Thursday, January 16, 2025

ARC - 065 - தேடினேன் வந்தது

 



அந்த மகான் மிகவும் பசியோடு இருந்தார். அவர் நான்கு நாட்களாக தொடர்ந்து பட்டினியாகக் கிடந்ததால் அவரால் எழுந்து நடமாடவும் முடியவில்லை. பசியை தாங்க முடியாமல் ஏதேனும் கிடைக்காதா என்ற ஆர்வத்தால் வெளியில் சென்று தேட ஆரம்பித்தார்.   ஒரு இடத்தில் அழுகிய கிழங்கொன்று கிடைத்தது. ஆனால் சாப்பிட மனமில்லாமல் தூக்கிப் போட்டுவிட்டு மீண்டும் தன் இருப்பிடத்திற்கே வந்தார். என்ன செய்வது என்று அவருக்கு புரியவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் ஒருவர் மகான் அவர்களை தேடி வந்தார். வந்ததும் ஐநூறு பொற்காசுகள் அடங்கிய ஒரு பையை நீட்டி "இது உங்களுக்கு " என்றார் . என்ன இது? ஏன் எனக்குத் தருகிறீர்கள்? என்று மகான் கேட்டதற்கு அவர் சொன்னார்: பத்து நாட்களாக நான் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தேன் கப்பல் தீடீரென மூழ்குகின்ற நிலைக்கு வந்துவிட்டது. எல்லோரும் பிரார்த்தனையில் ஈடுபடலாயினர். கப்பல் மூழ்காமல் உயிர் தப்பி விட்டால் அனைவரும் தத்தம் வசதிக்கேற்ப ஏதோ ஒன்றை தர்மம் செய்வதாக உறுதி செய்தார்கள். இந்த ஆபத்திலிருந்து மீண்டு விட்டால், நான் கப்பலை விட்டு இறங்கியதும் எனக்குத் தென்படுகின்ற முதல் ஆளுக்கு ஐநூறு பொற்காசுகள் தருவதாக நேர்ந்து கொண்டேன்' நீங்கள் தான் என் கண்களுக்கு தெரிந்த முதல் ஆள்' ஆகவே இது உங்களையே சார்ந்தது. இதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்  அதை ஏற்றுக் கொண்ட மகான் தன் மனதை நோக்கி கூறலானார்: மனமே,. உனக்கு சேர வேண்டியது பத்து நாட்களாக உன்னை நாடி வந்து கொண்டிருந்தது நீயோ பாழடைந்த வெளியில் எல்லாம் சென்று தேடிக் கொண்டிருந்தாய் என்று மனதுக்குள்ளே சொல்லிக்கொண்டார் !


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...