வியாழன், 16 ஜனவரி, 2025

MUSIC TALKS - CHELLA KILIGALAAM PALLIYILE - CHEVVANDHI POOKALAAM THOTTILILE - EN PONMANIGAL YEN THOONGAVILLAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



செல்லக்கிளிகளாம் பள்ளியிலே 
செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

கன்றின் குரலும் கன்னித் தமிழும்
சொல்லும் வார்த்தை அம்மா அம்மா
கருணைத் தேடி அலையும் உயிர்கள்
உருகும் வார்த்தை அம்மா அம்மா
எந்த மனதில் பாசம் உண்டோ
அந்த மனமே அம்மா அம்மா
இன்பக் கனவை அள்ளித் தரவே
இறைவன் என்னை தந்தானம்மா
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

தந்தை ஒருவன் அந்த இறைவன்
அவனும் அன்னை இல்லாதவன்
தன்னைத் தேடி ஏங்கும் பிள்ளை
கண்ணில் உறக்கம் கொள்வானவன்
பூவும் பொன்னும் பொருந்தி வாழும்
மழலைக் கேட்டேன் தந்தான் அவன்
நாளை உலகில் நீயும் நானும்
வாழும் வழிகள் செய்வான் அவன்
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை


2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Sidharth Thaakapattara ?

T-REX சொன்னது…

செல்லக்கிளிகளாம் ஷெட்டினிலே , செவ்வந்தி பூக்களாம் மப்பினிலே ,
என் பொன்மணிகள்
ஏன் தூங்கவில்லை
🤣🤣🤣

TAMIL BLOGSPOT POSTS - 2K26 - EPISODE 003 - நம்முடைய உலகம் மாறுகிறது

  நண்பர்களே, இந்த உலகம் இந்த நாட்களில் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கிறது. அந்த மாற்றத்தின் வேகத்தை நம்மால் உணர முடிவதில்லை, அவ்வளவுதான். நீங்...