புதன், 17 ஜூலை, 2024

CINEMA TALKS - GARUDAN - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 




பொதுவாக நகைச்சுவை நடிகராக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னுக்கு வந்து இப்போது கதாநாயகராக வளர்ந்து இருப்பவர்தான் சூரி. இவருக்கு குறிப்பாக இவருடைய கேரக்ட்டருக்கு இந்த படம் வேற லெவல்லில் பொருந்துகிறது. கௌரவமான குடும்பத்தில் பிறந்து சிறிய வயதில் பெற்றோரை இழந்து இப்போது உள்ளூர் பகுதிகளில் தொழில் நிறுவனம் நடத்தும் இரண்டு நண்பர்களின் உடன் பிறவாத சகோதரராக சின்ன வயதில் இருந்து வளர்க்கப்படும் சொக்கன் என்ற கதாப்பத்திரத்தின் வாழ்க்கை எப்படி ஒரு சுயநலமிக்க அமைச்சரும் அவருடைய ஆட்களும் பணத்துக்காக பண்ணும் கொலைகார சதிவேலைகளால் பாதிக்கப்படுகிறது என்பதுதான் படத்தின் கதை. கதைக்களம் விரிவாகவும் நடப்பு காலத்தில் சொல்லப்படும் கதையாகவும் இருப்பதாலும் லொகேஷன் மற்றும் காமிராக்கள் என்பதையெல்லாம் கடந்து சசி குமார் , முகுந்தன் , சூரி , சமுத்திரக்கனி மற்றும் அனைத்து நடிகர்களின் வசனங்களும் காட்சிகளும் நல்ல நடிப்பு திறன் நிறைந்து காணப்படுவதால் ஒரு தரமான படம் பார்த்த அனுபவம் இருக்கிறது. எமோஷன்கள் காட்சிகளில் நிறைந்து இருந்தாலும் கமேர்ஷியல் படங்களில் இடம்பெறும் அனைத்து விஷயங்களும் சரியான அளவு கலந்து சுறுசுறுப்பாக திரைக்கதை நகர்வதால் இந்த படம் தியேட்டர்ரில் பார்க்கவேண்டிய தரமான எதார்த்த வாழ்வியல் கதை , அதே சமயத்தில் பக்காவான கமேர்ஷியல் சூப்பர் ஹிட் கதை என்றும் சொல்லலாம். இந்த இரண்டு விஷயங்களுமே இந்த படத்துக்கு பொருந்துகிறது. இதுதான் இந்த படத்துக்கான நமது வலைப்பூவின் விமர்சனம் கண்டிப்பாக இந்த வலைப்பூவுக்கு அடிக்கடி விசிட் கொடுப்பதன் மூலம் சந்தாதாரராக மாறிவிடுங்கள் என்று கம்பெனி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

1 கருத்து:

DX சொன்னது…

நடிகர் சசிகுமார் அவர்களின் பேட்டி ஒன்றை சமீபத்தில் பார்த்தேன்.

சொந்தமாக படம் எடுத்து நஷ்டப்பட்டு ஏகப்பட்ட கடன்.

நடுக்காட்டில் தவிப்பது போல் தடுமாறி உள்ளார்.

முதல் படத்திலே தமிழ் திரையுலகை தன் திரைக்கதை புதுமையால் புரட்டிப்போட்டவர் எதிர்காலமே சூனியமாகி நின்றிருக்கிறார்.

பின் அயராத உழைப்பார் கடன்களை கொஞ்ச கொஞ்சமாக அடைத்து மீண்டு இருக்கிறார்.

அவரின் பேட்டியில் எனக்கு மிகவும் பிடித்தது என்னவென்றால்,

"எனக்கே ஏற்பட்ட இக்கட்டிற்கும்,கடனுக்கு யார் காரணமும் இல்லை முழுக்க முழுக்க நானே காரணம்!

கடன் வந்துவிட்டது யார் மேலேயும் பழி போட்டு தப்பிக்க கூடாது. முதலில் நமது தவறை திருத்திக்கொள்ள வேண்டும்

பிறகு நம் மனம் சோர்ந்து விடாமல் இதில் இருந்து எப்படி மீளப்போறோம் என யோசிக்க வேண்டும்.

நான் கடன்காரர்களிடம் வலிய போன் செய்து டைம் கேட்டு அடைத்தேன்"என பேட்டியில் சொல்கிறார்.

தனக்கு ஏற்படும் இன்னல்கள்,தடைகள்,கஷ்டங்கள் என எல்லாவற்றிற்கும் யார் மற்றவர்கள் மீது பழி போடுகிறார்களோ அவர்களால் அதை கடந்து வெற்றிப்பெற முடியாது.

பொதுவாக எனக்கு காதல் தோல்வி பாடல்கள் பிடிக்காது காரணம் அந்த பாடல்களில் வரிகள் எல்லாமே என்னை ஏமாற்றிவிட்டு போய்விட்டாள் என புலம்பலாகத்தான் இருக்கும்.

ஆனால்,அபூர்வ சகோதரர்கள் படத்தில்,"உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்"பாடல் மிகவும் பிடிப்பதற்கு காரணம்,

காதல் தோல்வி பாடல்களில் இந்த பாடல் மட்டும்தான்,"என் மேலதான் தவறு,எனக்கு அதிர்ஷ்டம் இல்லை"என காதலியை உயர்வாக சொல்லப்பட்டு இருக்கும்.

"ஆசை வந்து என்னை ஆட்டி வைத்த பாவம் மற்றவரை ஏன் குற்றம் சொல்ல வேண்டும்"என நாயகன் பாடுவதாக வாலி எழுதி இருப்பார்.

எப்போதெல்லாம் வாழ்வில் பின்னடைவை சந்திக்கிறீர்களோ,அப்போது உங்களின் வாழ்வில் பின்னடைவுக்கு யாரும் காரணம் இல்லை நாம் மட்டும் காரணம் என எப்போது எண்ண தொடங்கிறீர்களோ அப்போதே வாழ்க்கையில் வெற்றிப்பெற தொடங்கிறீர்கள் என அர்த்தம் என்று கூறினார்.

SIMPLE TALKS - உலகத்தின் வேகத்தை பார்த்து மன அழுத்தம் எதற்கு ?

  நம்முடைய வாழ்க்கையில் எத்தனை இயந்திரங்களை வைத்திருந்தாலும் தொலைக்காட்சி, தொலைபேசி, இணையம், வாகனம் அவற்றை நாம் எப்போதும் நம்முடைய வேகத்துக்...