ஞாயிறு, 14 ஜூலை, 2024

MUSIC TALKS - KANNAMMA KANNAMMA MEENU VAANGA POVOMAA ? MEENU VAANGA POVOMA BEACH-KU THAAN POVOMAA ? - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAAATU !



கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போலாமா 
மீனு வாங்க போலாமா பீச்சுக்குதான் போலாமா
சொல்லம்மா சொல்லம்மா என்ன வேணும் சொல்லம்மா 
அத்தைம்மா அத்தைம்மா பெத்த பொண்ணு முத்தம்மா
வாடி பொட்ட புள்ள வளைஞ்சு நெளிஞ்சு போற புள்ள 
கண்ணடிச்சு பார்த்தாலும் கெண்டை கலை ஹோய்
மாமன் இங்கருக்கான் நீ எங்க போற புள்ள 
சொன்னா நான் வார்றேன் பின்னால
கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போலாமா 
மீனு வாங்க போலாமா பீச்சுக்குதான் போலாமா
சொல்லம்மா சொல்லம்மா என்ன வேணும் சொல்லம்மா 
அத்தைம்மா அத்தைம்மா பெத்த பொண்ணு முத்தம்மா


குறும்பாடா நான் இருந்தேன் உப்பு கண்டம் போட்டுட்டியே
வாலை மீனா நான் இருந்தேன் கருவாடா ஆக்கிட்டியே
ஆசை வந்தா ஆளை உருக்கும் களவு போய்விடும் கண் தூக்கம்
கோழி முழிச்சு கூவுற வரைக்கும் மெத்தை மேலே முள் குத்தும்
அய்யயோ கண்ணம்மா உன்னைத்தான் அள்ளட்டா
அப்பப்பா அள்ளிக்கோ ஆசையா ? கிள்ளிக்கோ

கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போலாமா 
மீனு வாங்க போலாமா பீச்சுக்குதான் போலாமா
சொல்லம்மா சொல்லம்மா என்ன வேணும் சொல்லம்மா 
அத்தைம்மா அத்தைம்மா பெத்த பொண்ணு முத்தம்மா

உன் கற்பு போகும்படி இப்போ என்ன ஆயிடுச்சு
உன் கண்ணை பார்க்கையிலே என் கற்பு போயிடுச்சு
நடையா நடந்து தேஞ்சது செருப்பா என்னை விட்டா வேறாரு
வீட்டு பக்கம் வரியே பாரு பேசுறாங்க ஊராரு
கந்தகம் ஊத்தாதே உடம்புக்குள் ஊறுமா
அய்யய்யோ வெண்ணிலா வெயிலால் மாறுமா

மாமா மாமா மீனு வாங்க போலாமா 
மீனு வாங்க போலாமா பீச்சுக்கு தான் போலாமா
சொல்லுமா சொல்லுமா என்ன வேணும் சொல்லுமா
அத்தைம்மா அத்தைம்மா நான் அத்தை பெத்த முத்தம்மா
வாடி பொட்ட புள்ள வளைஞ்சு நெளிஞ்சு போற புள்ள 
கண்ணடிச்சு பார்த்தாலும் கெண்டை கலை ஹோய்
மாமன் இங்கருக்கான் நீ எங்க போற புள்ள 
சொன்னா நான் வார்றேன் பின்னால
கண்ணம்மா கண்ணம்மா மீனு வாங்க போலாமா 
மீனு வாங்க போலாமா பீச்சுக்குதான் போலாமா
சொல்லம்மா சொல்லம்மா என்ன வேணும் சொல்லம்மா 
அத்தைம்மா அத்தைம்மா பெத்த பொண்ணு முத்தம்மா

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

செம்ம பாட்டு

பெயரில்லா சொன்னது…

செல்போனை ஆப் பண்ணலாமா?
ஒரு பக்கக் கதை.

மாலை ரிசப்ஷன்.

முற்பகல் 11 மணி முதலே வெளியூர் உறவினர்கள் வரத் தொடங்கி விட்டார்கள்.

நான்கு மணிக்கெல்லாம் கல்யாண மண்டபம் களை கட்டி விட்டது.

ஆறு மணிக்கு நிச்சயதார்த்தம் மண்டபம் நிறைந்து இருந்தது.

மணமகனும் மணமகளும் முழுக்க முழுக்க திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களிடமும் நண்பர்களிடமும் முழுமையாகப் பேசிப் பழகினார்கள்.

ஒவ்வொருவரையும் விருந்து உபசரித்தார்கள்.

அவ்வப்போது நாதஸ்வர இசையை ரசித்தார்கள்.

கேட்டரிங் சமையலை சுவைத்தார்கள்.

சான்சே இல்லை . அப்படி ஒரு மைண்ட்ஃபுல்னெஸ் கப்பிள்ஸ். ஆல்வேஸ் லிவ் இன் த பிரசெண்ட்.

திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் மனதார தம்பதியரை வாழ்த்தினார்கள்.

திருமண மண்டபத்தில் இருந்து வீட்டிற்குச் சென்றதும் வீட்டிற்கு வந்து கல்யாணம் விசாரிக்க வந்தவர்களிடமும் இன்முகம் காட்டி வரவேற்றார்கள் புது மன தம்பதியர்.

திருமணம் முடிந்து நான்கு நாட்கள் கழித்து (செல் ஸ்விட்ச் ஆஃப் செய்து ஐந்து நாட்கள் கழித்து) வீட்டில் ஏகாந்தமாக இருந்த மணமகனும் மணமகளும் பேசிக்கொண்டார்கள்.

“என்னங்க..செல்போன் ஸ்விட்ச் ஆன் பண்ணிடலாமா?”

என்று கேட்டாள் மணமகள்.

“ஓகே டியர். நாம ஸ்விட்ச் ஆஃப் மட்டும் பண்ணலேன்னா நிறைய செலவு பண்ணி ஆசையா நேரில வந்தவர்களை மதிக்காமல் செல்போன்ல ஃபார்மலா விசாரிக்கிறவங்களோடதானே மணிக்கணக்கில் பேசி இருப்போம்.”

“உண்மைதாங்க.. இந்த செல் தொல்லை இல்லாம எல்லா உறவுகளையும் புதுப்பிக்க முடிஞ்சிதுங்க” என்று சொன்ன மணமகள் மணமகனைத் தழுவியபடி “நாளைக்கு ஆன் பண்ணிக்கலாம் செல்லை..” என்றாள்.

SIMPLE TALKS - உலகத்தின் வேகத்தை பார்த்து மன அழுத்தம் எதற்கு ?

  நம்முடைய வாழ்க்கையில் எத்தனை இயந்திரங்களை வைத்திருந்தாலும் தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம், வாகனம் அவற்றை நாம் எப்போதும் நம்முடைய வேகத்துக்...