ஒரு அரங்கத்தில் ஒரு என்ஜினீயர் மற்றும் ஒரு டாக்டர் இவர்களில் யார் கெட்டிகாரங்கன்னு ஒரு விவாதம் வந்தது. அதை எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். இருவரும் ஒத்துக்கொண்டார்கள். என்ஜினீயர் ஓர் கிளினிக் திறந்தார். வாசலில் ஒரு போர்டு மாட்டினார். அதில் எல்லா நோய்களும் குணப்படுத்தப்படும். பீஸ் 3௦௦ ரூபாய். அப்படி குணமாகவில்லையென்றால் 1000 ரூபாயாக திருப்பி தரப்படும் என்று. அந்த டாக்டருக்கு இதை பார்த்து விட்டு இவனை எப்படியாவது ஏமாற்றிவிடணும்னு அந்த கிளினிக் சென்று. சொன்னார். "எனக்கு எந்த ருசியும் தெரியவில்லை. குணப்படுத்துங்கள். உடனே அந்த என்ஜினீயர் நர்ஸிடம் நம்பர் 22 வது பாட்டில் மருந்து மூன்று சொட்டு இவர் நாக்கில் விடசொன்னார். நர்ஸும் அவ்வாறு செய்ய. உடனே அந்த டாக்டர் இது பெட்ரோல் என அலறினார். அந்த என்ஜினீயர் உங்களுக்கு இப்போது சுவை தெரிய ஆரம்பித்து விட்டது. என சொல்லி 300 ருபாய் வாங்கி விட்டார். டாக்டர் மிகவும் கோபமடைந்து சிறிது நாள் கழித்து மீண்டும் அங்கு சென்று. என்னுடைய ஞாபக சக்தி குறைந்து விட்டது என மருந்து கேட்டார். உடனே எஞ்சினீயர் நர்சிடம் அந்த நம்பர் 22 ல் உள்ள மருந்தை 3 சொட்டு வாயில் விட சொன்னார். உடனே டாக்டர் அது வாய் சுவைக்கான மருந்து என்றவுடன். உங்கள் ஞாபக சக்தி திரும்ப வந்து விட்டது என எஞ்சினீயார் 300 ருபாய் வாங்கிவிட்டார். மீண்டும் டாக்டருக்கு, கோவம் & அவமானம். மீண்டும் சிறிது நாட்கள் கழித்து டாக்டர் அந்த கிளினிக் சென்று என் கண் பார்வை குறைந்து விட்டது சரிசெய்ய கேட்டார். உடனே அந்த என்ஜினீயர் இந்தாருங்கள் 1000 ருபாய் என்றார். அந்த டாக்டர் உடனே இது 500 ருபாய் நோட். 1000 ருபாய் என்கிறீர்களே என்றார். பின். அவரே 300 ரூபாயை கொடுத்துவிட்டு வெளியே சென்றார்! - இங்கே எப்போதுமே நமக்கு திறமை இருப்பதற்காக வேறு ஒரு திறமையாளரின் சாதுரியமான திறமைகளோடு போட்டி போடவேண்டும் என்று நினைக்க கூடாது !
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த உங்களின் விருப்பமான தமிழ் கருத்துப்பகிர்வு தளம்! COPYRIGHT © 2023 - 2026 | NICE TAMIL BLOG | ALL RIGHTS RESERVED | DMCA PROTECTED SUPPORT • SHARE • SUBSCRIBE - ENJOY OUR BLOG - DON'T MISS THE ENTERTAINMENT OF READING THE BIGGEST PERSONAL BLOG EVER ! ENGLISH VERSION IS UNDER DEVELOPMENT ! ✔❤ #TAKE-CARE #BE-WELL ! GREETINGS FROM NTB!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
GENERAL TALKS - வேலையை முடிக்கும் நவீன மெஷின் ?
இந்த நவீன சிஸ்டம் இயங்குவதே மனிதர்களின் ‘பயத்தையும் ஆசையையும்’ மூலதனமாகக் கொண்டுதான். ஈஸி இஎம்ஐ (EMI), கிரெடிட் கார்டுகள், வீட்டுக் கடன்கள் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக