ஒரு காலத்தில் செத்துப்போன ஒருவன் நரகத்துக்கு அனுப்பப்பட்டான். நரகத்தில் மூன்றுவிதமான தண்டனை முறைகள் இருந்தன. மூன்றையும் பார்த்துவிட்டு எந்த தண்டனையை ஏற்றுக்கொள்வதென்று அவனே முடிவு செய்துகொள்ளலாம் என்று சொல்லப்பட்டது. முதலாவது அறைக்குப் போனவன், அங்கே எல்லோரும் தலைகீழாக நின்று கொண்டிருந்ததைப் பார்த்தான். ஒவ்வொருவர் முகத்திலும் வலியின் அவஸ்தை பிரதிபலித்தது. இது வேண்டாம் என்று அடுத்த அறைக்குப் போனான். அங்கே, எல்லோரும் தலையில் பனிக்கட்டிகளைச் சுமந்தபடி இருந்தார்கள். பனிக்கட்டிகள் உருகி வழிந்துகொண்டிருக்க, அந்தக் குளிர்ச்சியில் ஜில்லிட்டு நடுங்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு நிமிடம் அந்த வேதனையை எண்ணிப் பார்த்தவன், “ஐயோ. இது வேண்டாம்” என்று அடுத்த அறைக்குத் தாவினான். மூன்றாவது அறையில் ஆச்சரியம்! அங்கிருந்தவர்கள் படுரிலாக்ஸ்டாக காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். “ஆஹா. இதுதான் நான் தேடிவந்த இடம். இங்கேயே நான் இருந்துவிடுகிறேனே” என்று தன் முடிவையும் சொல்லிவிட்டான். ”நீங்கள் போய் இந்தக் குழுவில் சேர்ந்துகொள்ளலாம்” என்று அனுமதியும் தரப்பட, உள்ளே போய் ஒரு கப் காபி வாங்கி சுவைக்க கையிலெடுத்ததும் அங்கே ஒரு எஜமானரின் குரல். “ஓகே.! உங்களது காபி இடை வேளை முடிந்துவிட்டது. எல்லோரும் அந்த தீச்சட்டியை எடுத்துத் தலையில் வைத்துக் கொள்ளுங்கள். இப்படித்தான் மேலோட்டமாக புரிந்துகொண்டு கஷ்டப்படுவதை தவிர்க்க கூடாது. இங்கே எல்லோருடைய வாழ்க்கையிலும் கஷ்டங்கள் தவிர்க்க முடியாததாகவே உள்ளது. ஒரு இடத்தில் இருக்கும் மனிதர்களிடம் விசாரிக்காமல் பார்வையாலே முடிவுகள் எடுப்பவர்களுடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 10
ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை கவனித்தத...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக