வியாழன், 16 ஜனவரி, 2025

MUSIC TALKS - AMAIDHIYAANA NADHIYINILE ODUM ODAM ALAVILLADHA VELLAM VANDHAAL AADUM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் 
காற்றினிலும் மழையினிலும் 
கலங்க வைக்கும் இடியினிலும் 
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் 
ஹோய் ஹோய்

தென்னம் இளங்கீற்றினிலே….
தாலாட்டும் தென்றல் அது 
தென்னைதனை சாய்த்துவிடும் 
புயலாக வரும்பொழுது 

அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்

ஆற்றங்கரை மேட்டினிலே 
ஆடி நிற்கும் நாணலது 
காற்றடித்தால் சாய்வதில்லை 
கனிந்த மனம் வீழ்வதில்லை 

நாணலிலே காலெடுத்து 
நடந்து வந்த பெண்மை இது
நாணம் என்னும் தென்றலிலே 
தொட்டில் கட்டும் மென்மை இது

அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்

அந்தியில் மயங்கி விழும்
காலையில் தெளிந்து விடும் 
அன்பு மொழி கேட்டுவிட்டால் 
துன்ப நிலை மாறிவிடும் 

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் 
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

காற்றினிலும் மழையினிலும் 
கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் 
வாழும் ஹோய் ஹோய்

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் 
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

கருத்துகள் இல்லை:

TAMIL BLOG POST 001 - GENERAL TALKS - 001 - நேர்மறை எண்ணங்கள் கட்டாயமானவை !

 நமது வாழ்வில், சரியான செயல்களை மட்டுமே ஆற்றுவதற்கு நாம் கண்டிப்பாகக் கட்டுப்பட்டவர்களாகவும், கடமைப்பட்டவர்களாகவும் இருக்கிறோம். தவறான செயல்...