Wednesday, January 1, 2025

ARC - 020 - மனசாட்சியற்ற மனிதர்களும் இருக்கிறார்கள் !

 



ஒரு ஆட்டுக்குட்டி ஓடிவரும் ஆற்றின் சரிவுப் பகுதியில் நீர் அருந்திக் கொண்டிருந்தது. மேல் பகுதியில் நீர் குடிக்க வந்தது ஒரு ஓநாய். ஓநாயை, ஆட்டுக்குட்டி பார்க்கவில்லை. அதைத்தான் இரையாக்கிக் கொள்ளத் தீர்மானித்தது ஓநாய். "ஏன் இப்படித் தண்ணீரைக் கலக்குகிறாய்?” என்று கேட்டது ஓநாய். அப்போது தான் ஓநாயைப் பார்த்த ஆட்டுக்குட்டி பயத்துடன் தண்ணீர் குடிப்பதை நிறுத்தியது. "நான் எப்படி நீரைக் கலக்க முடியும்? தாங்கள் குடித்த மீதி தானே கீழ்ப்புறம் வரும்! ” என்று மெல்லிய குரலில் கேட்டது. "கேள்விக்கு பதில் பேசுமளவுக்குத் திமிராகி விட்டதா? நீ கலக்காவிடில் உங்கப்பன் கலக்கியிருப்பான்! உங்கப்பன் கலக்கா விட்டால், உன் பாட்டன் கலக்கியிருப்பான். உங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது! ” என்றபடி ஓட முயன்ற ஆட்டுக்குட்டி மேல் பாய்ந்து அதை இரையாக்கிக் கொண்டது. இந்த மாதிரியாக பாவம் பண்ணும் துஷ்டர்களிடம் எந்த நியாயமும் எடுபடாது. மவுனமாக ஒதுங்கிச் செல்வதே நன்மை தரும். காரியத்தை சாதித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக எப்படியும் பேசுவர். அவர்களிடம் எல்லாம் வாய் பேசாமல் செல்வதே நலம். இப்போது இந்த சம்பவத்தை கவனித்தால் மனதுக்கு மிகவும் தெளிவாக தோன்றுவது கேஸ்ட் வகையில் பிரிவினைதான். உயர் பிறப்புகள் கஷ்டப்படும் மக்களை இன்னுமே கஷ்டப்படுத்ததான் பார்க்கிறார்கள். இந்த விஷயங்கள் எப்போது மாறப்போகிறது. மனிதத்தன்மை எப்போது துளிர்க்கப்போகிறது ? செருப்பு போட கூடாது என்று சொல்லும் தப்பான கிராமத்து ஆட்கள் எல்லாம் இன்னுமே இருக்கிறார்கள். சின்ன வயதில் இருந்து இந்த விஷம் இவர்களுக்குள்ளே ஊறிவிட்டது. இவர்களை சரிபண்ண முடியாது. புதிய தலைமுறைதான் அடுத்தவர்களை கஷ்டப்படுத்தி சொகுசு வாழ்க்கையை வாழ நினைக்கும் இவர்களுடைய மாற்ற வேண்டும். இல்லையென்றால் இந்த கோபத்துக்கு கண்டிப்பாக ஒரு விடியல் இருக்கும். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...