுவுடன் அமைதியான வாழ்க்கையில் இருக்கிறார் ஆனால் அவருக்கே தெரியாத விஷயம் என்னவென்றால் அவருடைய அப்பா ராமதுரை இப்போது மும்பையின் ஒரு பகுதியில் CORRUPT ஆன ஆட்சியில் இருந்து மக்களை பாதுகாப்பாக காப்பாற்றிக்கொண்டு இருக்கிறார் என்பதுதான். விஷ்வா காதலிக்கும் பெண்ணான மீரா ஒரு காவல் துறை சிறப்பு அதிகாரி என்று தெரியாமல் ராமதுரையை சந்திக்க அழைத்து செல்லும்போது அவரை அரெஸ்ட் பண்ண காரணமாக விஷ்வாவே மாறுகிறார். இந்த நிலையில் வில்லன்களால் அவருடைய அப்பா கொல்லப்படவும் விஷ்வா எப்படி மக்களை காப்பாற்றுகிறார் , பிரச்சனைகளில் இருந்து வெளியை வருகிறார் என்பதே இந்த படத்தின் கதை. காமிரா வொர்க் எந்த பிரச்சனையும் இல்லை. ஒரு கமர்ஷியல் பாயிண்ட் ஆஃப் வியூவில் பார்த்தால் கதை ஒரு அளவுக்கு 2000 ஸ்களின் காலகட்டத்தில் இருப்பதை புரிந்துகொள்ள முடியும் ஆனால் விஷுவல்லாக எந்த குறையும் இல்லை. யார் இந்த சாலை ஓரம் பூக்கள் வைத்தது பாடல் முதல் ஒரு மஞ்சள் மேகம் வந்து நெஞ்சில் மோதியதும் பாடல் வரைக்கும் ஒரு நல்ல சவுண்ட் டிராக் என்பதில் பிரச்சனை இல்லை. கிளைமாக்ஸ் போர்ஷன் இன்னும் கிராண்ட்டாக இருந்திருக்கலாம் , மற்றபடி அழகாக எடுக்கப்பட்ட அந்த ரொமான்டிக் டான்ஸ் காட்சிகள் மற்றும் சந்தானத்தின் டைமிங் காமிக் டயலாக்ஸ் படத்துக்கு பிளஸ் பாயிண்ட். ஆனால் கதை கொஞ்சம் அவுட் டேட்டட் என்பதை மறுக்க முடியாது. குறிப்பாக கிளைமாக்ஸ் ஃபைட் இன்னும் கிராண்ட்டாக இருந்து இருக்கலாம். மொத்தத்தில் ஒரு டீசண்ட் எண்டர்டெயின்மெண்ட். ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
SIMPLE TALKS - உலகத்தின் வேகத்தை பார்த்து மன அழுத்தம் எதற்கு ?
நம்முடைய வாழ்க்கையில் எத்தனை இயந்திரங்களை வைத்திருந்தாலும் தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம், வாகனம் அவற்றை நாம் எப்போதும் நம்முடைய வேகத்துக்...
-
ஒரு காலத்தில், அமைதியான கிராமத்தில் உழைப்பாளியான விவசாயியும், அன்பான மனைவியும் வாழ்ந்து வந்தனர். அவர்கள் சிறிய நிலப்பரப்பை மட்டுமே வைத்திர...
-
பெரிய ஹோட்டல் முழுவதும் பரபரப்பாக இருந்தது. மேல் தொங்கியிருந்த விளக்குகள் பிரகாசித்தன, பணியாளர்கள் விரைந்து ஓடினார்கள், சுவையான உணவின் மணம...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக