Thursday, January 16, 2025

GENERAL TALKS - TEAM WORK முக்கியம் பிகிலு !




ஒரு காட்டில் ஒரு யானை இருந்தது. அதற்குத் தான் பலசாலியென்று ரொம்ப கர்வம். சிறிய பிராணிகளை அது ரொம்ப கஷ்டப்படுத்தி வந்தது.யானை ஒரு நாள் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது, வழியில் ஒரு எறும்புப்புற்றைப் பார்த்தது. அங்கே நூற்றுக்கணக்கான எறும்புகள் வாயில் உணவைக் கவ்விக் கொண்டு அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தன. அதைப் பார்த்த யானை,“எனக்கு வழி விடுங்கள். இல்லாவிட்டால் ஒரே மிதியில் உங்களை நசுக்கி விடுவேன்” என்று கத்திற்று. "யானையே! நீங்கள் பலசாலி என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் உன்னை நாங்கள் என்ன செய்தோம்?” என்று கேட்டது ஒரு எறும்பு. யானை. “இவ்வளவு சிறிய பிராணி நீ! என்னைக் கேள்வி கேட்கிறாயா?” என்று கோபப்பட்டது “சிறிய பிராணியாக இருந்தால் என்ன? எனக்கும் அறிவு இருக்கிறது. வேண்டுமானால் பந்தயத்தில் உன்னை ஜெயித்துக் காட்டுகிறேன்” என்றது எறும்பு. ஜம்பமாக சிரித்த யானை “ஆகட்டும், பார்க்கலாம். நீ தோற்றால், உன்னுடன் உன் புற்றையும் சேர்த்து அழித்து விடுவேன்” என்றது  பந்தயம் ஆரம்பித்தது. யானைக்கும், எறும்புக்கும் இடையில் ஓட்டப் பந்தயம். காட்டுப் பிராணிகளெல்லாம் வேடிக்கை பார்க்க அங்குக் குவிந்தன. யானை கொஞ்ச தூரம் ஓடியது. பிறகு கீழே பார்த்தபோது அருகிலேயே எறும்பு ஓடிவருவதைப் பார்த்து “நீயும் இங்கேதான் இருக்கிறாயா?” என்று இன்னும் வேகமாக ஓடியது. ஓடி ஓடி அதற்கு மூச்சிரைத்தது. ஒரு நிமிசம் நின்று யானை குனிந்து பார்த்தது. தன் பக்கத்திலேயே எறும்பு வருவது தெரிந்தது. யானைக்குப் பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது. யானை வேகமாக ஓடி ஓடி அங்கிருந்த ஆழமான பள்ளத்தில் விழுந்து விட்டது. உண்மையில் யானை ஒவ்வொரு முறையும் பார்த்த எறும்பு, பந்தயம் கட்டிய அதே எறும்பு இல்லை. அதன் நண்பர்களான வேறு வேறு எறும்புகள். கர்வம் பிடித்த யானை சிறிய எறும்பைக் கவனிக்கும் நிலையில் இருக்கவில்லை. உருவம் சிறியதேயானாலும் அதற்கும் மதிப்புக் கொடுத்தேயாக வேண்டும். இது திட்டமிடலாலும் நண்பர்கள் உதவியாலும் நுணுக்கமான செயல்பாடுகளும் மட்டுமே சாத்தியமாகும் !

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...