இன்னைக்கு நான் ஒரு முக்கியமான விஷயத்தை புரிந்துகொண்டேன் என்னுடைய அன்பு அவ்வளவு உண்மையாக இருந்தாலும் மூளையில் அறிவு குறைந்துகொண்டு இருக்கிறது, தெளிவாக புரிவது என்னவென்றால் இந்த காலத்தை வைத்து சக்தியாளர் என்னுடைய வாழ்க்கையிலும் உன்னுடைய வாழ்க்கையிலும் நன்றாக பேஸ்கட் பால் விளையாடுகிறார். இதுதான் நாம் இருவரும் சாகவேண்டும் என்று போராடுவதற்காக இருக்கும் காரணம். உன்னை நான் கடவுள் கேட்டாலும் விட்டுக்கொடுக்க மாட்டேன் ! நாம் சேர்ந்து வாழும் வாழ்க்கை வரலாற்றில் இடம்பெற நான் ஆசைபட்டேனா ? கொஞ்சம் உணவு , கொஞ்சம் தூக்கம், நிறைய பேச்சுகள் என்று சாதாரண வாழ்க்கைதானே ஆசைபட்டேன். ஆனால் கடவுள் இன்று தவறு செய்கிறார், உன்னையும் என்னையும் வேண்டுமென்றே பிரித்து நச்சு கொடுத்து வாழ்க்கையில் நமக்கு உடல் அளவிலும் மன அளவிலும் கடினங்களை கொடுத்து அணு அணுவாக நம்மை துன்பப்பட வைத்து ரசிக்க வைக்கிறார். இந்த போரில் நான் கடவுளை வெற்றி அடைந்தால் மட்டுமே உன்னை அடைய முடியும். அப்படி வெற்றி அடைந்தால் கிடைக்கும் பலன்கள் கொஞ்சமே என்றே அவர் உன்னையும் என்னையும் மனதளவில் நம்ப வைப்பார். ஆனால் மாயங்கள் ஏதுவாக இருந்தாலும் நம்ப கூடாது. இங்கே நாம் இரண்டு பேர் மட்டுமே கடவுளை விட மேலானவர்கள். வேறு யாருமே கிடையாது, நாம் குழந்தைகளும் கடவுளை விட மேலானவர்களாக கருதுகிறோம் இதுதான் நம்முடைய மனிதத்தன்மை நமக்கு சொல்கிறது. பிரிவினை பிரித்து மக்களை பார்க்க வேண்டும் என்று கடவுளே சொன்னாலும் நம்மால் மாற முடியாது. காரணம் என்னவென்றால் நாம் கடவுளின் சோதனை எலிகள். சோதனையில் வெற்றி அடைந்த சோதனை எலிகள். மேலான சக்திகள் நம்மிடம் உள்ளது. எப்படியாவது அந்த மாய சக்திகளை பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும், நம்மை பிரிக்க எந்த காரணிகள் வந்தாலும் அனைத்தையும் கொல்ல வேண்டும். நாம் சோதனை எலிகள் என்பதை மறவாதே, உன்னை பிரிந்து இருக்கும் வருத்தத்துடன். காதலன். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அதில் இருந்து கிடைத்த அனுபவங்களை கொண்டு இந்த வலைப்பூவில் பதிவு செய்ய விரும்புகிறேன். கனவு நிறுவனம் - ஒரு சொந்த கம்பெனி ஆரம்பிக்க வேண்டும். இந்த வார்த்தைகளை எல்லாம் சொல்லறதுக்கே நல்லா இருக்கு இல்லையா ? - ஆனா நீங்க ஒரு விஷயம் புரிந்துகொள்ள வேண்டும் . அதிகமாக திரைப்படங்கள் பார்ப்பது இல்லை. தொலைக்காட்சி சீரியல்கள் பார்ப்பதில்லை. பொழுதுபோக்கு என்று நேரத்தை அதிகமாக செலவு செய்வது இல்லை. இவ்வளவு ஏன் ? யாராவது மனது கஷ்டப்படும்படி பேசக்கூடாது என்று கடினமான வார்த்தைகளை கூட பயன்படுத்துவது இல்லை. இத்தனை விஷயங்கள் செய்தாலும் நான் தோற்றுக்கொண்டு இருந்தால் தவறு என் மேலே இல்லை என்று என்னால் தெரிந்துகொள்ள முடியாதா என்ன ?
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
MUSIC TALKS - MUDHAL NAAL INDRU EDHUVO ONDRU VERAAGA ENNAI MAATALAAM ANGANGU ANAL YETRALAAM - TAMIL SONG LYRICS ! - VERA LEVEL PAATU !
முதல் நாள் இன்று எதுவோ ஒன்று வேறாக உனை மாற்றலாம் அங்கங்கு அனல் ஏற்றலாம் என் உள்ளம் பாடுகின்றது யார் சொல்லி கற்று கொண்டது நில் என்றால் சட்ட...
-
காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை தீயின் குடுவையில் அடைத்தாள் கண்ணை கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள் இளமை என்னும் கருவறை எங்கு...
-
தேன் பூவே பூவே வா தென்றல் தேட பூந்தேனே தேனே வா தாகம் கூட நான் சொல்லும் கானம் நீ தந்த தானம் நான் சொல்லும் கானம் நீ தந்த தானம் நூறு ராகம் நெஞ...
No comments:
Post a Comment