வியாழன், 16 ஜனவரி, 2025

MUSIC TALKS - AAYIRAM KODI SOORIYAN POLE MALARNDHA KAADHAL POOVE - AASAIGAL KODI MANADHINIL VALARTHA KARISAL KAATU POOVE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


ஆயிரம் கோடி சூரியன் போலே மலர்ந்த காதல் பூவே
ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய் கரிசக்காட்டு பூவே
வானவில்லை போலே வானவில்லை போலே நீ 
பார்க்கும் இடமெல்லாம் வரும் பூவே பூவே பூவே வா

நானாக நான் இல்லையே நீயாக நான் ஆகிறேன்
நீராக நீரூற்றினால் வேறாக நானாகிறேன்
கொடியாக நான் ஆகிறேன் கிளையாய் நீ ஊன்று
செடியாக நானகிறேன் நிலமாய் நீ தாங்கு
வானத்து நிலவே வாசலில் இறங்கு
வாசனை மலர்கள் உனக்கென விரித்தேன் கரிசக்காட்டு பூவே !

உன்னை நான் கேட்காமலே உன்னோடு நான் வாழ்கிறேன்
என்னை நீ சேராமலே என்னோடு நீ வாழ்கிறாய்
என் மூச்சில் எப்போதுமே உன் காற்றை வாங்கினேன்
உன் காட்சி எப்போதுமே என் கண்ணால் பார்க்கிறேன்
எனக்குள் நீயும் உனக்குள் நானும் இருப்பதனாலே
இனி என்ன வேண்டும் கரிசகாட்டு பூவே !


2 கருத்துகள்:

Jaswanth Madhav சொன்னது…

GOOD BRO !

tvk-fails🇪🇸 சொன்னது…

நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த இருக்கை வடக்கு தெரு பகுதியை சேர்ந்தவர் கஸ்தூரி (65). இவர், நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் டி.வி. பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது முகத்தில் வெள்ளை துணி கட்டிய மர்ம நபர் வீட்டுக்குள் நுழைந்துள்ளார். சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் கஸ்தூரி அணிந்திருந்த 5பவுன் தங்க நகையை பறிக்க முயன்றார். சுதாரித்து கொண்டு அவர் சத்தம் போடவே அறையில் இருந்த மருமகள் சரண்யா வெளியே வந்ததும், மர்மநபர் அங்கிருந்து தப்பி சென்றார்.

இதையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு வந்து, அந்த மர்ம நபரை துரத்தி சென்றனர். அருகில் உள்ள கருவேல மரங்கள் நிறைந்த பகுதிக்குள் ஓடிய அந்த நபரை பிடித்து மரத்தில் கட்டி வைத்து தர்மஅடி கொடுத்தனர். தகவலின்படி கீழ்வேளூர் போலீசார் வந்து அந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், கீழ்வேளூர் அருகே இருக்கை மேலத்தெருவை சேர்ந்த சேகர் மகன் பாரதி (26) என்பதும், அவர் அதே பகுதி தவெக கிளை பொறுப்பாளர் எனவும் தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து பாரதியை கைது செய்தனர். மக்கள் தாக்கியதில் காயம் அடைந்த அவரை ஒரத்தூர் அரசு மருத்துவ கல்லூரியில் அனுமதித்தனர்

LIFE TALKS - ஒரு இயற்கையான கட்டுப்படுத்தும் முறை ?

  அப்பள சோடா மற்றும் சோடியம் குளோரைடு (சமையல் உப்பு) ஆகிய இரண்டின் கலவையானது, எறும்புகளின் உடலமைப்பு மற்றும் ஈரப்பத ஒழுங்குமுறை அமைப்பைக் கு...