சனி, 31 ஆகஸ்ட், 2024

CINEMA TALKS - JOSEE - THE TIGER AND THE FISH - திரை விமர்சனம் !

 



வாழ்க்கையில் நீங்கள் நிறைய நல்ல படங்களை பார்த்து இருக்கலாம். இந்த படங்கள் உங்களுக்கு நிறைய கருத்துக்களை சொல்லியிருக்கலாம். இந்த வகையில் சேர்க்க வேண்டிய முக்கியமான ஒரு படம்தான் ஜோஷி - டைகர் அண்ட் ஃபிஷ். இந்த படத்துடைய கதை. கதாநாயகி ஜோஷி நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருக்கிறாள். இருந்தாலும் சிறப்பாக வரையும் திறன்களை கொண்டு இருப்பதால் எப்படியாவது சம்பாதித்து உலகத்தை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசையோடு இருக்கிறாள். இப்போது நம்முடைய கதாநாயகிக்கு கிடைக்கும் தோழனாக வரும் நம்முடைய கதாநாயகன் சுனியோ எப்படி சுதந்திரமான உலகத்தை சுற்றி வர உதவுகிறார் என்பதையும் மேலும் பின்னாட்களில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் சேர்ந்து சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக்கொள்வதும் படத்துடைய கதை. இந்த படம் கண்டிப்பாக மிகவும் மோட்டிவேஷன் நிறைந்த படம். வாழ்க்கையில் நீங்கள் உடைந்துபோனால் இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள் உங்களுக்கு கண்டிப்பாக அடுத்த கட்ட குறிக்கோள் கிடைக்கும். இந்த படம் ஒரு அனிமேஷன் திரைப்படம் என்றாலும் மிகவும் எண்டர்டெயின்மெண்ட்டாக ஸ்டோரியை மட்டுமே ஃபோகஸ் பண்ணி நகராமல் திரைக்கதையில் வேகமாக நகர்த்தி இருக்கிறார்கள். காட்சிகள் துரிதமாக நகர்கிறது. ப்ரொடக்ஷன் டிசைன் பிரமாதம். இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால் ஆர்ட் பிலிம் ஸ்டைல்லில் ஒரு நல்ல கம்மெர்ஷியல் ரொமான்ஸ் பிலிம் இந்த திரைப்படம். கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பாருங்கள். 

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

ஒன்றாக வாழ்வதற்காக, நன்றாக வாழ்வதற்காக, அமைதியாக, இன்பமாக வாழ்வதற்காகப் படைக்கப்பட்டவை தான் உயிர்களே தவிர, கொள்கையின் பெயரிலோ, கோட் பாடுகளின் பெயரிலோ, சமயங்களின் பெயரிலோ ஒருவரை ஒருவர் கொலை செய்து கொள்வதற்காகவும், இழிவுபடுத்துவதற்காகவும் படைப்பாற்றல் படைக்கவில்லை. குறிப்பிட்ட காரணங்களுக்காக சக மனிதரைக் கொலை செய்வதுதான் தன் நோக்கம் என்று ஒருவர் சொன்னால் அவர் எந்த மதச்சின்னத்தை அணிந்திருந்தாலும் அவர் ஒரு நாத்திகர், அவர் கடவுள் மறுப்பாளர்தான். ஒருவர் கடவுள் மறுப்பாளராக இருந்து கொண்டு சக மனிதர் மீது அன்பு செலுத்தினால் அவர் உண்மையான இறை யியலாளர். அவர்தான் உண்மையிலேயே கருவை உணர்ந் தவர். பெயரில் அல்ல நடந்து கொள்ளும் பக்குவத்தில் இருக்கிறது வாழ்க்கை.

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...