ஒரு மாபெரும் கூட்டம் இரண்டு பேச்சாளர்களிடையே பயங்கரமான போட்டி, யாருடைய பேச்சு அதிக கைதட்டல் பெறும் என்று. கூட்டம் துவங்குவதற்கு முன் இருவரும் ஒரு அறையில் அமர்ந்து அன்றைய கூட்டத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு பேச்சாளருக்கு தொலைபேசி அழைப்பு வர, அவர் எழுந்து போனார். அவரது பேச்சுக் குறிப்புகளை அவசரத்தில் மேஜையிலேயே வைத்துவிட்டுச் சென்றார். அவர் திரும்பி வருவதற்குள் போட்டி பேச்சாளர் அந்தக் குறிப்புகளைப் படித்து விட்டார். அந்தக் குறிப்புகள் அவர் தயாரித்திருந்ததைவிட நன்றாக இருந்தது. கூட்டம் துவங்கியது. அடுத்தவர் குறிப்பை பார்த்தவருக்குத்தான் முதலில் பேச வாய்ப்பு. எதிர் பேச்சாளர் எழுதி வைத்திருந்த குறிப்புகளையெல்லாம் எடுத்து தன்னுடைய கருத்துக்கள் போல் பேசினார். ஏக கைதட்டல். எதிரி பேச்சாளருக்கு விஷயம் புரிந்துவிட்டது. அடுத்து அவர் பேசவேண்டும். ஆனால் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. என்ன செய்வது? எழுந்தார். மைக்கைப் பிடித்தார். "முதலில் எனக்கு முன்னால் பேசிய நண்பருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனக்குத் தொண்டை கட்டு. சரியா பேச முடியாது. என்னுடைய உரையை நீங்கள் வாசிக்க முடியுமா என்று கூட்டம் துவங்குவதற்கு முன்பு கேட்டேன். அவர் பெருந் தன்மையாக ஒத்துக் கொண்டார். அவருக்கு என் நன்றிகள்" என்று கூறி அமர்ந்தார். சூழ்நிலைகளுக்கு ஏற்ப செயல்படுபவன்தான் புத்திசாலி. நாம் எப்போதுமே ஒரு துறையில் கடினமான உழைப்பை கொடுத்து வெற்றி அடைய போராடுகிறோம் ஆனால் நம்முடைய உழைப்புக்கு இன்னொருவர் பலன் அனுபவிக்க கூடாது. நம்முடைய உழைப்பை பாதுகாக்க நாம்தான் கவனமாக செயல்பட வேண்டும். நம்முடைய ஒவ்வொரு நாளுமே மதிப்பு மிக்கது.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த கருத்துப்பகிர்வு தமிழ் வலைத்தளம் ! - TAKE CARE. BE WELL. COPYRIGHT - 2023 - NICE TAMIL BLOG - ALL RIGHTS RESERVED - DMCA - TAMILNSA.BLOGSPOT.COM - #TAMILREVIEW #TAMILBLOG #TAMILWEBSITE #TAMILMOTIVATION #TAMILPOSTS #TAMILSTORIES #வலைப்பூ #தமிழ்வலை
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கதைகள் பேசலாம் வாங்க - 10
ஆங்கில பாடகர் அகான் 2000-களின் நடுப்பகுதியில் ரிங்டோன் விற்பனையில் மிகவும் வெற்றி கண்டார் இந்த விற்பனையில் ஒரு சின்ன நுணுக்கத்தை கவனித்தத...
-
இங்கே நிறைய பேருடைய மோசமான வாழ்க்கைக்கு அவர்களுடைய இயலாமை மட்டும் தான் காரணம். உடலும் மனதும் அவர்களுக்கெல்லாம் சரியாகத்தான் இருக்கிறது ஆனால்...
-
ஒரு கிராமத்தில் குடிநீருக்காக ஒரே ஒரு கிணறு இருந்தது. ஒரு நாள் நாய் ஒன்று கிணற்றில் விழுந்து இறந்தது. தண்ணீர் அசுத்தமாகவும், குடிக்க முடியாத...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக