Friday, January 17, 2025

ARC - 075 - கஷ்டப்படும் மக்களுடைய வாழ்க்கை


மன்னர் ஒரு முறை கிராமங்களை சுற்றிப் பார்க்க குதிரையில் கிளம்பிச் சென்றார். அப்போது வயலில் ஒரே ஒரு பெண் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். மன்னர் அவரிடம், ”மற்றவர்கள் எல்லாம் எங்கே?”என்று கேட்டார். விசாரிப்பது மன்னர் என்பதை அறியாத அந்த பெண், ”அவர்கள் எல்லாம் மன்னரைப் பார்க்கப் போயிருக்கிறார்கள்,” என்று சொன்னார். ”அப்படியானால் நீங்கள் மட்டும் ஏன் போகவில்லை?”என்று மன்னர் கேட்டார். அதற்கு அந்தப்பெண், ”மன்னரைப் பார்ப்பதற்காக ஒருநாள் கூலியை இழக்கும் அளவிற்கு நான் முட்டாள் இல்லை.எனக்கு ஐந்து குழந்தைகள்.அவர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது. அதனால்தான் போகவில்லை, ”என்றார். மன்னர் அவரது கையில் சில நூறு தங்க பணத்தைக் கொடுத்துவிட்டு , ”உங்களது நண்பர்களிடம் சொல்லுங்கள். நீங்கள் எல்லாம் மன்னரைப் பார்க்க சென்றீர்கள்.ஆனால் மன்னரோ என்னைப் பார்க்க வந்தார் என்று..” என கூறிவிட்டு சென்றார். எதையும் தேடி செல்லாதே தகுதி இருந்தால் எல்லாம் உன்னை தேடி வரும் என்பது உண்மை அல்ல. நமக்காக தேர்ந்தெடுத்த தலைவர்கள் நம்மை காப்பாற்ற முயற்சிகளை எடுக்க வேண்டும்.  கஷ்டப்படுபவர்களுக்கு அவர்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்கிறேன் என்று சொல்லி பணத்தை கொள்ளை அடிப்பவர்கள் எல்லோருமே தங்களின் வீட்டை விட்டு வெளியே வந்து இந்த கஷ்டங்களால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையோடு வாழ்ந்து பார்த்தால் மட்டும்தான் வாழ்க்கையின் கடினத்தன்மை என்னவென்று அவர்களால் புரிந்துகொள்ள முடியும். நாளைய நாளுக்கு சொகுசான வாழ்க்கை இருப்பதால்தான் இன்றைய வாழ்க்கையில் மற்றவர்கள் படும் கஷ்டங்களுக்கு எந்த பொறுப்பும் ஏற்றுக்கொள்ளாமல் இவர்கள் சுயநலத்துக்காக தொடர்ந்து இல்லாதப்பட்டவர்கள் படும் கஷ்டங்களை கண்டும் காணாமல் இருப்பது சரியானதா ? உங்களுடைய கருத்துக்களை பதிவிடுங்கள் !



 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...