செவ்வாய், 2 ஜூன், 2026

OUR LIFE IN THE PAGES OF TAMIL BLOG (TAMIL) - #2 - சிறப்பான கருத்துக்கள்

 



நம் மூளையின் அடுத்த ஒரு உச்சக்கட்ட கொடுமை முக்கியமான ஒரு வேலையைத் தள்ளிப்போடும் சாக்கில் (Procrastination), அதுவரை நாம் கண்டுகொள்ளாத உலகத்தின் மற்ற எல்லா வேலைகளையும் மிகத் தீவிரமாகச் செய்து முடிப்பது! செய்ய வேண்டிய மெயின் வேலை அங்கே மலை போலக் காத்திருக்கும். ஆனால், நம் மனது அதைத் தவிர்ப்பதற்காக நமக்குள் ஒரு 'அதிசய உழைப்பாளியை' திடீரென்று அவிழ்த்து விட்டுவிடும். 

நாளைக்கு ஒரு முக்கியமான தேர்வு இருக்கும் அல்லது ஆபீஸில் ஒரு பெரிய பிரசென்டேஷன் சப்மிட் செய்ய வேண்டியிருக்கும். அதைச் செய்ய லேப்டாப்பைத் திறந்தால், மூளைக்குத் திடீரென்று நம் அறையின் மீது அளவு கடந்த பாசம் வந்துவிடும். "முதல்ல இந்த மேஜையைச் சுத்தம் பண்ணு, அப்பதான் போக்கஸ் வரும்" என்று ஆரம்பித்து, கடந்த ஐந்து வருடங்களாகத் தொடாத அலமாரியைத் துடைத்து, துணிகளை மடித்து, அறையையே மிகச் சுத்தமாக மாற்றிவிடுவோம். ஆனால் நிரந்தரமாக நம்மால் வெற்றியை பெற முடியுமா என்றால் அது சந்தேகமானது !

மெயின் வேலையைத் தவிர்த்துவிட்டு, போனில் ஏதோ ஒரு அவசியமில்லாத தகவலைத் தேட ஆரம்பிப்போம். "பசிபிக் பெருங்கடலின் ஆழம் எவ்வளவு?", "பூனைகள் ஏன் இரவில் கத்துகின்றன?", "2011-ல் உலகக் கோப்பையின் போது சச்சின் என்ன பேட் பயன்படுத்தினார்?" என்றெல்லாம் தேடி, சம்பந்தமே இல்லாத ஒரு விஷயத்தில் பிஎச்டி (PhD) பண்ணிக் கொண்டிருப்போம். ப்ரோக்ராஸ்டினேஷன் ஒரு தாறு மாறாக வேலை செய்ய வைக்கும் ஒரு நோய் என்றே சொல்லலாம் 

இன்னும் டைம் இருக்கே, சாயங்காலம் பாத்துக்கலாம்" என்று தள்ளிப்போடப்பட்ட அந்த முதன்மை வேலை, சரியாக 'டெட்லைன்' (Deadline) நெருங்கும்போது நம் தொண்டைக்குழிக்கு வந்துவிடும். கடைசி ஒரு மணி நேரத்தில், அதுவரை வராத ஒரு அமானுஷ்ய வேகம் நமக்குள் பிறக்கும். கம்ப்யூட்டர் கீபோர்டை தேய்ந்துபோகும் அளவுக்குத் தட்டி, எப்படியோ அந்த வேலையை அரைகுறையாக முடித்து 'அப்பாடா' என்று பெருமூச்சு விடுவோம். அப்போது மனது, "பார்த்தியா... நான் கடைசியில முடிச்சுட்டேன்ல!" என்று காலரைத் தூக்கிக் கொள்ளும் (முன்பே செய்திருந்தால் நிம்மதியாகச் செய்திருக்கலாம் என்பதை அது வசதியாக மறந்துவிடும்

இது வெறும் சோம்பேறித்தனம் இல்லை. உளவியலில் இதற்குப் பெயர் 'உற்பத்தித் திறன் கொண்ட தள்ளிப்போடுதல்' (Productive Procrastination). நமக்குக் கடினமாக அல்லது சலிப்பாகத் தோன்றும் ஒரு பெரிய வேலையை எதிர்கொள்ள நம் மனம் பயப்படுகிறது. அந்தப் பயத்தில் இருந்து தப்பிக்க, மூளை ஒரு தந்திரம் செய்கிறது

அறையைச் சுத்தம் செய்வது போன்ற எளிய வேலைகளைச் செய்யும்போது நமக்கு உடனடியாக ஒரு 'வெற்றி' உணர்வு (Sense of achievement) கிடைக்கிறது. "நான் சும்மா டைம் வேஸ்ட் பண்ணல, ஏதோ ஒரு வேலை தான் செஞ்சுகிட்டு இருக்கேன்" என்று நமக்கு நாமே ஒரு போலித் திருப்தியைத் தந்து, குற்ற உணர்ச்சியில் இருந்து தப்பித்துக் கொள்ள நம் மூளை நடத்தும் ஒரு தற்காப்பு நாடகம் தான் இது!


கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - வேலையை முடிக்கும் நவீன மெஷின் ?

இந்த நவீன சிஸ்டம் இயங்குவதே மனிதர்களின் ‘பயத்தையும் ஆசையையும்’ மூலதனமாகக் கொண்டுதான். ஈஸி இஎம்ஐ (EMI), கிரெடிட் கார்டுகள், வீட்டுக் கடன்கள் ...