ஒரு கோழிப்பண்ணை முதலாளியை பேட்டி எடுக்க வந்திருந்தார்கள். உங்கள் கோழிகள் எல்லாம் கொழு கொழுவென்று இருக்கிறதே? அதற்குக் காரணம் என்ன என்று கேட்டனர். பண்ணைக்காரர், அதெல்லாம் ஒன்னுமில்லீங்க, நான் அவைகளுக்கு, பாதாம், பிஸ்தா எல்லாம் கொடுக்குறேன், அதனாலத்தான் இப்படி இருக்கு என்றார். வந்தவர்கள், அதைக் கேள்விப்பட்டுத்தான் நாங்கள் இங்கே வந்தோம். நான்கள் எல்லாம் வருமானத்துறை அதிகாரிகள், எடு கணக்கு நோட்டை என்று சொல்லி 50,000 ரூபாய் அபராதம் விதித்தனர். பண்ணைக்காரர், தலையில் கையைவைத்துக் கொண்டு வருத்தமாக இரண்டு நாள் சாப்பிடவில்லை. ஒருவாரம் கழித்து, ஒரு கும்பல் வேனில் வந்திறங்கியது. உங்கள் கோழிக்கெல்லாம் என்ன தீனி போடுகிறீர்கள் என்று கேட்டனர். பண்ணைக்காரர் சுதாரித்துக் கொண்டு, இந்தமுறை வந்தவர்கள் மூக்கை அறுக்கிற மாதிரி ஏதாவது பதில் சொல்லனும்னு, நான் ஒன்றுமே போடுவதில்லை என்றார். வந்தவர்கள் நாங்கள் (மிருகவதை தடுப்பு சட்டம்) ஜீவ காருண்ய சங்கத்திலிருந்து வந்துள்ளோம். நீங்கள் கோழிகளை பட்டினி போட்டதற்காக உங்களுக்கு ரூபாய் 50,000 அபராதம் என்று பணத்தைப் பிடுங்கிக்கொண்டு, ரசீது கொடுத்தனர். பண்ணையார் நிலைமை கேட்கணுமா? என்னடாயிது, எதைச் சொன்னாலும் பணம் பிடுங்குரானுங்க... என்றிருந்த நிலையில்... மூன்றாவது அணி ஒன்று வந்து, அதே போல உங்கள் கோழிகளுக்கு என்ன சாப்பாடு போடுறீங்க என்றனர். பண்ணையார் பாதி பயத்துடன், அதுங்க கிட்ட ஆளுக்கு ஒரு அனா கொடுத்துடுறேன். அதுங்க எதையோ வாங்கி தின்னுட்டு வந்திடுது. என்னா திங்குதுனு எனக்குத் தெரியாது என்று சொல்லி ஒருவழியாக தப்பித்தார். இந்த சமூகத்துக்கு நாம் உண்மையாக இருந்தால் நாம் என்ன செய்தாலும் அதனை நம் மூலமாகவே தெரிந்துகொண்டு பின்னாட்களில் நமக்கே ஆப்பு வைத்து விடுவார்கள் ! இவர்களுக்கு நிறைய விஷயம் தெரிந்துகொள்ள வைப்பதை விட நம்முடைய தொழில்களை வருமானத்தை இரகசியமாக வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருப்பதே நல்லது !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த உங்களின் விருப்பமான தமிழ் கருத்துப்பகிர்வு தளம்! COPYRIGHT © 2023 - 2026 | NICE TAMIL BLOG | ALL RIGHTS RESERVED | DMCA PROTECTED SUPPORT • SHARE • SUBSCRIBE - ENJOY OUR BLOG - DON'T MISS THE ENTERTAINMENT OF READING THE BIGGEST PERSONAL BLOG EVER ! ENGLISH VERSION IS UNDER DEVELOPMENT ! ✔❤ #TAKE-CARE #BE-WELL ! GREETINGS FROM NTB!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
GENERAL TALKS - வேலையை முடிக்கும் நவீன மெஷின் ?
இந்த நவீன சிஸ்டம் இயங்குவதே மனிதர்களின் ‘பயத்தையும் ஆசையையும்’ மூலதனமாகக் கொண்டுதான். ஈஸி இஎம்ஐ (EMI), கிரெடிட் கார்டுகள், வீட்டுக் கடன்கள் ...
2 கருத்துகள்:
**கடவுளும் மனிதனும் – ஒரு கருத்து நிறைந்த குறுங்கதை**
உலகத்தை உருவாக்கிய கடவுள், மரம், செடி, விலங்கு, பறவை, கடைசியாக மனிதனை படைத்தார். கடைசியில் ஓய்வெடுக்க காற்றாடியில் மூன்றாம் எண்ணில் தூங்கச் சென்றார்.
அந்த நேரத்தில் மனிதர்கள் தங்களைத் தாங்களே பிரித்து, ஒவ்வொருவரும் தனித்தனி கட்டிடங்களில் கடவுளை வேறுபடுத்தி வழிபடத் தொடங்கினர். ஒருவன் வெள்ளை ஆடையுடன் வந்தான், மற்றொருவன் சிடி விற்றான், யாரோ கடவுளின் பெயரை சொல்லி ஏமாற்றத் தொடங்கினார்கள்.
கடவுள் விழித்தார். கோபத்துடன் ஒவ்வொரு கட்டிடத்திற்கும் சென்று பார்த்தார். தன்னைப் பிரித்து, தன்னை வைத்து வியாபாரம் செய்கிற மனிதர்களை கண்டார். உண்மையைச் சொன்னபோது, அவரையே எதிர்ப்பாளன் என கூறினர்.
கோபத்தில் கடவுள் விலகினார். ஆனால் தன்னை உணர்ந்த பறவைகள், விலங்குகள் போன்ற உயிரினங்களுக்கு மட்டும் இயற்கை பேரழிவுகளுக்கு முன் எச்சரிக்கை அளிக்கும் அருளை விட்டுச் சென்றார்.
இறைவன் மதங்களில் இல்லை. ஒவ்வொரு மனதிலும் வாசனை வீசுகிறார். சாதி, மதம், பிரிவினை—all மனிதனால் உருவாக்கப்பட்டவை. உண்மையான இறைவனை உணர, தூய மனம் போதும்.
**முடிவு:**
மதம், சாதி, பிரிவினை— அனைத்துமே பொய்கள். இறைவன் ஒருவனே. அவனை உணர மனம் மட்டும் போதும். உண்மை, அன்பு, ஒற்றுமை — இதுவே இறை வழி.
NICE STORY BRO ~~!
கருத்துரையிடுக