ஒரு பெரியவரிடம் அய்யா! நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் ஒருவன். “ என்ன காரணம்?” என்று கேட்டார் ஒரு பெரியவர். “மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்” என்றான் “உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம் தான்” என்றார் பெரிவர் “அப்படியா சொல்கிறீர்கள்?“ “ஆமாம்! ” “அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?” “மனதைப் புரிந்து கொள். அது போதும். ” “எப்படிப் புரிந்து கொள்வது?” என்றான் அவன். "இந்தக் கதையைக் கேள்“ என்று அவர் சொன்னார்.“ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒரு நாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது, அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது. மறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது, இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவும் இல்லை. வருந்தமும் இல்லை. எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று. தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம், தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை. துன்பமுமில்லை. ” அவர் கதையை முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான். துன்பச் சிறையின் கதவுகள் திறக்கப்படுகிற ஓசை அவன் செவிகளில் விழுந்தது. மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். ” - நம்முடைய மனதுடைய மாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள கூடாது ! நம்முடைய தன்மை எப்போதுமே மாறாது. இந்த தன்மையால் உருவாகும் விளைவுகள் பாஸிட்டிவாக இருக்கலாம் அல்லது நெகட்டிவ்வாகவும் இருக்கலாம். நாம்தான் முடிவுகளை எடுக்கும் இடத்தில் இருக்க வேண்டும்.
வெறும் சினிமா மற்றும் பொழுது போக்கு விஷயங்கள் நிறைந்த ஒரு வலைத்தளம் இதுவாகும், இன்னும் எடிட்டிங்கில் தான் உள்ளது. CONTENT குறைபாடுகளுக்கு மன்னிக்கவும். SPELLING MISTAKE களுக்கும் மன்னிக்கவும். TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW
Subscribe to:
Post Comments (Atom)
GENERAL TALKS - பிரிவினை நீக்கப்பட வேண்டிய விஷயம்
சமூகத்தில் இருந்து சாதிப் பிரிவினைகளை அகற்ற, கல்வி என்பது நமக்குத் தேவையான மிக சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும். தரமான கல்வி, மக்கள் தன்னம...
-
இன்னைக்கு தேதிக்கும் நான் என்னுடைய பெஸ்ட் பிலிம் என்னான்னு கேட்டா நான் தி அவெஞ்சர்ஸ் என்றுதான் சொல்கிறேன், பொதுவாக ஒரு சூப்பர்ஹீரோ...
-
காலம் நம்ம வாழ்க்கையின் மேலே வைத்து இருக்கும் கட்டுப்பாடுகளை எடுப்பதுதான் நான் இந்த உலகத்தின் கடினமான விஷயமாக கருதுகிறேன். காலத்துக்கு எப்போ...
No comments:
Post a Comment