Tuesday, July 9, 2024

GENERAL TALKS - குடும்பத்துக்காக ஒரு துறையை தாரை வார்த்தல் !


நெப்பொட்டிஸம் - பெரும்பாலான நேரங்களில் மிகப்பெரிய பிரச்சனை இதுதான். ஒரு துறைக்கு ஒரு மனிதன் வேலை செய்யவேண்டும் என்று ஆசைபட்டால் அந்த துறையில் என்னதான் போராடினாலும் நெப்பொட்டிஸம் இருந்தால் வேலைக்கே ஆகாது. ஒரு குடும்பம் அந்த குடும்பத்தை சேர்ந்த சொந்தக்காரர்கள் மட்டுமே மொத்த துறையும் கைகளுக்குள்ளே போட்டுக்கொண்டு சம்பாதித்து காட்டுவதுதான் நெப்பொட்டிஸம் என்றால் அது மட்டுமே அல்ல. இவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள். புதிதாக யாராவது முன்னேறினால் அவர்களை மிரட்டியோ அவர்களை அடித்தோ வெளியே அனுப்ப வேண்டும் என்றும் அப்போதுதான் குடும்பங்கள் நன்றாக இருக்கும் என்றும் இவர்களுடைய கருத்து. இது அரசியல்லில்தான் நன்றாக சாத்தியப்படுகிறது. சாதிகள் இல்லை என்று சொல்பவர்கள் கண்ணுக்கு முன்னால் நடக்கும் சாதி வாரி குற்றங்களை கண்டும் காணாமல் கேட்டும் கேட்காமல் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். நெப்பொட்டிஸம் ஃபேமிலிக்கள் ஆரம்பத்தில் இந்த உயர் குடி பிறப்பையும் குடும்ப சொத்துக்களையும் வைத்து துறையில் நன்றாக முன்னேறிவிடுகிறார்கள். வாழ்க்கையில் அவர்கள் தேர்ந்தெடுத்த பாதை ஒரு ஏணி என்றால் மேலே ஏறியதும் வேறு யாருமே அந்த ஏணியில் ஏற முயற்சித்தால் ஏணியை உலுக்குவார்கள் அல்லது துப்பாக்கியால் சுட்டுவிடுவார்கள். இதுதான் நெப்பொட்டிஸம் பிரச்சனை. குடும்பம் தன்னுடைய பண பலத்தை வைத்து அடித்து சாதாரண மனிதனாக இருந்து முன்னேற நினைக்கும் யாராக இருந்தாலும் தாக்குவார்கள். மேலும் தங்களுடைய மார்க்கெட் காலியாகிவிடும் தங்களின் வருமானங்கள் காலியாகிவிடும் என்பதில் நம்பிக்கையாக இருப்பார்கள். காரணம் என்னவென்றால் இவர்களுக்கு எல்லாம் போதுமான திறமைகள் இல்லை, மேலும் ரவுடியிஸம் மற்றும் மாஃப்பியா போன்ற மூன்றாம் கட்ட மனிதர்கள்தான் பாலிவுட்டை கண்ட்ரோல் பண்ணுகிறார்கள். பாலிவுட் ஒரு நரகம். தெலுங்கு சினிமாக்களில் குடும்பங்களில் இருக்கும் நடிகர்களுக்கு மட்டும்தான் வாய்ப்பு கொடுப்பார்கள். தமிழ் சினிமாவில் நெப்பொட்டிஸம் அவ்வளவாக இல்லை. ஆனால் சம்பள பிரச்சனை சென்றுக்கொண்டு இருக்கிறது. இந்த விஷயத்தை இன்னொரு போஸ்ட்டில் பார்க்கலாம் !

No comments:

Post a Comment

MUSIC TALKS - UN MELA AASAIPATTU ULLLUKKULLE VIRUPPAPATTU VAAGIKKAREN KOORAI PATTU KATTIKIRIYAA ! UNNALA URAKKAM KETTU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

உன்மேலே ஆசைப்பட்ட உள்ளுக்குள்ள விருப்பப்பட்டு வாங்கி தரேன் கூரை பட்டு கட்டிகறியா உன்னால உறக்கம் கெட்டு சோறு தண்ணி ருசியும் கெட்டு கெடக்கிறேன...