பெற்றோர்களின் எதிர்ப்புகளையும், சமூகத்தின் கட்டுப்பாடுகளையும் கடந்து காதல் என்பது மனித வாழ்க்கையில் ஏன் இவ்வளவு தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
சமூகம் எப்போதும் ஒரு பாதுகாப்பான, ஏற்கனவே வகுக்கப்பட்ட பாதையை எதிர்பார்க்கிறது; ஆனால் காதல் என்பது மனங்களின் இயல்பான ஈர்ப்பு!
பல நேரங்களில், திருமணத்திற்கு முன்னால் வரும் காதல் என்பது வெறும் ஈர்ப்பாகவும் அல்லது சூழ்நிலை காரணமாகத் தோல்வியிலும் முடிந்துவிடக்கூடும். ஆனால், அதோடு காதல் என்ற உணர்வு ஒருவருக்குள் முடிந்துவிடுவதில்லை. காதலிப்பவர்களும் காதலை தவிர்த்து விடுவது இல்லை.
திருமணத்திற்குப் பிறகு, இரண்டு மனிதர்கள் ஒரே கூரையின் கீழ் வாழத் தொடங்கும்போது, அங்கு சினிமாத்தனமான காதல் மறைந்து, எதார்த்தமான காதல் பிறக்கிறது. ஒருவருடைய நிறைகுறைகளை நேரடியாகப் பார்த்து, அதை ஏற்கும் முதிர்ச்சி அங்குதான் உருவாகிறது.
திருமணத்திற்கு முன்னால் காதலில் தோற்றவர்கள், தங்களின் முந்தைய தவறுகளில் இருந்து பாடம் கற்றிருப்பார்கள். எனவே, தங்களின் தற்போதைய வாழ்க்கைத்துணையிடம் எப்படி அன்பாக இருக்க வேண்டும்,
எந்தெந்த விஷயங்களை விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதை அவர்கள் நன்றாக அறிந்திருப்பார்கள். இது அவர்களின் திருமண வாழ்க்கையை அதிக வெற்றியடையச் செய்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக