இந்த காலத்தில் வியாபார விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும் கண்டிப்பாக இருக்க வேண்டும் இல்லை என்றால் ஏமாற்ற எல்லோரும் காத்துக்கொண்டு இருக்கின்றார்கள். ஒரு கிராமத்தில் நமது கதாநாயகர் நல்ல நீர்வளம் நிறைந்த கிணறு ஒன்றை விலைக்கு வாங்கினார். மறுநாள் கடைத்தெருவில் நமது கதாநாயகர் நடந்து போய்க் கொண்டிருந்த போது கிணறு விற்ற நபர் அவரை சந்தித்தார். "அப்பவே சொல்ல மறந்துட்டேன். இப்ப உங்களை பார்த்த உடனே நினைவுக்கு வந்தது. நான் உங்களுக்கு விற்றது கிணத்தை மட்டும்தான். அதில் இருக்கும் தண்ணீரை அல்ல. ஆகையினால் அந்த தண்ணீரை நீங்கள் பயன்படுத்த வேண்டுமானால் மாதா மாதம் அதற்கு எனக்கு கட்டணம் செலுத்த வேண்டியது வரும். அதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்" என்றார். அப்ப நம்மாளு தயங்காமல் "நேத்து நானே உங்க கிட்ட சொல்லனும்னு இருந்தேன். நாம்ப இன்னிக்கு நேர்ல பார்த்தது நல்லதா போச்சு. எனக்கு கிணறு மட்டுமே போதும். அதில் இருக்கும் உங்கள் தண்ணீர் எனக்கு வேண்டாம். ஒன்று, நீங்கள் அதிலிருக்கும் தண்ணீரை காலி பண்ணி வெத்து கிணறை எனக்கு கொடுங்கள். இல்லையென்றால் எனக்கு சொந்தமான இடத்தில் தண்ணீரை வைத்திருப்பதற்காக நீங்கள் மாத வாடகை செலுத்த வேண்டி இருக்கும்" என்று சொன்னார் ! குறிப்பிட்ட நபர்களிடம் இப்படித்தான் பேச வேண்டும் இல்லையென்றால் அவர்களுடைய சுய நலத்துக்கு நம்மை பயன்படுத்திக்கொள்ள பார்ப்பார்கள் !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
SIMPLE TALKS - உலகத்தின் வேகத்தை பார்த்து மன அழுத்தம் எதற்கு ?
நம்முடைய வாழ்க்கையில் எத்தனை இயந்திரங்களை வைத்திருந்தாலும் தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம், வாகனம் அவற்றை நாம் எப்போதும் நம்முடைய வேகத்துக்...
-
பெரிய ஹோட்டல் முழுவதும் பரபரப்பாக இருந்தது. மேல் தொங்கியிருந்த விளக்குகள் பிரகாசித்தன, பணியாளர்கள் விரைந்து ஓடினார்கள், சுவையான உணவின் மணம...
-
ஒரு சிறிய கிராமத்தில், ஒரு மீனவர் தினமும் கடலுக்குச் சென்று மீன் பிடிப்பான். அவன் எப்போதும் கடலை “என் வாழ்வாதாரம்” என்று மதித்தான். ஆனால் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக