கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன் துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்
சின்ன மானே மாங்குயிலே உன் மனசுல என்ன குறை ?
பெத்த ஆத்தா போல் இருப்பேன் இந்த பூமியில் வாழும் வரை !
எட்டு திசை யாவும் கட்டி அரசாள வந்த ராசா நீதானே !
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன் ? துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன் ?
பத்து மாசம் மடியேந்தி பெத்தெடுத்த மகராசி
எட்டு திசை யாவும் கட்டி அரசாள வந்த ராசா நீதானே !
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன் ? துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன் ?
பத்து மாசம் மடியேந்தி பெத்தெடுத்த மகராசி
பச்சபுள்ள உன்னவிட்டு போனதென்னி அழுதாயா
மாமன் வந்து என்னை காக்க நானும் வந்து உன்னை தாக்க
நாம் விரும்பும் இன்பம் எல்லாம் நாளை வரும் நமக்காக
காலம் உள்ள காலம் வாழும் இந்த பாசம்
மாமன் வந்து என்னை காக்க நானும் வந்து உன்னை தாக்க
நாம் விரும்பும் இன்பம் எல்லாம் நாளை வரும் நமக்காக
காலம் உள்ள காலம் வாழும் இந்த பாசம்
பூ விழி இமை மூடியே சின்ன பூவே கண்ணுறங்கு
கருப்பு நிலா நீதான் கலங்குவதேன் துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன் ?
கருப்பு நிலா நீதான் கலங்குவதேன் துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன் ?
வண்ண வண்ண முகம் காட்டி வானவில்லின் நிறம் காட்டி
சின்ன சின்ன மழலை பேசி சித்திரம் போல் மகனே வா
செம்பருத்தி மலர் போலே சொக்க வெள்ளிமணி போலே
செம்பருத்தி மலர் போலே சொக்க வெள்ளிமணி போலே
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன கண்மணியே மடிமேல் வா
பாட்டு தமிழ் பாட்டு பாட அத கேட்டு ஆடிடும் விளையாடிடும் தங்கத்தேரே நீதானே
பாட்டு தமிழ் பாட்டு பாட அத கேட்டு ஆடிடும் விளையாடிடும் தங்கத்தேரே நீதானே
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன் துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன்
சின்ன மானே மாங்குயிலே உன் மனசுல என்ன குறை ?
பெத்த ஆத்தா போல் இருப்பேன் இந்த பூமியில் வாழும் வரை !
எட்டு திசை யாவும் கட்டி அரசாள வந்த ராசா நீதானே !
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன் ? துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன் ?
எட்டு திசை யாவும் கட்டி அரசாள வந்த ராசா நீதானே !
கருப்பு நிலா நீதான் கலங்குவது ஏன் ? துளி துளியாய் கண்ணீர் விழுவது ஏன் ?

2 கருத்துகள்:
VIJAYAKANTH ANNEN VILUDHUGAL 💖💖💖
ஜனநாயகன் திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்படாதது கண்டிக்கத்தக்கது. ஆனால் அதற்கெதிராக திரையுலகத்திலிருந்து யாரும் திறந்தவெளியில் குரல் கொடுக்கவில்லை என்பதே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், ரஜினி, அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன் உள்ளிட்டோர், கடந்த காலங்களில் சினிமா சார்ந்த முக்கிய பிரச்சனைகளில் உறுதியான நிலைப்பாடு எடுத்ததோ, அல்லது தங்கள் ரசிகர்கள் சமூகங்களில் ஏற்படுத்தும் தாக்கங்களை கட்டுப்படுத்தியதோ இல்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில், இவர்களின் குடும்பங்களைத் தாண்டியும் விமர்சனங்கள், அவமதிப்புகள் பரவியபோதும், அந்த அபியூசிவ் கலாச்சாரத்திற்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே ரசிகர் கூட்டமே இன்று “யாரும் குரல் கொடுக்கவில்லை” என விமர்சிக்கிறது என்பது வேதனையையும், இரட்டை நிலைப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.
இந்நிலையில், திரையுலகமே ஒருவரை குறிவைத்து நன்றி கெட்டதுபோல் விமர்சிக்கிறது. முதலில் நாம் யாருக்கு துணை நின்றோம் என்பதை சிந்திக்க வேண்டும்; பின்னர் நமக்காக யார் துணை நின்றார்கள் என்பதை புரிந்துகொள்ளலாம். விஜய் ஆதரவு என்பதால் மற்ற நடிகர்களையும் அவர்களின் படங்களையும் மற்ற ரசிகர் அனைவரையும் தொடர்ந்து விமர்சித்து, அவமதித்து வந்தவர்கள் இந்த தற்குறி விஜய் ரசிகர் பட்டாளம் , தாங்கள் பிரச்சனைக்கு உள்ளாகும் போது மட்டும் அனைவரும் தங்களை ஆதரிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமற்றது. உண்மையில், இந்நிலையில் “யாரு ஆதரவு செய்வார்கள் ??” என்பதே பலரின் மனதில் எழும் கேள்வியாக இருக்கிறது.
கருத்துரையிடுக