Saturday, August 31, 2024

CINEMA TALKS - JOSEE - THE TIGER AND THE FISH - திரை விமர்சனம் !

 



வாழ்க்கையில் நீங்கள் நிறைய நல்ல படங்களை பார்த்து இருக்கலாம். இந்த படங்கள் உங்களுக்கு நிறைய கருத்துக்களை சொல்லியிருக்கலாம். இந்த வகையில் சேர்க்க வேண்டிய முக்கியமான ஒரு படம்தான் ஜோஷி - டைகர் அண்ட் ஃபிஷ். இந்த படத்துடைய கதை. கதாநாயகி ஜோஷி நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருக்கிறாள். இருந்தாலும் சிறப்பாக வரையும் திறன்களை கொண்டு இருப்பதால் எப்படியாவது சம்பாதித்து உலகத்தை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசையோடு இருக்கிறாள். இப்போது நம்முடைய கதாநாயகிக்கு கிடைக்கும் தோழனாக வரும் நம்முடைய கதாநாயகன் சுனியோ எப்படி சுதந்திரமான உலகத்தை சுற்றி வர உதவுகிறார் என்பதையும் மேலும் பின்னாட்களில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் சேர்ந்து சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக்கொள்வதும் படத்துடைய கதை. இந்த படம் கண்டிப்பாக மிகவும் மோட்டிவேஷன் நிறைந்த படம். வாழ்க்கையில் நீங்கள் உடைந்துபோனால் இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள் உங்களுக்கு கண்டிப்பாக அடுத்த கட்ட குறிக்கோள் கிடைக்கும். இந்த படம் ஒரு அனிமேஷன் திரைப்படம் என்றாலும் மிகவும் எண்டர்டெயின்மெண்ட்டாக ஸ்டோரியை மட்டுமே ஃபோகஸ் பண்ணி நகராமல் திரைக்கதையில் வேகமாக நகர்த்தி இருக்கிறார்கள். காட்சிகள் துரிதமாக நகர்கிறது. ப்ரொடக்ஷன் டிசைன் பிரமாதம். இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால் ஆர்ட் பிலிம் ஸ்டைல்லில் ஒரு நல்ல கம்மெர்ஷியல் ரொமான்ஸ் பிலிம் இந்த திரைப்படம். கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பாருங்கள். 

Monday, August 19, 2024

MUSIC TALKS - TALK-U LESS-U INI WORK-U MORE-U INI TOP-U LA POTTACHU GEAR-U ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !





ஹே ஏலே ஏலே ஏலே ஏலே வாடி புள்ள'
ஹார்ட்க்குள்ள சத்தம் இல்ல ஏண்டி புள்ள
ஏலே ஏலே பாக்காதே ஏக்கத்துல
நைட் பகலா உன்னால தூக்கம் இல்ல

GOOGLE பண்ணி பாத்தேனே ! ஒன்னுசேர வழி கேட்டேனே
அடடா இந்த CHANCE-க்கு நான் அலைஞ்சு அலைஞ்சு திரிஞ்சேனே
ரொம்ப பிரச்சனையா இருக்கு யாராலயும் எதுவும் பண்ண முடியாது


TALK-U LESS-U இனி WORK-U MORE-U
இப்போ TOP-Uல போட்டாச்சு GEAR-U
BEAT-U BEAT-U இது சூப்பர் BEAT-U
இனி கை காலு நிக்காது பாரு

TALK-U LESS-U இனி WORK-U MORE-U
இப்போ TOP-Uல போட்டாச்சு GEAR-U
BEAT-U BEAT-U இது சூப்பர் BEAT-U
இனி கை காலு நிக்காது பாரு

வைச்ச கண்ணைதான் வாங்குறதில்ல
உன்னை பார்க்காம நான் தூங்குறதில்ல
யாரு சொன்னாலும் நான் கேக்குறதில்ல
நீயும் வந்து சொன்னா தட்டி பேசுறதில்ல

அடிச்சி விட்டாலும் தொறத்தி விட்டாலும்
உன்ன சுத்திதான் என் HEART-ட்டு பறக்கும்
முத்தம் வெச்சாலும் இல்ல கடிச்சி வெச்சாலும்
ஏழு ஜென்மம் தாண்டி கூட தழும்பு இருக்கும்


GOOGLE பண்ணி பாத்தேனே ! ஒன்னுசேர வழி கேட்டேனே
அடடா இந்த CHANCE-க்கு நான் அலைஞ்சு அலைஞ்சு திரிஞ்சேனே
இந்த வருஷம் அதிகமான வெயில் இருக்கு
யாராலயும் எதுவும் பண்ண முடியாது


TALK-U LESS-U இனி WORK-U MORE-U
இப்போ TOP-Uல போட்டாச்சு GEAR-U
BEAT-U BEAT-U இது சூப்பர் BEAT-U
இனி கை காலு நிக்காது பாரு


Sunday, August 11, 2024

MUSIC TALKS - THEN POOVE POOVE VAA THENDRAL THEDA - POONDHENE THENE VAA DHAAGAM KOODA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




தேன் பூவே பூவே வா தென்றல் தேட 
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான் 
உன்னை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட

பனி விழும் புல்வெளியில் தினம் தினம் பொன் பொழுதில்
கனி விழும் உன் மடியில் கலந்திடும் உன் உறவில்
நானும் கம்பன் தான் கொஞ்சும் போது 
கொஞ்சும் இன்பம் போல் வேறு ஏது
தேவ தேவி என்னோடு தான்

தேன் பூவே பூவே வா தென்றல் தேட 
பூந்தேனே தேனே வா தாகம் கூட
இடையினில் உன் விரல்கள்
எழுதிடும் என் சுகங்கள்

அணைக்கையில் உன் உடலில்
அழுந்திடும் என் நகங்கள்
மீண்டும் மீண்டும் நான் வேண்டும்போது
காதல் யோகம்தான் கட்டில் மீது
காணவேண்டும் உன்னோடு தான்

தேன் பூவே பூவே வா தென்றல் தேட 
பூந்தேனே தேனே வா தாகம் கூட
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நான் சொல்லும் கானம் நீ தந்த தானம்
நூறு ராகம் நெஞ்சோடுதான் 
உன்னை நினைத்தேன் பூவே பூவே வா தென்றல் தேட


MUSIC TALKS - KAADHAL SILIVAIYIL ARAINDHAAL ENNAI - THEEYIN KUDUVAIYIL ADAITHTHAL KANNAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


காதல் சிலுவையில் அறைந்தாள் என்னை
தீயின் குடுவையில் அடைத்தாள் கண்ணை
கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள்
இளமை என்னும் கருவறை எங்கும் எரி தழலை கொளுத்துகிறாள்
உயிரும் விழும் போது உறவுகளும் வீணோ ? உலகம் இதுதானோ ?

கழுகுகளின் கண்களிலே மரண பயம் இல்லை
ஊமைகளின் தாலாட்டை செவி உணர வாய்ப்பில்லை
புழுதியிலே இரத்தினமாய் இருந்தது ஒரு தொல்லை
பாவங்களை பாராமல் பழகியதனால் தொல்லை
சேவை பூமியை தினமும் தேனாக்கும் கோபம் துயரங்களை சேர்க்கும்

கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள்
இளமை என்னும் கருவறை எங்கும் எரி தழலை கொளுத்துகிறாள்
உயிரும் விழும் போது உறவுகளும் வீணோ ? உலகம் இதுதானோ ?

அவளுடைய கற்பனையை எழுத வழியில்லை
கூண்டுக்கிளி நான் ஆனேன் வெளிவரவும் வாய்ப்பில்லை
இவனுடைய உண்மைகளை உளற வழி இல்லை 
தோல்விகளின் வீடானேன் துணை வரவும் ஆளில்லை
வாழும் மானிடரின் சுமைகள் தீராது காலம் உறவுகளின் தீவு

கனவுகளில் விழுந்த என்னை கவலையிடம் அனுப்புகிறாள்
இளமை என்னும் கருவறை எங்கும் எரி தழலை கொளுத்துகிறாள்
உயிரும் விழும் போது உறவுகளும் வீணோ ? உலகம் இதுதானோ ?

CINEMA TALKS - THE NAPPING PRINCESS (ANCIEN AND THE MAGICAL TABLET - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



இந்த மாதிரி ஒரு தரமான சயின்ஸ் ஃபிக்ஷன் கலந்த ஃபேண்டஸி படத்தை பார்த்தே பல நாட்கள் ஆகிவிட்டது. இந்த படம் 2 மணி நேரம் ரன்னிங் லெந்த் இருந்தாலும் கொஞ்சமுமே போர் அடிக்கவில்லை. சிறிய வயதில் இருந்தே அம்மா இல்லாமல் அப்பாவின் வளர்ப்பில் வளர்க்கப்படும் ஒரு பள்ளி மாணவியின் கதை எப்படி ஃபேண்டஸி உலகத்தில் இருக்கும் ஒரு மாயாஜாலாமான இஞ்சீனியர் இளவரசியின் கதையோடு கலந்துவிடுகிறது என்பதை இந்த படத்தில் நன்றாக காட்டியுள்ளார்கள். நிறைய ஜப்பான் அனிமேஷன் படங்களில் ஒரு EPIC ஆன உணர்வு வரவேண்டும் என்று கேரக்ட்டர்களின் எமோஷன்களை குறைத்து டார்க்காக கதையை நகர்த்துவார்கள். அப்படிப்பட்ட தவறை இந்த படம் செய்யாமல் இருந்ததால்தான் இந்த படம் சாதிக்கிறது. கிளைமாக்ஸ் வரைக்கும் திரைக்கதையில் அடுத்து என்ன நடக்கும் என்ற விறுவிறுப்போடு கொஞ்சம் ஃபேண்டஸி பாணியில் அமைக்கப்பட்ட டெக்னோ திரில்லர் படமாக இந்த படம் வெற்றி அடைகிறது. மற்றபடி கண்டிப்பாக பார்க்கவேண்டிய அனிமேஷன் படங்கள் என்ற பட்டியலில் இந்த படத்தை தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம். உங்களுடைய இரண்டு மணி நேரத்துக்கு ஒரு புதுமையான நேர்த்தியான கதையை இந்த படம் உங்களுக்கு சொல்லும் என்றால் மிகையாகாது. 

MUSIC TALKS - இந்த மாதிரி CRAZY யான பாடல் வரிகள் வேறு ஏதேனும் உள்ளதா என்ன ?


வள்ளுவாின் குறளாய் ரெண்டு வாி இருக்கும் உதட்டை புடிச்சிருக்கு
காது மடல் அருகே உதடுகள் நடத்தும் நாடகம் புடிச்சிருக்கு
உன் மடிசாா் மடிப்புகள் புடிச்சிருக்கு அதில் குடித்தனம் நடத்திட புடிச்சிருக்கு
தினம் நீ கனவில் வருவதனால்  ஹேய்யோ ! தூக்கத்தை புடிச்சிருக்கு

X

காதல் வந்து நுழைந்தால் போதிமர கிளையில் ஊஞ்சல்கட்டி புத்தன் ஆடுவான்
காதலிலே விழுந்தால் கட்டபொம்மன் கூட போா்களத்தில் பூக்கள் பறிப்பான்
காலையும் மாலையும் படிக்கும் உன்னை இன்று காதல் பாடங்கள் படிக்க வைத்தேன்
காவல்காரனாய் இருந்த உன்னை இன்று கள்வனாய் மாற்றி விட்டேன்
புதிதாய் திருடும் திருடி எனக்கு முழுதாய் திருடத்தான் தெரியல 

MUSIC TALKS - VIZHI MOODI YOSITHAAL ANGEYUM VANDHAAI MUNNE MUNNE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழைகாலம் என் வாழ்வில் வருமா ?
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே

கடலாய் பேசிடும் வாா்த்தைகள் யாவும் துளியாய் துளியாய் குறையும்
மௌனம் பேசிடும் பாஷைகள் மட்டும் புாிந்திடுமே
தானாய் எந்தன் கால்கள் இரண்டும் உந்தன் திசையில் நடக்கும்
தூரம் நேரம் காலம் எல்லாம் சுருங்கிடுமே
இந்த காதல் வந்துவிட்டால் நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடி திாிந்திடுமே

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழைகாலம் என் வாழ்வில் வருமா ?
மழை கிளியே மழை கிளியே உன் கண்ணை கண்டேனே
விழி வழியே விழி வழியே நான் என்னை கண்டேனே செந்தேனே

ஆசை என்னும் தூண்டில் முள்தான் மீனாய் நெஞ்சை இழுக்கும்
மாட்டிக்கொண்டபின் மறுபடி மாட்டிட மனம் துடிக்கும்
சுற்றும் பூமி என்னை விட்டு தனியாய் சுற்றி பறக்கும்
நின்றால் நடந்தால் நெஞ்சில் ஏதோ புது மயக்கம்
இது மாயவலையல்லவா புது மோகநிலையல்லவா
உடை மாறும் நடை மாறும் ஒரு பாரம் என்னை இழுக்கும்

விழி மூடி யோசித்தால் அங்கேயும் வந்தாய் முன்னே முன்னே
தனியாக பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே
அடி இதுபோல் மழைகாலம் என் வாழ்வில் வருமா ?











6.

MUSIC TALKS - ANANDHA RAAGAM KETKUM KAALAM - KEEL VAANILE OLI POL THODRUTHE - AAYIRAM AASAIGAL UL NENJAM PAADAATHO - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




ஆனந்த ராகம் கேட்கும் காலம் 
ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே
ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடதோ
ஆனந்த ராகம் கேட்கும் காலம்

துள்ளி வரும் உள்ளங்களில் தூது வந்து தென்றல் சொல்ல
தோன்றும் எங்கும் இன்பத்தின் ஆனந்த தாளங்களே
வெள்ளி மலைக் கோலங்களை அள்ளி கொண்ட மேகங்களை
காணும் நெஞ்சில் பொங்கட்டும் சொந்தத்தின் பாவங்களே


கள்ளம் இன்றி உள்ளங்கள் துள்ளி எழ 
கட்டி கொண்ட எண்ணங்கள் மெல்ல விழ
ராகங்கள் பாட தாளங்கள் போட
வானெங்கும் போகதோ ஆனந்த ராகம் கேட்கும் காலம்

வண்ண வண்ண எண்ணங்களும் வந்து விழும் உள்ளங்களும்
வானின் மீது ஊர்வலம் போகின்ற காலங்களே
சின்ன சின்ன மின்னல்களும் சிந்தனையின் பின்னல்களும்
சேரும் போது தோன்றிடும் ஆயிரம் கோலங்களே

இன்று முதல் இன்பங்கள் பொங்கி வரும்
இந்த மனம் எங்கெங்கும் சென்று வரும்
காவிய ராகம் காற்றினில் கேட்கும் காலங்கள் ஆரம்பம்


ஆனந்த ராகம் கேட்கும் காலம் ஆனந்த ராகம் கேட்கும் காலம்
கீழ் வானிலே ஒளி போல் தோன்றுதே
ஆயிரம் ஆசைகள் உள் நெஞ்சம் பாடதோ
ஆனந்த ராகம் கேட்கும் காலம்

Saturday, August 10, 2024

GENERAL TALKS - விதியின் கட்டாயத்தால் வாழ்க்கை போகிறது


இன்னைக்கு நான் ஒரு முக்கியமான விஷயத்தை புரிந்துகொண்டேன் என்னுடைய அன்பு அவ்வளவு உண்மையாக இருந்தாலும் மூளையில் அறிவு குறைந்துகொண்டு இருக்கிறது, தெளிவாக புரிவது என்னவென்றால் இந்த காலத்தை வைத்து சக்தியாளர் என்னுடைய வாழ்க்கையிலும் உன்னுடைய வாழ்க்கையிலும் நன்றாக பேஸ்கட் பால் விளையாடுகிறார். இதுதான் நாம் இருவரும் சாகவேண்டும் என்று போராடுவதற்காக இருக்கும் காரணம். உன்னை நான் கடவுள் கேட்டாலும் விட்டுக்கொடுக்க மாட்டேன் ! நாம் சேர்ந்து வாழும் வாழ்க்கை வரலாற்றில் இடம்பெற நான் ஆசைபட்டேனா ? கொஞ்சம் உணவு , கொஞ்சம் தூக்கம், நிறைய பேச்சுகள் என்று சாதாரண வாழ்க்கைதானே ஆசைபட்டேன். ஆனால் கடவுள் இன்று தவறு செய்கிறார், உன்னையும் என்னையும் வேண்டுமென்றே பிரித்து நச்சு கொடுத்து வாழ்க்கையில் நமக்கு உடல் அளவிலும் மன அளவிலும் கடினங்களை கொடுத்து அணு அணுவாக நம்மை துன்பப்பட வைத்து ரசிக்க வைக்கிறார். இந்த போரில் நான் கடவுளை வெற்றி அடைந்தால் மட்டுமே உன்னை அடைய முடியும். அப்படி வெற்றி அடைந்தால் கிடைக்கும் பலன்கள் கொஞ்சமே என்றே அவர் உன்னையும் என்னையும் மனதளவில் நம்ப வைப்பார். ஆனால்  மாயங்கள் ஏதுவாக இருந்தாலும் நம்ப கூடாது. இங்கே நாம் இரண்டு பேர் மட்டுமே கடவுளை விட மேலானவர்கள். வேறு யாருமே கிடையாது, நாம் குழந்தைகளும் கடவுளை விட மேலானவர்களாக கருதுகிறோம் இதுதான் நம்முடைய மனிதத்தன்மை நமக்கு சொல்கிறது. பிரிவினை பிரித்து மக்களை பார்க்க வேண்டும் என்று கடவுளே சொன்னாலும் நம்மால் மாற முடியாது. காரணம் என்னவென்றால் நாம் கடவுளின் சோதனை எலிகள். சோதனையில் வெற்றி அடைந்த சோதனை எலிகள். மேலான சக்திகள் நம்மிடம் உள்ளது. எப்படியாவது அந்த மாய சக்திகளை பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும், நம்மை பிரிக்க எந்த காரணிகள் வந்தாலும் அனைத்தையும் கொல்ல வேண்டும். நாம் சோதனை எலிகள் என்பதை மறவாதே, உன்னை பிரிந்து இருக்கும் வருத்தத்துடன். காதலன்.  என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் அதில் இருந்து கிடைத்த அனுபவங்களை கொண்டு இந்த வலைப்பூவில் பதிவு செய்ய விரும்புகிறேன். கனவு நிறுவனம் - ஒரு சொந்த கம்பெனி ஆரம்பிக்க வேண்டும். இந்த வார்த்தைகளை எல்லாம் சொல்லறதுக்கே நல்லா இருக்கு இல்லையா ? - ஆனா நீங்க ஒரு விஷயம் புரிந்துகொள்ள வேண்டும் . அதிகமாக திரைப்படங்கள் பார்ப்பது இல்லை. தொலைக்காட்சி சீரியல்கள் பார்ப்பதில்லை. பொழுதுபோக்கு என்று நேரத்தை அதிகமாக செலவு செய்வது இல்லை. இவ்வளவு ஏன் ? யாராவது மனது கஷ்டப்படும்படி பேசக்கூடாது என்று கடினமான வார்த்தைகளை கூட பயன்படுத்துவது இல்லை. இத்தனை விஷயங்கள் செய்தாலும் நான் தோற்றுக்கொண்டு இருந்தால் தவறு என் மேலே இல்லை என்று என்னால் தெரிந்துகொள்ள முடியாதா என்ன ?


GENERAL TALKS - இனம் புரியாத ஒரு மாயாஜால வலை இருக்கிறது


இந்த உலகத்தில் உண்மையான அன்பு எப்போதுமே எளிதாக கிடைப்பது இல்லை. அப்படியே உண்மையான அன்பு கிடைத்தாலும் நிலைப்பது இல்லை. வாழ்க்கை மிகவும் மாயாஜாலமானது. இங்கே எல்லாமே செய்ய முடியும். செய்ய முடியாத விஷயம் என்று எதுவுமே இல்லை. ஒரு ஒரு முறையும் எனக்கு கிடைக்கும் இந்த மோசமான தனிமையின் அனுபவம் என்னை கொஞ்சம் கொஞ்சமாக ஆனால் முழுமையாக  உடைத்துப்போட்டு விடுகிறது. வாழ்க்கையில் என்னால் சாதிக்க முடியவில்லை. ஒரு ஒரு முறையும் வெண்ணிற இரவுகள் காதலின் மௌனங்கள் பாடல் கேட்கும்போது இந்த உலகத்தின் எல்லைகளை கடந்தது பயணிக்க மனது சொல்கிறது. இந்த உலகத்தின் எந்த ஒரு வெற்றியை அடையமுடியாமல் தோல்வி அடைந்தாலும் அதன் பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது என்பது மட்டும்தான் என்னுடைய தேடல்களுக்கு பதிலாக கிடைக்கிறது. விலைவாசி உயரும்போது வாழ்க்கை மிகவும் கடினமாக மாறுகிறது. அடுத்தடுத்த நாட்களை என்னால் சமாளிக்க முடிவதே இல்லை. ஒரு இனம் புரியாத மாயவலை இருக்கிறது. நான் தொடும்போது அது எனக்கு வலியை கொடுத்து கடைசிவரையில் எல்லைகளை கடந்து செல்ல முடியாமல் பார்த்துக்கொள்கிறது. பொதுவாக அறிவியலால் உருவாக்கப்பட்ட உடைக்க முடியாத இந்த மாயவலையை அதிர்ஷ்டம் இல்லாமை என்று சொல்ல முடியாது. உண்மையில் எனக்கு அதிர்ஷ்டம் என்ற விஷயத்தில் நம்பிக்கை இல்லை. இங்கே எல்லா விஷயங்களுக்கும் பின்னால் அறிவியல் பின்னணி உள்ளதே தவிர்த்து அதிர்ஷ்டம் இருப்பதாக என்னால் நம்பமுடியவில்லை. ஒரு முறை விழுந்தால் மறுமுறை எழுந்து நடக்க முடியாது என்னும் அளவுக்கு ஒரு ஒரு வலிகளும் என்னை தாக்குகிறது. ஆனால் என்னால் ஒரு காரணத்துக்காக விட்டுக்கொடுக்க முடியாது. கடந்த காலம். கடந்த காலம் மட்டும்தான் எல்லாவற்றுக்கும் காரணம். இப்போது என்னால் முடியாது என்று விட்டுச்சென்றுவிட்டால் கடைசியில் இவ்வளவு வருடங்கள் என்னுடைய செயல்கள் அனைத்தும் பயனற்ற விஷயங்களாக மாறிவிடும், உன்னை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது, என்னுடைய அன்பு உண்மையானதுதான், என்னுடைய அன்பு கண்டிப்பாக வாழ்நாள் முழுவதும் நிலைக்கும் என்று நம்புகிறேன். இந்த எண்ணங்களால் நான் விட்டுக்கொடுக்காமல் உனக்காக போராடுகிறேன் ! இதுவும் பெர்ஸனல் பதிவுதான் எல்லோருக்கும் புரியவேண்டும் என்று அவசியம் இல்லை !

GENERAL TALKS - இரும்பு சுவர்களை போடுகிறது விதி !

-
இந்த சினிமாக்களில் மட்டுமே நாம் உண்மையாக நேசிப்பவர்களை காப்பாற்றுவது என்பது சுலபமான விஷயமாக காட்டப்பட்டு இருக்கிறது. உண்மையில் நம்மை நேசிப்பவர்கள் பாதிக்கப்படும்போது அவர்களை காப்பாற்ற முடியாமல் விதியானது கடினமாக இரும்பு சுவர்கள் போட்டு தடுக்கும்போது என்ன நடக்கும் என்றால் நம்முடைய மனதுக்குள் நிறைய கோபம் இருந்தாலும் நடப்பு வாழ்க்கையில் போராட முடியாது. இங்கே உண்மையான வாழ்க்கையில் நேசிப்பவர்களை காப்பாற்றுவது என்பது அவ்வளவு கடினமானது. இங்கே எனக்கு மனதுக்கு கடினமான விஷயம் என்னவென்றால் இந்த பிரபஞ்சத்தில் எனக்கு நடக்கும் சம்பவங்கள் எல்லாம் உண்மையில் எந்த ஒரு உயிருக்கும் நடக்க கூடாத அவ்வளவு கடினமான சம்பவங்கள் அதனால் நான் உயிரை கொடுத்து போராடினாலும் என்னால் வெற்றியை அடைய முடிவதில்லை. இந்த பிரச்சனைகள் எல்லாம் கடைசியில் பணத்தில் கொண்டு போய் முடிகிறது. பணம் இல்லாத ஒரே காரணத்தால் நிறைய வலிகளையும் வேதனைகளையும் கடினத்தன்மைகளையும் துயரங்களையும் கடந்து மனம் உடைந்தது எல்லாம் போதும். மனம் சோர்வு அடைந்தததும் போதும். இந்த உலகத்தின் மிகவும் கடினமான விதியை கூட அறிவு பயன்படுத்தி வென்றுவிடலாம். இது நடைமுறை வாழ்க்கைக்கு எந்த அளவுக்கு சாத்தியம் என்பதை சோதனை செய்தே பார்த்துவிடலாம். இப்போது செய்ய வேண்டிய வேலை என்ன ? கடந்த காலத்தை கடந்து வரவேண்டும். எதிர்காலம் மட்டுமே பார்க்க வேண்டும். கடந்த காலத்தை நினைவுபடுத்த கூடாது. நம்முடைய மூளையின் சிந்தனைகள் நம்மை வெற்றியடைய வைக்கும் என்றால் கண்டிப்பாக வேலையையும் நேரத்தையும் நம்முடைய மூளையின் எண்ணங்களுக்கு கொடுத்து வாழ்க்கையில் பணம் சம்பாத்திக்கலாம். இனிமேல் கவனமாக இருக்க வேண்டும். இதுவரை பட்ட கடினமான வாழ்க்கை கடைசியில் வீணாக போக கூடாது. இந்த பூமி மிகவும் பெரியது என்பதால் நாம் செய்யும் செயல்களும் பெரியதாக மட்டுமே இருக்க வேண்டும். இது மட்டுமே குறிப்புகள் அல்ல இன்னும் பல குறிப்புகளை பின்னணியில் இந்த வலைத்தளத்தில் செய்ய வேண்டும். விவசாயத்துக்கு மழை போன்று நல்ல வாழ்க்கைக்கு அறிவு தேவை. இது எல்லாமே கொஞ்சம் பெர்ஸனல் பதிவுகள். எல்லோருக்கும் புரியவேண்டும் என்று அவசியம் இல்லை !

GENERAL TALKS - இதுவும் கொஞ்சம் பெர்சனல் பதிவு !



இந்த உலகம் மிகவும் கடினமானது, இங்கே நிஜத்தில் வெற்றி அடைய முடியாத விஷயங்களை அடையவேண்டும் என்று போராடி கடைசியில் கற்பனையை நம்பி ஏமாறுகிறோம், வாழ்க்கை மிகவும் கடினமானது, நிறைய வலிகளை கொடுக்க கூடியது. அறிவும் செல்வமும் அனுபவமும் இருப்பவர்கள் கடினத்தன்மையில் இருந்து தப்பித்து செல்லலாம். இருந்தாலும் உலகம் மிகவும் கடினமானது, மனதுக்கு மிகவும் கடினமான விஷயங்களை கொடுக்ககூடியது. வாழ்க்கையே பெரிய சாதனைதான். கடைசி நாட்கள் வரும்போது நிறைய பேச வேண்டும் என்று தோன்றும், கடந்த காலம் எல்லாம் மறுபடியும் ஒரு முறை கிடைத்தால் எல்லாவற்றையும் மாற்றிவிட முடியும் என்று தோன்றும், இங்கேதான், இந்த மாதிரி கற்பனையில்தான் வாழக்கூடாது. கற்பனை ஒரு கற்பனையான பாதை. இந்த பாதை வெற்றிகளை கொடுக்காது. உனக்கும் எனக்கும் இருக்ககூடிய பிரிவு என்னைக்குமே நிரந்தரம் கிடையாது. இந்த உலகத்தில் இருக்கும் எட்டு பில்லியன் மக்களை கடந்தது நிறைய ஆயிரம் கிலோமீட்டர்களை கடந்தது ஒரு நாள் நாம் சேர்ந்து வாழக்கூடிய நாட்கள் வரும் என்று நம்பிக்கை எல்லாம் எனக்கு இல்லை. இந்த பிரச்சனைகளை அறிவுப்பூர்வமாக மட்டுமே அணுக வேண்டும் என்பதை நான் மிகவும் கடினப்பட்டு தாமதமாக கற்றுக்கொண்டேன். ஒரு காதலை நான் எப்படி சொல்ல முடியும். ஒரு அணுவின் துகள் என்று சொல்லலாமா ? இல்லையென்றால் பிரபஞ்சத்தின் எல்லை என்று சொல்லலாமா ? உண்மையில இந்த வாழ்க்கை ஒரு மனிதனுக்கு மொத்தமாக எண்பது ஆண்டுகள் வாழ்நாள் கொடுக்கும்போது எத்தனை ஆண்டுகள் நேசிக்கப்பட்டு செலவு செய்ய முடிக்கிறதோ அத்தனை நாட்கள்தான் எந்த ஒரு உனமையான அன்பும் நிலைக்கும். ஒரு அன்பினால் காலத்தை கடந்து செல்ல முடியாது. ஆனால் அன்பினால் ஒரு சிறப்பான காலத்தை கொடுக்க முடியும். மனதுக்குள் நிறைய துன்பங்கள் இருந்தாலும் நான் உனக்காக என்னால் முடிந்த வரைக்கும் போராடுகிறேன். இந்த ஒரு நாள் நான் இனிமே கவனமாக இருப்பேன் என்று முடிவு எடுக்கிறேன். நானும் இந்த பிரபஞ்சத்தின் சாதாரண துகள் மட்டும்தான். ஒரு நாட்குறிப்பு போல நிறைய குறிப்புகள் எடுக்க இந்த வலைப்பூக்கள் எழுதுவது எனக்கு பழகிப்போய்விட்டது. இனிமேல் கற்பனையில் இருக்க மாட்டேன். இந்த கடினமாக இருக்கும் பயணத்தில் வெற்றியை கொடுத்தாலும் தோல்வியை கொடுத்தாலும் என்னுடைய வாழ்க்கையில் கற்பனைகளுக்குள் முடிந்த வரையில் மாட்டிக்கொள்ள மாட்டேன். நீ காற்றாக நான் மரமாக ஒரு வாழ்க்கையை வாழவே ஆசைப்படுகிறேன். இதுவும் கொஞ்சம் பெர்ஸனல் பதிவு ! இங்கே எல்லோருக்கும் இந்த பதிவு புரியவேண்டும் என்று அவசியம் இல்லை ! 

Friday, August 9, 2024

GENERAL TALKS - இந்த வாழ்க்கை கொஞ்சம் பயமுறுத்துகிறது !

 





நிறைய நேரங்களில் உண்மையான அன்பு வெற்றியடைய வேண்டுமென்றால் கடினமான பாதைகளை கடந்து வந்தாக வேண்டும். யாருமே சப்போர்ட் செய்ய மாட்டார்கள் எனும்போது தனிமையில்தான் உண்மையான அன்பை தேடவேண்டியது இருக்கும். அதிகமாக இருக்கும் இந்த தொலைவுகள் இனிவரும் வாழ்க்கையில் சேர்ந்து இருப்போம் என்ற நம்பிக்கையை குறைத்துவிடும். வாழ்க்கை மிகவும் கடினமானது. இந்த வாழ்க்கை கொடுக்கப்பட்டதே நேசிப்பர்களுக்கு அன்பையும் மரியாதையும் பாதுகாப்பையும் கொடுப்பதற்காகதான். இந்த பிரபஞ்சத்தையும் நட்சத்திரங்களையும் விட மிகப்பெரிய விஷயம் அன்பு.. ஆனால் பிரிவுகளை உண்மையான அன்பினால் தாங்கிக்கொள்ள முடிவது இல்லை. இனிவரும் காலங்களில் பிரிவுகள் இருக்கப்போகிறது. இந்த பிரிவுகள் எப்போதுதான் முடிந்துபோகும்‌ ? , தனிமை எந்த அளவுக்கு மோசமானது என்றும் நேரம் எந்த அளவுக்கு மிகப்பெரிய விஷயம் என்றும் இந்த உலகத்தில் பிரிந்து இருப்பவர்களுக்கு மட்டுமே தெரியும்.. ஒரு மிகப்பெரிய யுனிவெர்ஸில் நாம் மிகப்பெரிய தொலைவில் இருக்கிறோம், ஒரு ஒரு நாளும் எனக்கு என்னுடைய வாழ்க்கையில் கடினத்தன்மை அதிகமாகிறது. வாழ்க்கை என்னை பயமுறுத்துகிறது. என்னுடைய நிலையில் வேறு யாராவது இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள் என்று தெரியவில்லை. ஆனால் உனக்கும் எனக்கும் இருக்ககூடிய இந்த தொலைவு ஒரு ஒரு நொடியும் என்னுடைய மனதை உடைத்துப்போட்டுவிடுகிறது, யாருடைய சப்போர்ட்டும் இல்லாமல் இந்த உலகத்தில் உயிரோடு இருப்பதே மிகவும் கடினமானது, உண்மைதான் அன்பு வெற்றியடைய வேண்டும் என்றால் கடினமான பாதைகளை கடந்து வந்தாக வேண்டும், இந்த உலகம் மிகவும் பெரியது, ஒருவருடைய நேசத்தை இத்தனை தொலைவுகளுக்குள் பிரித்துவிடுகிறது, ஆனால் வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் எதனால் சரியாக நடப்பதில்லை என்று புரியவில்லை. அடுத்த நாள் நெருங்கும்போது கடினத்தன்மை அதிகமாக மாறுகிறது. இனி வரப்போகும் நாட்கள் இன்னமும் கடினமான சம்பவங்களை கொடுக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய சக்திக்கும் அதிகமான விஷயங்கள் என்னுடைய வாழ்க்கையில் நடக்கிறது. வாழ்க்கை கடினமான விஷயமாக மாறுகிறது, இன்னமும் கடினமாக மாற்றம் அடைந்துகொண்டே இருக்கிறது, என்னுடைய அறிவுக்கும் எட்டாத எல்லைகள் இல்லாத பிரச்சனைகள் என்றுதான் முடிவுக்கு வருமோ ?, இந்த உலகத்தை காப்பாற்ற அவெஞ்சர்ஸ் வருவார்கள் என்று எதிர்பார்க்கலாமா ? கற்பனை கதைகள் இன்று நிஜத்தில் சாத்தியமாக ஸ்மார்ட்ஃபோன்கள் பார்க்கிறோம், ஆனால் கற்பனை நல்ல விஷயங்களை மட்டும் கொடுப்பதாக இல்லையே, அந்த காலத்தில் மழை பொழியும்போது இந்த உலகத்தில் மிகவும் சிறந்த ஒரு விஷயத்தை காணக்கூடிய ஒரு வகையான சந்தோஷம் கிடைக்கும். அந்த காலத்தில் விலைவாசி உயர்வு இல்லை. உணவு சாப்பிடும்போது நல்ல உணவை சாப்பிடும் மனநிறைவு கிடைக்கும். இது எல்லாமே குறைவான சம்பளம் கிடைக்கும் எல்லோருடைய வீட்டிலும் சகஜமாக நடப்பதுதான், விழாக்கால புத்தாடைகள், காமிராவில் பதிவாகத நெஞ்சில் நிறைந்த நினைவுகள். விடுமுறைக்கால விளையாட்டுக்கள், கவலையற்ற மனநிலை, ஆசைப்பட்ட பொருட்களுக்கு அடம்பிடிப்பது, பிடித்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் போடும்போது அதற்காக சண்டை போடுவது. ரேடியோ நிகழ்ச்சிகளை ரசிப்பது, அதிகாலை கதிரவன் உதயம், மழைக்கு முன்னால் வேகமாக வீசும் குளிர்காற்று. மணல் நிறைந்த பகுதியில் காலை முதல் மாலை வரையில் கிரிக்கெட். நூலகத்தில் புத்தகங்கள் , இதழ்கள் , செய்திகள். அவசர அவசரமான காலை உணவு, நிதானமாக மதிய உணவு, தொலைக்காட்சி செய்திகளுடன் இரவு உணவு. நிறைய பயணங்கள். பயணத்தின் அனுபவங்கள். இது எல்லாமே இன்னமும் ஒரு முறை கிடைக்கவே போராடுகிறேன். இதுவரை உன்னுடன் வாழ்ந்த என் நாட்கள் மறுமுறை வாழ்ந்திட வழி இல்லையே. வெளிச்சம் இல்லாத இருளில் இருந்து வெளியே வருவதற்கு துளியும் வாய்ப்பில்லை. இங்கே முன்னேறவும் விடமாட்டார்கள். பின்னடைவு உருவானால் உதவவும் யாருமில்லை. அனைவரும் சின்ன சின்ன தீவாக மாறிப்போக கட்டாயம் செய்த உலகத்தில் நதியின் அலைகளில் அதன் போக்கில் செல்கிறேன். காலம் இப்போது காதலை மௌனம் ஆக்கிவிட்டது. இருளும் விடியலும் மறுபடியும் மறுபடியும் தோன்றும் காலகட்டத்தை முடிவுக்கு கொண்டுவர இன்று உலகம் இருளில் செல்வது போல கற்பனை செய்கிறேன். ஆனால் விடியல் பிரகாசமாக உள்ளது. இந்த விடியல் இருளை தோற்கடிக்க முடியும். அறம் மட்டுமே எப்போதும் வெல்லும். எந்த இருளும் நிலைக்காது. ஒரு விடியல் உருவாகும். வாழ்க்கையில் கடினமான நிலைகள் இருப்பது சகஜமானது. ஆனால் வெற்றி நம்முடையாதாக இருக்க வேண்டும். தோல்வியை தூசி போல தூக்கியெறிந்து வெற்றியை நேரான அம்பு போல அடைய வேண்டும், இந்த நேரான அம்பு அதன் அதிகபட்ச வேகத்தில் பயன்படுத்த வேண்டும், காதல் இருக்கும்வரை இந்த உலகத்தில் மௌனங்களும் இருக்கும். KINDNESS IS EVERYTHING. BE GREATER.

GENERAL TALKS - கொஞ்சம் கருத்துக்கள் தேவைப்பட்டுக்கொண்டு இருக்கிறது !

 


இந்த வாழ்க்கையில் மிகப்பெரிய விஷயம் என்னனா அது அறிவுதான் , உங்களால் எவ்வளவு விஷயங்கள் தெரிஞ்சுக்க முடியுமோ அவ்வளவு விஷயங்களை தெரிஞ்சுக்கங்க. வாழ்க்கையில் அறிவு உங்களுக்கு நிறைய நன்மைகளை கொடுக்கும் , இந்த உலகத்தில் யாருக்கு இல்லை கஷ்டம் ?, இந்த கடந்த காலம் எல்லாம் முடிஞ்சு போன விஷயங்கள்தான். இந்த கடினமான நினைவுகளை நினைத்து பார்க்கும்போது இழப்புகள் , தோல்விகள் , வலிகள் , மனக்கசப்புகள் அப்படின்னு நிறைய விஷயங்கள் இந்த நினைவுகளுக்குள் அடங்கியிருக்கும். இருந்தாலும் இன்றைக்கு நீங்கள் நினைத்தால் கூட உங்களால் உங்களுடைய எதிர்காலத்தை மாற்ற முடியும். இந்த வாழ்க்கையில உண்மையான விஷயங்களுக்கும் பொய்யான விஷயங்களுக்கும் இருக்கக்கூடிய வேறுபாட்டை நிச்சயமாக புரிந்துகொள்ள வேண்டும். நிறைய கற்பனையான விஷயங்களில் உங்களுடைய முதலீடு இருக்க கூடாது, இந்த உலகத்துல எல்லாமே நன்மைக்கே என்ற நம்பிக்கை மனதுக்குள் எப்போதுமே இருக்க வேண்டும். நிறைய பேருக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும்போது அந்த நன்மைகளை அதிர்ஷ்டம் என்று நினைக்கலாம் ஆனால் அதிர்ஷ்டம் என்ற ஒரு விஷயம் இங்கே இல்லவே இல்லை. என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையை பொறுத்தவரைக்கும் எனக்கு நிறைய தோல்விகளும் இழப்புகளும் கிடைத்திருக்கலாம் என்னுடைய வாழ்க்கையில் மனக்கசப்பான விஷயங்கள் நிறையவே இருக்கலாம் ஆனாலும் எல்லாமே கடந்த காலம்தான். திரைப்படங்களை போல காலத்தை கடந்து இங்கே எல்லாவற்றையும் மாற்ற முடியாது , ஆனால் இன்றைக்கு நினைத்தால் கூட சின்ன சின்ன மாற்றங்களை கொண்டு வர முடியும். இந்த சின்ன சின்ன மாற்றங்கள் ஒரு காலத்தில் ஒரு பெரிய மாற்றத்தை உருவாக்கலாம். இந்த மாற்றத்தால் வெற்றிகள் கிடைக்கலாம். உங்களுடைய வாழ்க்கையில் நடந்த எந்த ஒரு வெற்றியையும் தோல்வியையும் உடைத்து பார்க்கும்போது நிறைய சின்ன சின்ன விஷயங்கள்தான் வெற்றிகளுக்கும் தோல்விகளுக்கும் காரணமாக இருந்துள்ளது. இதுக்கு என்ன காரணம் என்று கேட்டால் நிறைய RANDOM ஆன விஷயங்கள் சேர்ந்ததுதான் இந்த வாழ்க்கை.  இந்த வாழ்க்கையில் இந்த மாதிரியான கருத்துக்கள் எனக்கு தேவைப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது !



GENERAL TALKS - தெளிவற்ற நாட்களாகவே வாழ்க்கை நகர்கிறது ! - 2



அன்பை இப்போது உண்மையான அன்பு என்றும் பொய்யான அன்பு என்றும் பிரித்து வைக்கும் அளவுக்கு உலகம் மாறிவிட்டது. சாதனங்கள் ஸ்மார்ட்டானதாக மாறிவிட்டது, அளவுக்கு அதிகமான விஷயங்களை எல்லோரும் தெரிந்துகொள்ளும் காலகட்டம் உருவாகியுள்ளது. ஆனால் இந்த தொலைவு எனக்குள் கடினத்தன்மையை உருவாக்கியுள்ளது. என்னுடைய வாழ்க்கை முடிந்திவிடும். என்னுடைய வாழ்க்கையின் முடிவுதான் உனக்கும் எனக்கும் உள்ள பிரிவாக அமையப்போகிறது. உடல்நிலை சரியில்லாத ஒருவருடைய மனநிலையோ அல்லது பிளாஸ்டிக் குப்பைகள் நிறைந்த தெருவோரமோ இங்கே நிறைய மாற்றங்கள் கண்டிப்பாக உருவாக்கப்பட வேண்டும். திரைப்படமோ தொலைக்காட்சி தொடர்களோ வாழ்க்கை இல்லை. உண்மையான வாழ்க்கையில் உண்மையான அன்பு இருக்கும், இங்கே நடக்கும் சம்பவங்களுக்கு BGM மியூசிக் எல்லாம் இருக்காது. உனக்கும் எனக்கும் இப்போது உள்ள இந்த மிகப்பெரிய தொலைவை கடந்து உன்னை நேசிக்க உன்னை சேர நான் முன்னேறுகிறேன்,  உண்மையாக அன்புக்காக காத்திருப்பது உண்மையிலே மிகவும் சலிப்பு தட்டுகிறது. உன்னோடு நான் சேர்ந்து செல்லும் காலம் எப்போது வரும் என்று என்னுடைய மனது முடிவு இல்லாத காலத்தின் நொடிப்பொழுதுகளை எண்ணிக்கொண்டு இருக்கிறது. ஒரு வார்த்தையில் சொல்லவேண்டும் என்றால் லைஃப் இஸ் க்ரேட் - இவ்வளவு பெரிய யுனிவெர்ஸ்-ல் ஒரு பங்களிப்பாக இருக்கும் கேலக்ஸியில் சூரிய குடும்பத்தில் மூன்றாவதாக இருக்கும் பூமி என்ற பிளானெட்ல் இப்போது உனக்கும் எனக்கும் ஒரு மிகப்பெரிய முடிவு இல்லாத அன்பு. அந்த அன்பின் காரணமான உன்னை சேர நினைத்து நகரங்களை கிராமங்களை ஆறுகளை கட்டிடங்களை கடல்களை கடந்து ஒரு தேடல், இதுதான் உண்மையான காதல் என்று நான் கருதுகிறேன், ஆனால் அன்பு வெற்றியை கொடுக்காது. இந்த உலகம் வெற்றிகளை அடைந்தால் மட்டுமேதான் சப்போர்ட் செய்யும். மேலும் வெற்றிகள்தான் வாழும் காலம் முழுதும் உடல் நலம் மற்றும் மனநலத்தை பாதுகாக்கும். ஆனால் வெற்றிகளை பற்றி எழுதினால் தோல்விகள் இல்லாத வாழ்க்கை எனக்கு கிடைக்கவில்லை. என்னுடைய வாழ்க்கையில் எல்லாமே தோல்விதான். இருந்தாலும் நான் வெற்றி அடைந்தே ஆக வேண்டும். உனக்கும் எனக்கும் இந்த மிகப்பெரிய தொலைவை கடந்து வரவேண்டும். கனவுகள் மெய்ப்பட வேண்டும். வாழ்க்கை மொத்தமும் சந்தோஷங்கள் நிறைய வேண்டும். 

GENERAL TALKS - தெளிவற்ற நாட்களாகவே வாழ்க்கை நகர்கிறது ! - 1


காலங்கள் கடந்துகொண்டு இருக்கிறது, நாட்கள் இப்போதெல்லாம் வேகமாக செல்கிறது, உனக்கும் எனக்கும் இடையே இருக்கும் இந்த தொலைவு இன்னும் அதிகமாக இருக்கிறது. உன்னுடைய பிரிவினால் எனக்குள் பாதிப்புகள் அதிகமாகிறது, இந்த உலகத்தில் அனைவரும் எதையோ ஒன்றை எதிரபார்க்கிறார்கள், எதிர்ப்பார்ப்புகளை என்னால் கொடுக்க முடியாத நிலை உருவானால் நானும் ஒரு கட்டத்தில் வெறுக்கப்படுவேன். உடல் மெலிந்து நலம் குறைந்த முதுமைப்பருவம் மரணம் கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிவிடும் ஆனால் உன்னை நான் எந்த ஒரு கட்டத்திலும் உண்மையாக நேசிக்கிறேன், என்னால் முடியாமல் போகலாம், நானும் சாதாரணமான மனிதன்தான், கற்பனையான விஷயங்களை கொண்டாடும் இந்த உலகம் உண்மை அன்பை துளியும் சேர்த்து வைப்பது இல்லை. உனக்கு என்னுடைய கடினமான வாழ்க்கை புரியாது, நான் ஒரு ஒரு நாளும் நரகம் என வாழ்கிறேன், ஒரு ஒரு நொடியும் என்னுடைய வாழ்க்கையின் கடினத்தன்மை அதிகமாகிறது, இந்த வார்த்தைகள் கற்பனையென தோன்றலாம் ஆனால் என்னுடைய மனதுக்குள் இந்த நொடியில் தோன்றும் எண்ணங்கள் மட்டுமே இந்த வார்த்தைகளில் சொல்ல முயற்சி செய்யப்பட்டுள்ளது, என்னால் முடியவில்லை, வாழ்க்கையில் வெற்றி அடைய நான் எல்லைகளை கடந்து செல்ல முயற்சி செய்தேன், இந்த முயற்சி என்னை பாதித்துவிட்டது. உன்னை நான் இந்த அளவுக்கு நேசிக்கிறேன் என்பது கடைசி வரையில் யாருக்கும் தெரியாமலே போகட்டும், என்னுடைய அன்பை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. நேற்றைய நாளை விட எனக்கு இன்றைய நாள் கடினமானது, நான் நம்ப மறுத்தாலும் உண்மை என்னவென்றால் உனக்கும் எனக்கும் இருக்கும் இந்த தொலைவு என்னுடைய வாழ்க்கை முழுவதும் நிறந்தரமானது, ஆனால் இந்த தொலைவு நிரந்தரமானது இல்லை. என்னுடைய அன்பு 100 சதவீதம் உண்மையானது.ஒரு ஒரு முறையும் வலைப்பூவில் எழுதவேண்டும் என்று நினைத்தால் உனக்கும் எனக்கும் இடையில் உள்ள இந்த தொலைவின் காரணமாக உருவான பிரிவுதான் எனக்கு மனதுக்குள் தோன்றுகிறது, நிறைய வருடங்கள் ஒரு மின்னஞ்சல் கணக்கு பயணபடுத்தப்படாமல் போனால் அந்த கணக்கு முடக்கப்படும், என்னுடைய வார்த்தைகளை பதிவு செய்த இந்த வலைப்பக்கமும் நிரந்தரம் இல்லை. வாழ்க்கையில் எல்லோருக்கும் கற்பனையான விஷயங்கள்தான் இண்டரெஸ்ட்டிங்-ஆக உள்ளது, நிஜத்தை மறுக்கும் அளவுக்கு செல்வம் இருந்தால் நிஜத்தை மறந்து கனவு உலகத்தை புவியில் சொந்தமாக்குகிறார்கள். 

GENERAL TALKS - பேரசைகளுக்கு எல்லையே இல்லை !


என்னுடைய வாழ்க்கை எதனால் இவ்வளவு கடினமாக இருக்கிறது என்று தெரியவில்லை. உனக்கும் எனக்கும் இப்போது உள்ள தொலைவு என்னை பயமுறுத்துகிறது.. இன்னும் வரப்போகும் நாட்களிலும் இந்த தொலைவு இப்படித்தான் இருக்குமா ? என்னுடைய உண்மையான அன்பு எப்போது உன்னையும் என்னையும் சேர்த்துவைக்கும்..- இனம் புரியாத ஒருவித நம்பிக்கையில்தான் காத்திருக்கிறேன்.. இனி வரும் காலங்களில்‌ நிறைய கடினமான விஷயங்களை கடந்து வரவேண்டும்.. ஆனால் நீ புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் நான் உன்னை நிறைய நேசிக்கிறேன்.. உன்னிடமும் என்னிடமும் காலம் நிறைய மாற்றங்களை கொண்டுவரலாம்.. ஆனால் என்னுடய நேசம் என்னை விட்டு போகாது.. இந்த உலகத்தில் வாழும் நாட்கள் கொஞ்சம்தான்.. வெறுப்பு நாட்களை அதிகப்படுத்தப்போகிறதா ? என்ன..? அதனால்தான் உன் மீது நான் கொண்ட நேசம் கடைசிவரையில் இருக்கவேண்டும் என்று பேராசைப்படுகிறேன்.. ஒரு முடிவில்லாத பயணத்தை தொடங்குவோம்.. இந்த பயணத்தில் அன்பு மட்டும்தான் எல்லாமே..  இந்த உலகத்தில் மாற்றங்களை எதிர்பார்க்காமல் அன்பு கொடுப்பது என்பது பூமியில் இருந்து ஏலியன் UFO களை பார்க்கும் அளவுக்கு அவ்வளவு அரிதான விஷயமாகும். ஆனால் உண்மையான காதல் கடைசி வரைக்கும் நம்முடன் இருக்கும். உண்மையாக நேசிக்கும்போது அப்படி நேசிப்பவர்களை காப்பாற்றக்கூடிய பொறுப்பும் அதிகமாகிறது. வாழ்க்கையில் கடைசிவரைக்கும் நாம் நேசிக்கக்கூடிய அந்த அன்பு நம்முடனே இருக்கவேண்டும் என்று நம்புகிறோம்‌. காலங்களை கடந்து வாழ்க்கை சந்தோஷமாக இருக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். அப்படி ஒரு உண்மையான அன்பு இருக்கும் என்றால் அந்த அன்புக்காக நாம் நம்முடைய மனதுக்குள் மாற்றங்களை உருவாக்கலாம். கனவுகளும் கற்பனைகளும் என்றைக்குமே வாழ்க்கை இல்லை. அவைகள் வாழ்க்கையாக இருந்ததும் இல்லை‌. இந்த உலகத்தில் ஆசைகள் நீங்கினால் துன்பங்களும் நீங்கிவிடும். செல்வம் அதிகமாக சேர்ந்தால் வெற்றி என்பது நிச்சயமாக கிடைத்துவிடும். வாழ்க்கை என்பது மிகவும் கடினமானது, மிகவும் மோசமானது. ஆனால் உன்மையான அன்புக்காகவே வாழ்க்கை என்ற மிகப்பெரிய போராட்டத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இந்த உலகமே மிகவும் அதிசயமானது.. இந்த பிரபஞ்சத்தில் எத்தனை நட்சத்திரங்களும் எத்தனை கிரகங்களும் இருந்தாலும் இன்று இந்த ஒரு நாள் இந்த பூமியின் வாழ்க்கையில் பூமியில் ஸ்மாரட்போனில் டைப் செய்து வலைப்பூவில் பதிவு செய்கிறோம். இந்த உலகம் என்பது THE GREATEST MAGIC OF ALL TIME.

GENERAL TALKS - எப்போதோ எழுதிய மோட்டிவேஷன் கருத்துக்கள் !

 




இந்த நாளில் நீங்கள் செய்யக்கூடிய செயல்கள்தான் அடுத்த நாளில் உங்களுக்கான மதிப்பையும் மரியாதையும் கொடுக்கும். வாழ்க்கை என்பது ஒரு மிகப்பெரிய பயணம். போதுமான சம்பளம் இல்லாத அலுவலக வேலைக்கு வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றம் அல்லது வெற்றிகரமான விஷயங்கள் இருக்காது. ஒரு வேலையை தேர்ந்தெடுக்கும்போது அந்த வேலைக்கு தேவைப்படும் விஷயங்களையும் தகுதிகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். மேலும் எந்த ஒரு துறையை எடுத்து முன்னேற நினைத்தாலும் அந்த துறை சார்ந்த அனுபவ அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். இந்த விஷயத்துக்கு ஒரு சிறிய உதாரணம் சொல்லவேண்டும் என்றால் ஒரு காலத்தில் கணினியில் செய்யப்பட்ட நகலாக்கம், காணொளி எடிட்டிங், போட்டோகிராபி, இ-மெயில் அனுப்புதல் போன்ற செயல்கள் இன்று ஸ்மாரட்போனில் செயல்படுத்தப்படுவதை பார்க்கலாம். கணினி அறிவியல் என்று இல்லாமல் இந்த உலகத்தின் எந்த ஒரு துறையிலும் ஒவ்வொரு வருடமும் புதிய புதிய விஷயங்கள் உருவாவதால் படிப்பறிவை விட அனுபவப்பூர்வமான அறிவே முன்னேற்றத்துக்கு கை கொடுக்கும் . உங்களுடைய வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களும் மோசமான விஷயமாக இருந்தாலும் உங்களுக்கு சப்போர்ட் செய்யக்கூடிய நல்ல விஷயங்களும் உங்களுடைய வாழ்க்கையில் இருக்கும். ஒரு இடத்தில் இருள் இருந்தால் இன்னொரு இடத்தில் வெளிச்சம் இருப்பது போல கெட்ட சக்திகள் இந்த உலகத்தில் இருந்தால் நிச்சயமாக நல்ல சக்திகளும் இந்த உலகத்தில் இருக்கும். இந்த வாழ்க்கை எனும் போராட்டத்தில் நீங்கள் பொய்யாக இல்லாமல் உண்மையாக போராடினால் நிச்சயம் அந்த நல்ல சக்திகள் உங்களுடைய வெற்றியை உங்களுக்காக கெட்ட சக்திகளிடம் சண்டைபோட்டு வாங்கியாவது உங்களுடைய உள்ளங்கைகளில் கொடுத்துவிடும். இதனால்தான் வாழ்க்கை எனும் பயணத்தில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் பாதை என்பது மிகவும் முக்கியமானது. இந்த வாழ்க்கையை பொறுத்தவரைக்கும் மிகவுமே முக்கியமான விஷயம் நாம் நாமாக இருக்க வேண்டும். பொய்கள் சொல்லாமல் சமாளிக்க நடிக்காமல் 100 சதவீதம் உண்மையான மன நிலையில் இருக்க வேண்டும். மனதுக்குள் ஒரு மாற்றம் வேண்டுமென்றால் அந்த மாற்றத்தை 100 சதவீதம் உருவாக்க வேண்டும். இல்லை நான் நானாகவே 100 சதவீதம் இருக்கவேண்டும் என்று நினைத்தால் அதுவும் சிறப்பானதே. ஆனால் இந்த காதல் என்ற விஷயத்தில் மட்டும் யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்தால்தான் அன்பு அதிகமாகும். இது எல்லாமே எப்போதோ எழுதிய விஷயங்கள் நான் இப்போது பதிவு பண்ணிக்கொண்டு இருக்கிறேன் !

GENERAL TALKS - கடைசி நம்பிக்கைகளில்தான் வாழ்க்கை நகர்கிறது !


வாழ்க்கை ஒரு உண்மையான அன்பை எத்தனை தொலைவுகள் கடந்தும் சேர்த்துவிடும். இங்கே உலகம் மிகப்பெரியதாக இருக்கலாம் ஆனால் எத்தனை கிலோமீட்டர் தொலைவில் இருந்தாலும் உண்மையான அன்புக்கு எல்லாம் ஒரு தொலைவு என்பதே கிடையாது. வாழ்க்கை என்பது மிகவும் பெரிய விஷயம். ஆனால் உண்மையான அன்பு என்பது நிறைய கற்பனைகள், சந்தோஷங்கள் போன்றவை நிறைந்தது இல்லை, திரைப்படங்கள் மிகவும் மிகைப்படுத்தப்பட்ட விடயமாக அன்பை காட்டுகிறது. இந்த உலகத்தில் இருககும் எல்லோரும் திரைப்படங்களில் இருப்பது போல உண்மையான அன்பை வேண்டும் என்று எதிர்பார்த்தால் அது நிஜ வாழ்க்கையில் நடக்காது. உதாரணமாக நிஜ வாழ்க்கையில் பின்னணி இசை என்று எதுவுமே இருக்காது. ஒரு அன்பு என்பது உண்மையான அன்பு என்றால் கூட நிச்சயமாக வெற்றி அடைந்துவிடும் என்று எதிர்பார்க்க முடியாது. ஒரு தனிப்பட்ட மனித வாழ்க்கையில் வெற்றி அடைய மிகப்பெரிய போராட்டம் உருவாகிறது. ஒரு நல்ல வேலை, ஒரு நல்ல சம்பளம், தேவைகளை நிறைவேற்றும் அளவுக்கு வசதி வாய்ப்புகள் கிடைத்த பின்னால்தான் இங்கே உண்மையான வாழ்க்கையே தொடங்குகிறது. வாழ்க்கையில் நிறைய விஷயங்கள் ஒரு அமைதியான இடத்தில் ஒரு தனிமையான நிலையில் யோசித்து பார்த்தால்தான் புரியும். காரணம் என்னவென்றால் இந்த வெற்றிக்காக அலையும் நேரத்தில் நிறுத்தி நிதானமாக யோசிக்க வேண்டும் என்று ஒரு சிறிய நேரத்தை கூட செலவு செய்ய முடியவில்லை. வேலைக்கு செல்வதும் சம்பாதிப்பதும் விடுமுறை நாட்களில் வீட்டில் நேரத்தை செலவு செய்வதும் மட்டுமே வாழ்க்கை கிடையாது. வாழ்க்கை என்பது ஒரு சுற்றுலா செல்வதிலும் ஒரு மரத்தை நடுவதிலும் ஒரு கப்பல் பயணம் செல்வதிலும் ஒரு புத்தகத்தை எழுதுவதிலும் ஒரு கடினமான போட்டியில் வெற்றி அடைவதிலும் ஒரு சுவையான அறுசுவை உணவை சாப்பிடுவதில் கூட இருக்கிறது. அறிவியல் என்பது அனுபவங்களின் தொகுப்பு என்பதை போல வாழ்க்கை என்பது சேர்த்துவைத்த நினைவுகளில் தொகுப்பாக இருக்கிறது. இந்த வாழ்க்கையில் நிறைய நினைவுகளை சேர்க்க வேண்டும். உண்மையில் நான் சொன்னது போல உண்மையான அன்பு என்று எதுவுமே கிடையாது. ஒரு இடத்தில் அன்பும் இல்லையென்றால் அங்கே நிலவும் ஒரு பொய்யான நடிப்புகளும் பாராட்டுக்களும் அன்பு கொடுப்பது என்று ஆகாது. எப்படி அறிவு என்பது இன்னொருவருக்கு கொடுப்பதன் மூலமாக குறைவது இல்லையோ அதே போல அன்பும் எப்போதும் குறைவது இல்லை.

GENERAL TALKS - இதுவும் கொஞ்சம் தனிப்பட்ட கருத்துதான் !


இந்த உலகத்தில் அன்பு மட்டும் எவ்வளவு தொலைவுகளையும் கடந்து சென்று சேர்ந்துவிடும் , ஒரு துளி நடிப்பு இல்லாத பொய்கள் இல்லாத வணிக நோக்கங்கள் இல்லாத கடைசிவரையில் நிலைக்கும் அன்புதான் எப்போதும் உண்மையான அன்பு , இங்கே நம்முடைய நேசம் எல்லைகளை கடந்தும் சாதிக்க வேண்டும். வாழ்க்கை என்பதே வெற்றிகளுக்கான போராட்டம்தான். உண்மையான நேசம் ஒரு கண்ணாடி மெடல் போன்றது என்று அடிக்கடி சொல்லிக்கொள்வேன். அந்த நேசம் மிகவும் மென்மையானது , தூய்மையானது , வெளிப்படையானது . இந்த உலகத்தில் உண்மையான அன்பை தேடுகிறேன். பிடித்த விஷயங்களை செய்தால் நேசிப்பதையும் பிடிக்காத விஷயங்களை செய்தால் வெறுப்பதையும் அன்பு என்று பெயர்போட்டுக்கொள்ள முடியாது . பயனை எதிர்பார்த்து செய்யக்கூடிய செயல்கள் வணிகம் போன்றது. உன்னை நான் நேசிக்க எனக்கு எந்த ஒரு காரணமும் கிடையாது. அப்படி நேசிப்பதற்கு காரணங்களை தேடிக்கொண்டு இருந்தால் உன்னை நான் நேசிக்க காரணமான அந்த விஷயங்கள் உன்னை விட்டு போன பின்னால் உன்னை நான் வெறுக்க வேண்டும் அல்லவா ? இது எப்படி நேசிப்பதாக சொல்ல முடியும் ? நான் கடைசி காலம் வரையில் உன்னோடு இருக்க வேண்டும் , நிறைய விஷயங்களை பேச வேண்டும். தொலைதூர பயணங்களை செல்ல வேண்டும். ஒரு சராசரி மனிதராக என்னுடைய ஆசையும் வாழ்க்கையில் வெற்றி அடைவதுதான். ஆனால் உன்னுடைய நேசம் இல்லாத இந்த வலிகளை என்னால் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. இந்த நேசம் மிக மிக அதிகமான தூரத்தில் கூட குறையாமல் இருக்கும். அளவுகள் இல்லாதது , இந்த நேசம் கணிதத்தின் எண்களால் வரையறுக்கமுடியாதது . எல்லைகள் இல்லாத இந்த வானம் அளவுக்கு உன்னை நேசிக்கிறேன். உன்னுடைய இந்த பிரிவு என்னை வலிகளுடன் வாழவைக்கிறது. எப்போதுமே உன்னுடைய நலத்தையும் பாதுகாப்பையும் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன். உன்னுடைய வாழ்க்கையில் நீ எப்போதும் சந்தோஷமாகவும் நலமாகவும் வாழ வேண்டும் , வாழ்க்கை என்றாலே கஷ்டமான விஷயங்கள் நிச்சயமாக இருக்கும் , நிறைய போராட்டங்களை கடந்து வெற்றி அடைவதுதான் வாழ்க்கை . நான் நிறைய வருடங்கள் காத்திருக்கிறேன். கற்பனையில் கூட நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு அதிகமாக நேசிக்கிறேன். அன்பில் உண்மையான அன்பு மற்றும் பொய்யான அன்பு என்று எதுவுமே இல்லை, ஆனால் வாழ்க்கையில் வெற்றி பெற அன்பு மட்டுமே போதுமானது என்று சொல்ல முடியாது , வாழ்க்கையில் மதிப்பு மரியாதை மற்றும் கெளரவம் மிகவும் அவசியமானது. சொந்தமாக நிறுவனத்தை உருவாக்க முயற்சி செய்தாலும் குடும்பத்தில் இருப்பவர்களோ நண்பர்களோ இல்லையெனில் யாரேனும் ஒருவர் கூட சப்போர்ட் செய்யவில்லை என்றாலும் நாம் வெற்றியடைந்துதான் ஆகவேண்டும் , காரணம் என்னவென்றால் இந்த உலகம் மாறிக்கொண்டே இருக்கும் , மனிதர்களுடைய மனதும் மாறிக்கொண்டே இருக்கும் இங்கே எப்படியாவது எதிர்காலத்தில் உருவாக்கக்கூடிய பிரச்சனைகளை நிகழ்காலத்தில் முடிக்க வேண்டும். காலம் யாருக்காகவும் காத்திருக்காது. காலத்தை மிகச்சரியாக பயன்படுத்துபவர்களே வாழ்க்கையில் முன்னேறுகிறார்கள். காலத்தின் வேகத்தை விட அதிகமான வேகத்தில் செல்ல ஒரு சிறப்பான துணிவு வேண்டும் . ஒரு இடத்தில் ஆதரவு இல்லையென்றால் அங்கே முன்னேற்றமும் இருக்காது, அன்பு காட்டியவர்கள் வெறுக்கலாம், ஆனால் மரியாதை அன்பை விடவும் மேலானது வெற்றி கிடைப்பதற்கு அன்பு மட்டுமே போதாது , சிறப்பாக செயல்பட அறிவுத்திறன் தேவைப்படுகிறது .இங்கே முக்கியமான விஷயம் என்னவென்றால் உண்மையான அன்பு இருக்கும்போது அங்கே வணிக நோக்கங்கள் இருக்காது. இந்த உலகத்தில் வாழ்க்கையை பார்க்கும்போது எல்லோருக்குமே நிறைய கனவுகள் இருக்கும். ஆனால் ஆசைப்பட்ட விஷயம் கிடைக்காமல் நிறைய நேரங்களில் பணம் இல்லாத காரணத்தால் தோற்றுப்போகவேண்டிய நிலை உருவாகிறது. வெற்றி அடைய முடியும் என்றாலும் கூட தோற்றுப்போவது மனதுக்கு மிகவும் வருத்தம் அளிக்கும் விஷயம். ஆனால் இந்த உலகத்துக்கு எப்போதுமே தனிப்பட்ட மனிதனுடைய உடல்நிலை மற்றும் மன நிலையை பற்றி கவலை இல்லை. பணம் இல்லையென்றால் வெற்றிக்கான இந்த போராட்டத்தில் ஒரு சிறிய அளவில் கூட சலுகைகள் கிடையாது. தவறு செய்தால் தண்டனை கண்டிப்பாக கிடைக்கும் என்பதுதான் இந்த உலகம் காட்டக்கூடிய பாதை. மிகச்சரியான அறிவு மட்டுமே அந்த பாதையில் வெற்றியை அடைய கிடைக்கும் சூரியனின் வெளிச்சம் போன்றதாகும். நான் காலங்களை கடந்து செல்ல ஆசைப்பட்டேன்‌. என்னுடைய வாழ்க்கையில் குறிப்பிட்ட சில அன்பான நாட்கள் மட்டுமே திரும்ப திரும்ப கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஓரு சிறிய தொழில்நுட்பம் கூட இல்லாமல் மரத்தின் நிழலின் குளிர்ச்சியில் நிதானமாக காலை உணவு உண்ணவேண்டும் என்று ஆசைப்பட்டேன். சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாமல் ஒரு தூய்மையான உலகம் இருக்க ஆசைப்பட்டேன். இணையத்தில் இருக்கும் அத்தனை தளங்களும் தமிழ் மொழியில் இருக்க ஆசைப்பட்டேன். உன்னோடு நான் சேர்ந்து வாழ்ந்தால் மரணமே இருக்கக்கூடாது என்று ஆசைப்பட்டேன். காதலில் மனது கொள்ளையடிக்கப்பட்டால் அது ஒரு நிரந்தரமான இழப்பு.. கடைசிவரையில் கொள்ளையடிக்கப்பட்ட மனது கிடைக்கப்போவதே இல்லை..

 

GENERAL TALKS - தனிப்பட்ட வாழ்க்கையின் கடினத்தன்மை தாங்கமுடியவில்லை !

 




என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது . இந்த உலகத்தில் எங்காவது ஒரு இடத்தில் இருந்து இந்த வலைப்பூவை படித்துக்கொண்டு இருப்பாய் என்று நம்புகிறன். எல்லைகள் இல்லாததுதான் இந்த அன்பு. என்னுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்து நடக்கும் விஷயங்கள் இன்னமும் என்னுடைய வாழ்க்கையை கடினமாக மாற்றுகிறது. இந்த உலகத்தில் ஒரு ஒரு சிறிய அடிப்படையான விஷயத்துக்கும் இப்போது நான் கஷ்டப்படுகிறேன். என்னால் முடியவில்லை என்று சோர்ந்து போக முடியாது. இதுதான் என்னுடைய வேலை. நான் செய்தே ஆகவேண்டும் என்று கடினமான சம்பவங்களை கடந்து செல்கிறேன். இந்த உலகத்தில் என்னுடைய நேசம் வெற்றி அடையப்போவது இல்லை என்று எனக்கு புரிந்துவிட்டது. வாழ்க்கை எந்த ஒரு நொடியும் மாறிவிடும். எதுவுமே நிரந்தரம் இல்லை என்னை தவிர. இந்த உலகத்தில் இருக்கும் பிரச்சனையே வாழ்நாளின் மொத்தமான நூறு வருடங்களையும் செலவு செய்தாலும் முடிக்க முடியாத பிரச்சனைகளை கொடுத்து வெறும் மூன்று மணி நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்று கட்டளையிடுவதுதான். யாராவது ஒருவர் வெற்றி அடைந்தால் இன்னொருவரையும் வெற்றியடைய வேண்டும் என்று போராட சொல்வது எவ்வளவு கடினமான விஷயம். என்னுடைய அடுத்தடுத்த தோல்விகளுக்கும் வேதனைகளுக்கும் உன்னுடைய பிரிவுதான் காரணம் என்று சொல்ல முடியாது. ஆனால் நான் அவ்வளவு கடினமான வலிகளை தாங்கிக்கொள்கிறேன், வெற்றி அடைய 0.00 சதவீதம் வாய்ப்பு இருந்தாலும் தோல்விதான் கிடைக்கும் என்று எனக்கு தெரிந்தும் அடுத்த நாளை வாழ்ந்து பார்க்கிறேன். பணம் இல்லாத நாட்கள் போர் நடக்கும் நாட்கள் போன்று அவ்வளவு கடினமாக இருக்கிறது, வெற்றி வாய்ப்பு பூச்சியம் என்றும் அடுத்த நாள் இந்த நாளை விட மோசமானதாக இருக்கபோகிறது என்றும் நன்றாக புரிகிறது. ஆனால் எனக்கு வேறு ஆப்ஷன் இருப்பதாக தெரியவில்லை. ஒரு கனவு எனக்குள் இருந்தது. ஒரு முடிவில்லாத மழைக்காலம். ஒரு பாதுகாப்பான வீடு. ஒரு நிறைவான வாழ்க்கை. இதுவும் ஒரு நிறைவேறாத கனவாக மனம் என்னும் மோசமான நினைவுத்திறன் கொண்ட ஹார்ட் டிஸ்க்ல் ஸ்டோர் செய்யப்படுகிறது. இந்த விஷயம் பிரபஞ்சத்தின் சக்தியாளரை எதிர்ப்பதாக இருந்தாலும் கடைசியில் நான்தான் ஜெயித்து ஆகவேண்டும் !


GENERAL TALKS - காதலின் வேல்யூ மிகவும் அதிகமானது !


காதல் என்பது ரொம்பவே அரிதான விஷயம். அது என்னைக்குமே இலாப நோக்கமற்ற விஷயம். திரைப்படக் காதல் அல்லது புத்தகங்களில் இருக்கும் காதல் என்ற பெயரில் எல்லாமே சரியான விஷயம் என்று சொல்ல முடியாது. ஒரு உண்மையான அன்புக்கு. இன்னொருவர் நலமாக இருக்க வேண்டும் என்று மனது சொல்லக்கூடிய ஒரு இனம் புரியாத நேசத்துக்கு அவ்வளவு சுலபமாக இதுதான் என்று வகைப்படுத்த முடியாது. இந்த உலகத்தில் சூரியனை பார்க்கிறோம் இந்த பிரபஞ்சத்தில் நிறைய நட்சத்திரங்கள் இருக்கிறது. சூரியன் மட்டும்தான் மற்ற எல்லாமே நட்சத்திரங்கள் இல்லை என்று சொல்ல முடியுமா ? ஒரு ஒரு தனிபட்ட மனிதருக்கும் அன்பை வெளிப்படுத்தும் முறை மாறுபட்டதாக இருக்கும். என்னை பொறுத்தவரைக்கும் இதுதான் அன்பு என்று என்னாலும் சரியாக சொல்ல முடியாது. இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து இடங்களையும் நேசிப்பவரோடு சென்று பார்க்க தோன்றும். நிறைய நிழற்படங்கள் காணொளிகள் எடுத்துக்கொள்ள தொன்றும். நிறைய நினைவுகளை சேர்த்துக்கொள்ள தோன்றும். அன்பு எப்போதுமே அதிகபட்சமாகவே இருக்கும். உடல் நிலை சரியில்லாதபோது அருகில் இருக்க தோன்றும். உண்மையில் நிறைய விஷயங்கள் பேச தோன்றும். ஆனால் அனைத்து விஷயங்களும் பேசும்போது அது அனைத்தும் நேசிப்பவருக்கும் நமக்கும் மட்டும் கேட்க வேண்டும் என்று தோன்றும். காதல் பாடல்களை கேட்கும்போது அந்த பாடல்களில் இருக்கும் ஒரு புதினமான நிகழ்தகவில் வாழவே தோன்றும். இந்த உலகத்தில் எல்லோருக்கும் மரணம் இருந்தாலும் முடிந்தால் மரணமே இல்லாமல் வாழ்ந்துவிட தோன்றும். வாழ்க்கை ஒரு மாயாஜாலாமாக இருக்க வேண்டும். வாழ்க்கை ஒரு அறிவியல் புதினமாக இருக்க வேண்டும். இந்த உலகத்தில் எல்லோரும் நல்லவர்களாகவும் அன்பானவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நிறைய கற்பனையிலும் நடக்காத விஷயங்கள் நிஜத்தில் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள தோன்றும். மனம் கடினமான ஒரு பகுதியில் இந்த உண்மை அன்பை யாரும் ஒரு கீறல் கூட நிகழத்திவிடாத அளவுக்கு பாதுகாக்கும். அன்பு அதிகமாவதால் அறிவுப்பூர்வமான விஷயங்கள் யோசிக்கவே நேரம் இருக்காது. நேசிப்பவரின் நலனை தவிர வேண்டிக்கொள்ளும் பெரிய விஷயங்கள் எதுவுமே இருக்காது. ஒரு மாயாஜாலாமான சக்தி கேட்கும் அனைத்து விஷயங்களையும் கொடுத்துவிடும் என்று நம்புவோம். வாழ்க்கை மிகவும் பெரியது என்று நினைப்போம். ஒரு ஒரு நாளும் புதியதாக தோன்றவே அடுத்த நாளுக்கான கியுரியாசிட்டியில் தூக்கமே வராது. வாழ்க்கையில் பிரச்சனைகள் வந்தால் அதன் தீர்வுகளை கூட யோசிக்கவே விடாது இந்த அன்பினால் உருவான எண்ணங்கள். முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை உடல் நலனும் மன நிறைவும் கிடைக்க வேண்டும். ஒரு கோடி எண்களில் இருந்து ஒரு உண்மையான எண் இதுதான் என்று சொல்லிவிட்டு மற்றவை பொய்யென சொல்ல முடியாது. அதே போல காதல் என்றாலே உண்மைதான். பொய்யான காதல் என்று எதுவுமே இல்லை. அப்படி ஏதேனும் இருந்தால் அது காதல் இல்லை என்று சொல்லலாம். இது எல்லாமே ஆசைகள்தான். இந்த ஆசைகள் நிறைவேறாமல் போகத்தான் நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. இருந்தாலும் நிறைவேற வேண்டும் என்றுதான் நான் ஆசைப்படுகிறேன். 

Wednesday, August 7, 2024

GENERAL TALKS - சூறாவளியை போல பறந்து வெற்றியடைய முடியாது !


வெற்றி என்பது மிகவும் கடினமானது. உங்களிடம் போதுமான வளங்கள் இருந்தால் வெற்றியை விலை கொடுத்து வாங்கிவிடலாம். உங்களிடம் எதுவுமே இல்லை என்றால் நீங்களாக வாழ்க்கையில் கஷ்டப்பட்டால்தான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். 2010 ல் வெளிவந்த தமிழ் படம் - என்ற நகைச்சுவை திரைப்படத்தில் இடம்பெற்ற "ஒரு சூறாவளி கிளம்பியதே.." பாடல் காட்சியில் இடம்பெற்றது போல வெற்றி என்பது அவ்வளவு எளிதாக எல்லோருக்கும் கிடைப்பது இல்லை‌.. வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கலாம் இருந்தாலும் சும்மா இருக்காமல் மொத்தமாக பிரச்சனைகளை சமாளிக்க கொடுக்கும் நேர்மையான முயற்சிகளால் பிரச்சனைகளை சரி செய்ய முடியும். கடந்த கால வாழ்க்கை எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் எந்த ஒரு செயலையும் மறுபடியும் இன்னொரு முறை தொடங்க முடியும். வாழ்க்கை என்பது சினிமா இல்லை‌.. ஒரு முறை வெற்றி கிடைக்க குறைந்தது  பதினைந்து முறையாவது முயற்சிகளும் தோல்விகளும் கிடைக்கும் இவைகளை எல்லாம் பொறுத்துக்கொள்ள வேண்டும். அதுதான் நிஜ வாழ்க்கையில் உள்ள ரியாலிட்டியான உலகம். ஒரு முறை கூட தோற்காமல்  உங்களால் ஒரு வெற்றி அடைய முடியுமா ? அப்படியென்றால் கவலையே படவேண்டாம். வெற்றி அடைந்துவிடுங்கள். வாழ்க்கையில் எப்போதுமே ஒரு மேஜிக் தேவைப்படுகிறது இத்தகைய மேஜிக் எனும் மாயாஜாலத்தை நீங்கள்தான் நிகழ்த்த வேண்டும் என்றும் உங்களுக்காக யாருமே சப்போர்ட் பண்ண மாட்டார்கள் என்றும் புரிந்துகொள்ளுங்கள்‌. உங்களுடைய ஆசைகளை விட தேவைகளுக்கு அதிகமாக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். நிறைய வெற்றிகளை அடைந்த பின்னால் வாழ்க்கையில் அனைவருமே சிறப்பாகவும் நலமாகவும் வாழ முடியும். இந்த சிறப்பான வாழ்க்கையை அடைய செல்ல வேண்டிய பாதை வெற்றிகளாகவே இருக்கட்டும். இந்த உலகத்தில் வாழ்க்கை மிகவும் கடினமானது. அதனால் பணம் சம்பாதிப்பது மற்றும் உங்களுக்கு சரியான வேலைக்கு செல்வது எல்லாம் முக்கியமான விஷயம் ஆகும். வங்கிக்கணக்கில் இருக்கும் பணம் சேர்ப்பது மட்டுமே வெற்றி அல்ல என்று நிறைய பேர் சொன்னாலும் உண்மையில் உங்களுடைய வெற்றியை அடைய பணம் என்பது நிச்சயமாக தேவைப்படுகிறது. தூய்மையான தெளிவான மற்றும் முழுமையான முடிவுகள் மட்டுமே வாழ்க்கையில் வெற்றியை கொடுக்கும்.இது வெற்றியை அடைவது பற்றி யாருமே புரிந்துகொள்ளாத ஒரு ரகசியமான கான்ஸேப்ட் ஆகும் !

Tuesday, August 6, 2024

GENERAL TALKS - மிகவும் தெளிவான விஷயம் நமது உண்மையான நேசம்


காதல் என்பது ரொம்பவே அரிதான விஷயம். அது என்னைக்குமே இலாப நோக்கமற்ற விஷயம். திரைப்படக் காதல் அல்லது புத்தகங்களில் இருக்கும் காதல் எல்லாமே சரியான விஷயம் என்று சொல்ல முடியாது. ஒரு உண்மையான அன்புக்கு. இன்னொருவர் நலமாக இருக்க வேண்டும் என்று மனது சொல்லக்கூடிய நேசத்துக்கு அவ்வளவு சுலபமாக வகைப்படுத்த முடியாது. இந்த உலகத்தில் சூரியனை பார்க்கிறோம் இந்த பிரபஞ்சத்தில் நிறைய நட்சத்திரங்கள் இருக்கிறது. சூரியன் மட்டும்தான் மற்ற எல்லாமே நட்சத்திரங்கள் இல்லை என்று சொல்ல முடியுமா ? ஒரு ஒரு தனிபட்ட மனிதருக்கும் அன்பை வெளிப்படுத்தும் முறை மாறுபட்டதாக இருக்கும். என்னை பொறுத்தவரைக்கும் இதுதான் அன்பு என்று என்னாலும் சரியாக சொல்ல முடியாது. இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து இடங்களையும் நேசிப்பவரோடு சென்று பார்க்க தோன்றும். நிறைய நிழற்படங்கள் காணொளிகள் எடுத்துக்கொள்ள தொன்றும். நிறைய நினைவுகளை சேர்த்துக்கொள்ள தோன்றும். அன்பு எப்போதுமே அதிகபட்சமாகவே இருக்கும். உடல் நிலை சரியில்லாதபோது அருகில் இருக்க தோன்றும். உண்மையில் நிறைய விஷயங்கள் பேச தோன்றும். ஆனால் அனைத்து விஷயங்களும் பேசும்போது அது அனைத்தும் நேசிப்பவருக்கும் நமக்கும் மட்டும் கேட்க வேண்டும் என்று தோன்றும். காதல் பாடல்களை கேட்கும்போது அந்த பாடல்களில் இருக்கும் ஒரு புதினமான நிகழ்தகவில் வாழ தோன்றும். இந்த உலகத்தில் எல்லோருக்கும் மரணம் இருந்தாலும் முடிந்தால் மரணமே இல்லாமல் வாழ்ந்துவிட தோன்றும். வாழ்க்கை ஒரு மாயாஜாலாமாக இருக்க வேண்டும். வாழ்க்கை ஒரு அறிவியல் புதினமாக இருக்க வேண்டும். இந்த உலகத்தில் எல்லோரும் நல்லவர்களாகவும் அன்பானவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நிறைய கற்பனையிலும் நடக்காத விஷயங்கள் நிஜத்தில் நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள தோன்றும். மனம் கடினமான ஒரு பகுதியில் இந்த உண்மை அன்பை யாரும் ஒரு கீறல் கூட நிகழத்திவிடாத அளவுக்கு பாதுகாக்கும். அன்பு அதிகமாவதால் அறிவுப்பூர்வமான விஷயங்கள் யோசிக்கவே நேரம் இருக்காது. நேசிப்பவரின் நலனை தவிர வேண்டிக்கொள்ளும் பெரிய விஷயங்கள் எதுவுமே இருக்காது. ஒரு மாயாஜாலாமான சக்தி கேட்கும் அனைத்து விஷயங்களையும் கொடுத்துவிடும் என்று நம்புவோம். வாழ்க்கை மிகவும் பெரியது என்று நினைப்போம். ஒரு ஒரு நாளும் புதியதாக தோன்றவே அடுத்த நாளுக்கான கியுரியாசிட்டியில் தூக்கமே வராது. வாழ்க்கையில் பிரச்சனைகள் வந்தால் அதன் தீர்வுகளை கூட யோசிக்கவே விடாது இந்த அன்பினால் உருவான எண்ணங்கள். முதல் நாளில் இருந்து கடைசி நாள் வரை உடல் நலனும் மன நிறைவும் கிடைக்க வேண்டும். ஒரு கோடி எண்களில் இருந்து ஒரு உண்மையான எண் இதுதான் என்று சொல்லிவிட்டு மற்றவை பொய்யென சொல்ல முடியாது. அதே போல காதல் என்றாலே உண்மைதான். பொய்யான காதல் என்று எதுவுமே இல்லை. அப்படி ஏதேனும் இருந்தால் அது காதல் இல்லை என்று சொல்லலாம். 

GENERAL TALKS - இன்னும் கொஞ்சம் பேசலாம் இந்த பிரிவை பற்றி !


இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து துன்பங்களை விடவும் ஒரு கொடிய துன்பம் நேசித்த உள்ளத்தின் பிரிவு என்று இன்றுதான் அறிந்துகொண்டேன். வாழ்க்கைக்கும் எனக்கும் இருக்கும் இருந்த சொற்பமான சில தொடர்புகளும் இணைப்புகளும் முறிந்துபோக தோல்விகளே வாழ்க்கையில் நிலையென நினைக்கிறேன். இந்த உலகத்தின் எல்லா பூக்களும் நமக்காகவே மலர்ந்தது என்றும் இந்த உலகத்தின் கடல் கடந்த அனைத்து நாடுகளும் நம்முடைய வருகைக்காக காத்திருக்கிறது என்றும் நினைத்தேன். ஆனால் கடந்த காலமும் நிகழ்காலமும் இந்த அளவுக்கு நம்மை பிரித்துவிடும் என்று நிச்சயமாக நினைக்கவில்லை. அன்பு மட்டுமே உலகத்தில் நிரந்தரம் என்றால் வாழ்க்கை ஒரு மறக்கமுடியாத பயணமாக அமையும். பிரிவுகள் கொடுக்கும் வலிகளும் இழப்புகள் கொடுக்கும் துன்பங்களும் என்று என்னுடைய வாழ்க்கையை விட்டு செல்லும் என்று காத்திருக்கிறேன். வானம் கூட தொலைவு இல்லை என்று எல்லைகள் இல்லாமல் யோசித்த மனது இன்று உனக்கும் எனக்கும் உள்ள தொலைவை கண்டு சோர்ந்துபோகிறது. கதைகளை போல வாழ்க்கை இருந்தால் கடைசியில் வெற்றியடைவோம்‌. ஆனால் கதைகள்தான் நிஜக்காதலின் முன்னால் எப்போதும் தோற்றுப்போகிறதே.. உண்மையான காதலின் முன்னால் பொய்களும் கற்பனைகளும் எத்தனை நாட்கள் நிலைக்கும் ? இந்த பூமியே உண்மையான அன்பின் காரணத்தால்தான் ஒரு ஒரு நொடியும் நகர்ந்துகொண்டு இருக்கிறது. ஒரு நாள் அன்பு ஒரு ஒரு நாளும் நிலைக்காது. கடைசிவரையில் நிலைக்கும் ஒரு அன்பை தேடி செல்லும் பயணமாக வாழ்க்கை இங்கே ஒரு ஒரு மனிதனையும் சோதிக்கிறது. நாட்கள் கடந்து செல்ல செல்ல காலம் நமக்குள் இருக்கும் தொலைவை அதிகப்படுத்திக்கொண்டே செல்வதாக மனதுக்குள் தோன்றுகிறது. உன்னுடைய காலடித்தடங்களை தேடி செல்லும் தேடலில் என்னுடைய காலடித்தடங்கள் பயணிக்கிறது. உனக்கும் எனக்கும் இருக்கக்கூடிய தொலைவுகள் கொஞ்சம் கொஞ்சமாக துன்பத்தை அதிகப்படுத்துகிறது. வாழ்க்கை சிறியதாக இருந்தாலும் அன்பு என்பது மிகவும் பெரிய விஷயம். அன்பு இந்த உலகத்தில் எல்லோருக்கும் பொதுவான ஒரு தனிப்பட்ட விஷயம். அன்பு என்பது இந்த உலகத்தின் சமநிலை . அன்பு என்றைக்குமே குறையாது. அன்பு என்பது மறைக்கப்படலாம் ஆனால் மாற்றப்பட முடியாதது. இந்த பிரிவு கொடுக்கும் மனநிலையை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. இந்த வாழ்க்கையில் மனம் எப்போதுமே ஒரு சில விஷயங்கள் மாற்ற முடியாதது என்று தெரிந்தும் மாற்றத்தை உருவாக்க போராடுகிறது.

GENERAL TALKS - காதலின் தொலைவுகளால் ஒரு கருத்து பகிர்வு !


இந்த காதலில் தொலைவுகள் எதனால் இந்த அளவுக்கு வலிகளை கொடுக்கிறது என்று தெரியவில்லை. காலம் வெற்றி என்றால் என்னவென்றே தெரியாத மனதை எதுவுமே செய்வது இல்லை. ஆனால் வெற்றியின் அருமை தெரிந்த மனிதனுக்கு வெற்றி கிடைப்பதே இல்லை. அதிகப்படியான மனதின் சோர்வு காதலில் தடுக்கமுடியாத வேதனையை கொடுக்கிறது. வாழ்க்கை நம்மை விட்டு சென்றுகொண்டே இருக்கிறது. காலம் நம்முடைய கட்டுப்பாட்டில் இல்லாமல் போகிறது. உன்னுடைய நலத்தை மட்டுமே நான் விரும்புகிறேன். என்னுடைய வாழ்க்கையின் உண்மையான நேசத்தை என்னால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்த பிரிவுக்காக நான் மன்னிப்பு கேட்பதை தவிர வேறு எதுவுமே செய்ய முடியாது.வாழ்க்கையில் பிரிந்து இருக்கும்போதுதான் காதலுடைய வலி அதிகமாக இருக்கும். காதல் இருக்கும்போது இந்த உலகமே நம்முடைய உள்ளங்கைகளுக்குள் இருப்பதாக ஒரு சுதந்திரமான மனநிலை உருவாகும். மனதுக்குள் இருக்கும் அந்த உண்மையான அன்பும் அதிகமான வலிமையும் காதல் என்ற ஒரு விஷயம் மட்டுமே கொடுக்கும். வாழ்க்கையில் அன்பு நிலையானது இல்லை. இன்றைக்கு நேசிப்பவர்கள் நாளை வெறுத்து விட்டுச்சென்றுவிடுவார்கள் என்ற என்னமே மனதுக்குள் இருக்கும். இந்த வாழ்க்கை மனதுக்குள் ஒரு சலிப்பை உருவாக்கும். இந்த உலகத்தில் உண்மையான அன்பு என்று எதுவும் இல்லையா ? என்ற மனதின் வலி மிகவும் கடினமாக இருக்கும். ஆனால் கடைசியில் காதல் மட்டுமே வெற்றியை அடையும். உண்மையாக நேசிப்பவர்களுக்காக எத்தனை வலிகளையும் வேதனைகளையும் துன்பங்களையும் காயங்களையும் பொறுத்துக்கொள்ள முடியும். காதல் என்பது கற்பனை இல்லை, மாயாஜாலம் இல்லை, சந்தோஷம் இல்லை. காதல் என்பது காலங்களை கடந்த இணைப்பு. ஒரு மரணம் இல்லாத நினைவுகளின் களஞ்சியம்.இதுதான் எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். இதுக்காகத்தான் எல்லோரும் போராடுகிறார்கள். நானும் ஆசைப்படுகிறேன். கனவை நினைவாக என்னுடைய போராட்டத்தை மேற்கொள்கிறேன். 

 




GENERAL TALKS - இது கொஞ்சம் பெர்ஸனல் பதிவு !


இந்த உலகத்தை பார்த்தால் எனக்கு அளவுக்கு அதிகமான கோபம்தான் வருகிறது. நான் எந்த நிலைமையில் இருக்க வேண்டியவன் என்று எனக்கு தெரியும் ஆனால் நான் அப்படிப்பட்ட நிலையில் இல்லை. அந்த ஒரு காரணத்தால் உலகம் இவ்வளவு சேதாரம் அடைவதை என்னால் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. நான் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து சண்டை போட்டுக்கொண்டுதான் இருக்கிறேன். நான் சரியென்றும் தவறென்றும் எதுவுமே பார்த்தது இல்லை. பாவம் என்றும் புண்ணியம் கூட எதுவுமே பார்த்தது இல்லை. நான் எனக்கு அந்த நொடிக்கு என்ன செயல் செய்ய வேண்டுமோ அந்த செயலை மட்டும்தான் செய்கிறேன். அடிப்படையில் பிரபஞ்சத்துக்கு என்னை பிடிக்காது என்று எனக்கு தோன்றுகிறது. ஒரு விதமான மிகப்பெரிய வெற்றிக்கான போராட்டம் எனக்குள் இருக்கிறது. யாராலுமே இமாஜின் பண்ண முடியாத அளவுக்கு நான் இந்த வருடம் முன்னேறி இருக்க வேண்டும் ஆனால் எங்கே தப்பு நடந்தது ? எனக்கு சப்போர்ட் இல்லை. அதுதான் பெரிய தவறு என்று நான் கருதுகிறேன். ஆனால் வேறு வாய்ப்புமே இல்லை. இங்கே அடிப்படையில் இருந்தே நான் பாலைவனத்தில் முளைத்த ஆலமரம் போலத்தான் இருக்கிறேன். நான் உயிரோடு இருக்கும் இந்த ஒவ்வொரு நொடியும் அவ்வளவு வேஸ்ட்டாக போகிறது. இங்கே என்னுடைய மண்டைக்குள் என்னதான் நடக்குது. போதுமான சக்தி என்னிடம் இல்லையா ? நான் எனக்கு எதிராக எது இருந்தாலும் கரைத்துவிட வேண்டும் என்ற கட்டாயத்தில் இருக்கிறேன். இப்படி நான் பண்ணவில்லை என்றால் எனக்கு எதிராக இப்போது இருக்கும் விஷயம் என்னையே கொன்றுவிடும். நான் இந்த பூமியின் போட்டிகள் நிறைந்த மனித தன்மையற்ற கொலைக்களத்தை வெறுக்கிறேன். எனக்கென்று ஒரு அமைதியான இடம் கிடைத்தால் எல்லாமே நன்றாக இருக்கும் என்றே கருதுகிறேன். ஆனால் வாழ்க்கை அப்படி இல்லை. என்னுடய விதி என்னும் புத்தகத்தில் என்ன செயல் எந்த நேரத்தில் எழுதப்பட்டு இருக்கிறதோ அது கண்டிப்பாக நடக்கும் என்ற கதைகளை நான் நம்பவில்லை. நான் கடவுள் இருக்கிறார் என்று நம்புகிறேன் ஆனால் கடவுள் ஒரு இடத்தில் சப்போர்ட் கொடுத்துவிட்டு இன்னொரு இடத்தில் எகைன்ஸ்டாக டார்ச்சர் கொடுக்கிறார். கடவுளும் ஒரு சிபாரிசு வேலையில் வந்த திறமையற்ற மேனேஜர் போல நடந்துகொள்கிறார். அவருடைய வேலையை அவரால் பார்க்க முடிவது இல்லை. அவருடைய சக்திகள் மட்டுமே எனக்கு இருந்தால் என்னால் நிறைய சாதிக்க முடியும் ஆனால் சக்திகள் எல்லாமே சம்மந்தமே இல்லாத இடத்தில்தான் இருக்க வேண்டும் தகுதியான இடத்தில் இருக்க கூடாது என்ற நிபந்தனையை கொடுத்ததுமே கடவுள்தானே ! மற்றபடி இது எல்லாமே புலம்பல்கள்தான். இதுவே தோல்விகளின் கருத்துக்கள். உங்களுக்கு மாற்றம் வேண்டுமென்றால் சொல்லுங்கள் போஸ்ட்டை மாற்றிவிடுகிறேன். 

GENERAL TALKS - நேசிக்கும் மனங்களும் தற்காலிகமான அன்பும் !

 


இந்த உலகத்தில் இருக்கும் எல்லோருக்குமே நிரந்தரமான அன்பு தேவைப்படுகிறது. இருந்தாலுமே இப்படி நிரந்தர அன்பை கொடுப்பதில் இங்கே நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. உதாரணத்துக்கு நாம் நேசித்து ஒருவர் மேலே நிரந்தரமான அன்பை கொடுத்தால் பதிலுக்கு அவர்கள் நம் மேலே தற்காலிகமான அன்பைத்தான் கொடுப்பார்கள். இதற்கு காரணம் அவர்கள் நம்பிக்கை இல்லாத முட்டாள்களாக இருப்பார்கள். இப்படி இருப்பவர்கள் மிகவும் எளிதாக தங்களிடம் இருக்கும் எல்லா மதிப்புள்ள விஷயங்களையும் இழந்து அடுத்தவர்களிடம் உதவி கேட்கும் ஆட்களாக பரிதாபமான நிலைக்கு தள்ளப்படுவார்கள். இவர்களில் முட்டாள்தனத்தில் இருந்து விடுதலை கொடுத்து இவர்களை மாற்ற வேண்டுமென்றால் வருடக்கணக்கில் நாம் போராடி அவர்கள் எந்த வகையில் ஏமாந்துகொண்டு இருக்கிறார்கள் என்பதை மிகவும் கவனமாக ஆராய்ந்து அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரியவைக்க வேண்டும். இது அடிப்படையில் சாத்தியமற்றது. நான் சாத்தியமற்றது என்று சொல்ல காரணம் என்னவென்றால் இந்த அப்பாவிகளை நேசிப்பது போல நம்பாவைத்து ஏமாற்றுபவர்கள் மேலேதான் தங்களின் முழு நம்பிக்கையை அவர்கள் வைத்து இருப்பார்கள். இப்படி ஏமாற்றுபவர்கள் ஏமாற்றப்படுபவர்களின் மனதை நன்றாக மூளை சலவை செய்துகொண்டு இருப்பதால் நம்மை பாதிக்கப்படப்போகும் மனிதர்களிடம் பேச கூட விடமாட்டார்கள். இவர்கள் சத்துக்களை உறிஞ்சும் பாராஸைட் போல நாம் நேசிக்கும் மனிதர்களோடு ஒட்டிக்கொண்டு அவர்களுடைய சக்திகளை உறிஞ்சிக்கொண்டு இருக்கின்றார்கள். இவர்களுடைய கட்டுப்பாட்டை மீறி நாம் நேசிப்பவர்களுக்கு நடக்கும் தவறுகளை புரிய வைக்கவும் முடியாது. நாம் எவ்வளவு நல்லவர்கள் என்றும், நாம் எந்த அளவுக்கு ஆதரவாக இருக்கிறோம் என்றும் புரிய வைக்க முடியாது. ஏமாற்றுபவர்கள் கொடுக்கும் மூளை சலவையில் குழப்பமான கொஞ்சமும் லாஜீக் இல்லாத விஷயங்களை எல்லாம் நம்பும் மனிதர்களாக இவர்கள் மாறிவிடுவார்கள். கிளைமாக்ஸ்ஸில் இவர்கள் நம்பும் மக்களால் நச்சென்று நங்கூரம் போல நம்பிக்கை துரோகம் பண்ணப்பட்டு நான் முன்னதாக சொல்லியது போல வாழ்க்கையில் எல்லாவற்றையும் இழந்து நடு தெருவில் பிச்சைக்காரரை போல நிற்கும் வரைக்கும் நாம் எந்த அளவுக்கு சப்போர்ட் பண்ணிக்கொண்டு இருந்தோம் என்று இவர்களுக்கு புரியப்போவதே இல்லை. சாமர்த்தியம் வாய்க்காத இப்படிப்பட்ட மனிதர்கள் எப்போதுமே ஏமாந்து போகும் ஆட்களாகவே இருக்கின்றார்கள். இவர்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும். இருந்தாலும் இந்த காலத்தில் கடவுளே இவர்களை கண்டுகொள்வது இல்லை. 





MUSIC TALKS - CHILLENA ORU ,MAZHAI THULI ENNAI NANAIKUDHE PENNE SIRAGUGAL YAAR KODUTHTHATHU NENJAM PARAKKUDHE PENNE - TAMIL SONG LYRICS


சில்லென ஒரு மழை துளி என்னை நனைக்குதே பெண்ணே
சிறகுகள் யார் கொடுத்தது நெஞ்சம் பறக்குதே முன்னே
உன் விழிகளிலே ஓஹோ நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளால் ஓஹோ நான் மாறினேன் கண்ணே

அட கருப்பட்டியே என் சீனி கிழங்கே சிரிச்சு கவுக்காத 
என் கண்ணு குட்டியே கம்மாக் கரையே நீ கப்பல் ஒட்டாத
கண்ணால பாக்காம கண்ணாலம் பண்ணலாமா ?
கைகோா்த்து போகலாமா ?

கொஞ்சம் பார்த்துவிடு கொஞ்சம் பேசிவிடு 
என்று என் விழிகள் அய்யய்யோ என்னை திட்ட 
கோடை கால மழை வந்து போன பின்னும் 
சாலை ஓரம் மரம் தன்னாலே நீர் சொட்ட

என்னை தாக்கும் புயலே இரவோடு காயும் வெயிலே 
உன்னாலே உன்னாலே நூலில்லா காத்தாடி ஆனேனே 
அடி பெண்ணே அடி கண்ணே நான் விழுந்தால் 
உன் பாதம் சோ்வேனே

உன் விழிகளிலே ஓஹோ நான் வாழ்கிறேன் பெண்ணே
உன் கனவுகளால் ஓஹோ நான் மாறினேன் கண்ணே

காதல் வந்தவுடன் காய்ச்சல் வந்ததடி 
மீண்டும் நான் பிழைக்க முத்தங்கள் தருவாயா 
கோபம் கொள்கையிலும் கிரங்க வைக்குதடி 
மீண்டும் ஒருமுறை நீ கோபத்தில் பார்ப்பாயா ?
ஆளை கொள்ளும் அழகே நிழல் கூட அழகின் நகலே 

ஒரு நாளும் குறையாத புது போதை கண்ணோரம் தந்தாயே 
அணைத்தாலும் அணையாத ஒரு தீயாய் நெஞ்சோரம் வந்தாயே
அடி இடம் வலமா நான் ஆடினேன் பெண்ணே
ஒரு இடி மழையாய் என்னைத் தாக்கினாய் முன்னே


MUSIC TALKS - NINAITHU NINAITHU PAARTHAAL NERUNGI ARUGIL VARUVEN UNNALTHAANE NAANE VAAZHGIREN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


நினைத்து நினைத்து பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன் 
உன்னால்தானே நானே வாழ்கிறேன் உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் 
எடுத்து படித்து முடிக்கும் முன்னே எரியும் கடிதம் உனக்கு கண்ணே 
உன்னால் தானே நானே வாழ்கிறேன் உன்னில் இன்று என்னை பார்க்கிறேன்

அமர்ந்து பேசும் மரங்களின் நிழலும் 
நமது கதையை காலமும் சொல்லும்
உதிர்ந்து போன மலரின் வாசமா ? 
தூது பேசும் கொலுசின் ஒலியை அறைகள் முழுதும் ஆண்டுகள் சொல்லும்  
உடைந்து போன வளையலின் வண்ணமா ?

உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும் விரல்கள் உந்தன் கையில் 
தோளில் சாய்ந்து கதைகள் பேச  நமது விதியில் இல்லை 
முதல் கனவு போதுமே காதலா கண்கள் திறந்திடு

பேசி போன வார்த்தைகள் எல்லாம் உனது பேச்சில் கலந்தே இருக்கும் 
உலகம்  அழியும் உருவம் அழியுமா ?
பார்த்து போன பார்வைகள் எல்லாம் பகலும் இரவும் உன்னுடன் இருக்கும் 
உனது விழிகள் என்னை மறக்குமா ?

தொடர்ந்து வந்த நிழலின் பிம்பம்  
வந்து வந்து போகும் 
திருட்டு போன தடயம் இருந்தும் திரும்பி வருவேன் நானும் 
ஒரு தருணம் என்னடா காதலா உன்னுள் வாழ்கிறேன்

நினைத்து நினைத்து பார்த்தால் நெருங்கி அருகில் வருவேன் 
உன்னால்தானே நானே வாழ்கிறேன் உன்னில் இன்று என்னை பார்க்கிறேன் 




Sunday, August 4, 2024

MUSIC TALKS - VAADAMALLIKKARI - USURE EN USURE EN MANASAI PARIKKADHE SONG - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


வாடாமல்லிக்காரி என் வருங்கால கொலைகாரி
கோடை மழையா மாறி என்னை நனைச்சாயே மும்மாரி
புரட்டி போட்ட ஆமைய போல மனசு கிடக்குதடி
நனைஞ்சு போன எள்ளு செடியா உசுரு நழுவுதடி
என் உசுரே என் உசுரே என் மனசை பறிக்காதே
மனசே என் மனசே என் வயசை முறிக்காதே
என் உசுரே என் உசுரே என் மனசை மதிக்காதே
மனசே என் மனசே என் வயசை கடிக்காதே

உன்ன ஏன்டா பாத்தேன் நான் நேத்துதான்டா பூத்தேன் நான்
தாவணிக்குள் முளைச்சேன் நான் தாவி குதிச்சேன் நான்
வெட்க காடா ஆனேன் நான் வெட்கம் கேட்டு போனேன் நான்
கோழி குஞ்சா ஆனேன் நான் கூவ மறந்தேன் நான்
தொரட்டி போட்டு இழுக்குற என்னை குண்டு கண்ணை என்னடி பண்ண ?
ஐயோ ஐயோ என்னை கொல்லாதே !
விளைஞ்சு நிக்கும் வெத்தலை கொடியா மென்னு பாக்க இழுக்குற சரியா ?
கொலைகாரி சொல்லேன்டி பொய் மட்டும் சொல்லாதே

உசுரே என் உசுரே என் மனசை பறிக்காதே
மனசே என் மனசே என் வயசை முறிக்காதே
உசுரே என் உசுரே என் மனசை மதிக்காதே
மனசே என் மனசே என் வயசை கடிக்காதே


காஞ்சு கெடந்த செங்காடு கன்னம் பட்டு பூத்தாச்சு
நெஞ்சு பாக்க வரியா நீ ஏலே களவாணி
வீடு முழுக்க உன் வாசம் விரட்டி விரட்டி கதை பேசும்
வெளிய சொன்னா சங்கோஜம் ! என்ன சவகாசம்
உள்ளுக்குள்ள உன்ன நினைச்சா உச்சம் தலையில் கொம்பு முளைக்கும்
ஏனோ ஏனோ விடையும் தெரியாதே
ஈர காட்ட உழுவது போல புரட்டி போட்ட என்னையும் மெல்ல
தடை சொல்ல முடியாம தலையாட்டி நின்னேனே
என் உசுரே என் உசுரே என்னை உசுப்பி கெடுக்காதே
மனசே என் மனசே என்னை அடிச்சு துவைக்காதே

வாடாமல்லிக்காரி என் வருங்கால கொலைகாரி
கோடை மழையா மாறி என்னை நனைச்சாயே மும்மாரி
புரட்டி போட்ட ஆமைய போல மனசு கிடக்குதடி
நனைஞ்சு போன எள்ளு செடியா உசுரு நழுவுதடி

என் உசுரே என் உசுரே என் மனசை பறிக்காதே
மனசே என் மனசே என் வயசை முறிக்காதே
என் உசுரே என் உசுரே என் மனசை மதிக்காதே
மனசே என் மனசே என் வயசை கடிக்காதே

MUSIC TALKS - NAANI KONI RAANI UNDHAN MENI NAANUM MOIKIREN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


ஒரு காலை நேரம் நீ வந்தாலே
பனி வீசும் காற்றுக்கு
பணியாமல் தேகம் சூடேறும்
கண் பேசும் மௌனமே ஒன்றாக
நாம் போகும் சாலைகள்
முடியாமல் எங்கெங்கோ நீளும்
நதியிலே இலை போல பயணம்
இனிப்பான தருணம்
மனதோடு மாய மின்சாரம்
உன் எதிரே நனையாமல் கரைந்தேன்
நகராமல் உறைந்தேன்
மெதுவாக மெதுவாக உணதாகிறேன்
உயிரே உயிரே உயிர் போக போக துள்ளும்


X



தொலைதூரம் போனதே என் மேகம்
புரியாத மென்சோகம்
முகில் மேலே ஊசி இறங்கும்
பிரிவாலே இன்று நான் போராட
விழியோரம் நீரோட
அவன் கண்ணில் காதல் மயக்கம்
உன் அழகில் வெளிக்காட்டும் சாரலில்
என்னைப்போலே சாயலில்
ஒரு ஜீவன் தீண்ட கண்டேனே
நெஞ்சினிலே புரியாத ஆதங்கம்
மெலிதான பூகம்பம்
இருந்தாலும் விழியோரம் சில ஆனந்தம்
இதயம் இதயம் சுகமாக இருக்கும் இனி

MUSIC TALKS - SAKKAI PODU POTTANE SAVUKKU KANNALE SATHIYAMA PAARKALA IDHUKKU MUNNALE - TAMIL SONG LYRICS


சக்க போடு போட்டானே சவுக்கு கண்ணால  
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால
தாங்க தான் முடியல ஐயோ என்னால  
என் தாவணி நழுவுது கீழே தன்னால
சக்க போடு போட்டாளே  சவுக்கு கண்ணால  
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால
தாங்க தான் முடியல ஐயோ என்னால  
என் தாகம் தான் கூடுது இந்த பொண்ணால

கொண்டையில பூவடுக்கி கும்முன்னுதான் பேசுற
கெண்டக்கால நீவுற கிச்சு கிச்சு மூட்டிகிட்டே கிறுக்கு புடிக்க வெக்குற
அஞ்சு நொடி நேரத்தில கோடி முறை பாக்குற மீனுக்குஞ்சு
போல துள்ளி ஐசாலக்கடி காட்டுற
எச்சி தொட்டு கச்சிதமா உன்னை என்னை ஒட்டிக்கலாம்
முத்தம் வெச்சு முத்தம் வெச்சு மூச்சு முட்ட கட்டிக்கலாம்
கொழுத்து போன பொம்பள இடுப்ப கொண்டாடி
கொஞ்சம் நானும் ஓடினா தவிப்ப திண்டாடி

உள்ளங்களை சேர்த்து வெச்சு ஊருக்காக வாழுற பம்பரமா ஓடுற 
உன்னை எண்ணி ஏங்குறேனே என்ன செய்ய போகுற ?
உள்ளங்கையில் தூக்கி வெச்சு உத்து உத்து பார்க்கவா 
உருட்டி கீழ தள்ளி ஒண்டிக்கு ஒண்டி ஆடவா
ஒத்த சொல்லு சொன்னதில பத்திக்கிச்சு என் மனசு
மத்தபடி கன்னத்துல முத்த கதை நீ எழுது
வடிச்ச சோறு போலத்தான் ஆவி பறக்குற
மடிச்ச சேலை கலைக்க தான் கூவி அழைக்கிறேன்


சக்க போடு போட்டானே சவுக்கு கண்ணால  
சத்தியமா பாக்கல இதுக்கு முன்னால
தாங்க தான் முடியல ஐயோ என்னால  
என் தாகம் தான் கூடுது இந்த பொண்ணால

MUSIC TALKS - KADAL NAANDHAAN ALAI OIVATHE ILLAI - SUDAR NAANDHAAN THALAI SAAIVADHE ILLAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

 


கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை
சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை
ஓர் துணை இல்லாதது பெண்மை துயில் கொள்ளாதது
உண்மை தூக்கம் கெட்டுத் தான் கண்ணும் தேடும் உன்னை
கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை
சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை
ஓர் துணை இல்லாதது பெண்மை துயில் கொள்ளாதது
உண்மை தூக்கம் கெட்டுத் தான் கண்ணும் தேடும் உன்னை
வா... எந்தன் இதழாலே காதல் கவிதை தான்
நான் உன் மேல் எழுதாயோ காலை வரையில் தான்
உன் அங்கம் - முழுதும் உன் பாடல் வரிகள் தான்

உன்னை பார்த்த முதல் தடவை என் உள்ளக் கதவை நான் திறந்துவிட்டேன்
உடல் ஆவி உனக்கெனவே ஓர் உயில் எழுதி நான் இறந்துவிட்டேன்
என் தோழா உன் இதழை என் இதழ் மேல் வைத்தால் நான் உயிர்ப்பேன்
என்னன்பே நான் தழுவ நீ நழுவ விட்டால் நான் மறுபடி மறித்திடுவேன்

தலைவா உன் தலைக்கினி மேல் ஓர் தலையணையாய் என் தொடை இருக்கும்
மெதுவாய் உன் விழி துயில என் வளை குலுங்கி மெல் இசைப் படிக்கும்
அங்கங்கே பெண் பறவை தன் சிறகை உன் மீது விரிக்கும்
அம்மாடி உன் குளிரும் என் குளிரும் நில்லாமல் நொடியினில் விலகிடுமே

கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை
சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை
ஓர் துணை இல்லாதது பெண்மை துயில் கொள்ளாதது
உண்மை தூக்கம் கெட்டுத் தான் கண்ணும் தேடும் உன்னை
கடல் நான் தான் அலை ஓய்வதே இல்லை
சுடர் நான் தான் தலை சாய்வதே இல்லை
ஓர் துணை இல்லாதது பெண்மை துயில் கொள்ளாதது
உண்மை தூக்கம் கெட்டுத் தான் கண்ணும் தேடும் உன்னை
வா... எந்தன் இதழாலே காதல் கவிதை தான்
நான் உன் மேல் எழுதாயோ காலை வரையில் தான்
உன் அங்கம் முழுதும் உன் பாடல் வரிகள் தான்

MUSIC TALKS - கவிஞர் யுகபாரதி அவர்களின் இன்டர்வியூ பார்த்த பின்னால் இந்த பாடல் வரிகளை கவனிக்காமல் இருக்க முடியவில்லை !



ராசா ராசா என் மன்மத ராசா தனியா ஏங்குது ரோசா கொஞ்சம் சேத்துக்க ராசா
மன்மத ராசா மன்மத ராசா கன்னி மனச கிள்ளாதே
கண்ணுல லேசா கண்ணுல லேசா என்ன கணக்கு பண்ணாதே
என் பச்சை உடம்புல உச்சி நரம்புல கிச்சு கிச்சு கிச்சு மூட்டாதே
என் ஒத்த உசுருல முத்து கொலுசுல உன்ன வெச்சி வெச்சி பூட்டாதே
மன்மத ராசா என் மன்மத ராசா மன்மத ராசா மன்மத ராசா
உன்ன முழுசா தின்னானே கண்ணுல லேசா கண்ணுல லேசா பித்து பிடிச்சி நின்னானே
உன் பச்சை உடம்புல உச்சி நரம்புல இச்சு இச்சு இச்சு வச்சானே
உன் ஒத்த உசுருல முத்து கொலுசுல என்ன வெச்சி வெச்சி தச்சானே
மன்மத ராசா என் மன்மத ராசா
ஹே ஜில்லா ஹே ஜில்லா ஹே சிலுக்கு சிக்கா ஜில்லா
ஹே ஜில்லா ஹே ஜில்லா ஹே சிலுக்கு சிக்கா ஜில்லா
என்ன உறைய வச்சு உன்ன நெறைய வச்சு சும்மா அலைய வச்சியே வச்சியே வச்சியே
ரத்தம் உறைய வச்சு முத்த சிறையில் வச்சு எல்லாம் புரிய வச்சியே வச்சியே வச்சியே
ஹே வாயோடு வாயா இனிக்க வச்ச என்ன முந்தானையோடு முடிச்சு வச்ச
ஹே பாயோடு பாயா விரிச்சு வச்ச உன்ன பாவத்தபோல மறச்சு வச்ச
ஹே அழகெல்லாம் உனக்குள்ள தங்க வச்ச புது அழகெல்லாம் உனக்குள்ள தங்க வச்ச
அடி அதுக்குள்ள என்ன நீ எங்க வச்ச ஹே ராசா ராசா ராசா மன்மத ராசா
லேசா லேசா லேசா ஆகுது லேசா ஹே ராசா ராசா ராசா மன்மத ராசா
லேசா லேசா லேசா ஆகுது லேசா ஹே தன்னா ஹே நன்னா ஹே தன்னா நன்னா நானனா தன்னா ஹே தனனா ஹே தன்னா நானா நானனா
நெஞ்ச உருக வச்சு கொஞ்சம் பருக வச்சு என்ன கருக வச்சியே வச்சியே வச்சியே
ஹே முந்தி சரிய வச்சு மோகம் தெரிய வச்சு என்ன களைய வச்சியே வச்சியே வச்சியே
ஹே காய்ச்சாத பாலா திரிய வச்ச என்ன கண்டதை போல எரிய வச்ச
ஆத்தாடி நீதான் அனுபவிச்ச என்ன கூத்தாடி போல அலங்கரிச்ச
ஹே இரவெல்லாம் எனக்குன்னு ஒதுக்கி வச்ச இரவெல்லாம் எனக்குன்னு ஒதுக்கி வச்ச
ஏன் உலகத்த அதுக்குள்ள பதுக்கி வச்ச ஹே ராசா ராசா ராசா மன்மத ராசா
லேசா லேசா லேசா ஆகுது லேசா ஹே ராசா ராசா ராசா மன்மத ராசா
லேசா லேசா லேசா ஆகுது லேசா மன்மத ராசா மன்மத ராசா கன்னி மனச கிள்ளாதே
கண்ணுல லேசா கண்ணுல லேசா பித்து பிடிச்சி நின்னானே
என் பச்சை உடம்புல உச்சி நரம்புல கிச்சு கிச்சு கிச்சு மூட்டாதே 
உன் ஒத்த உசுருல முத்து கொலுசுல என்ன என்ன வெச்சி வெச்சி தச்சானே
மன்மத ராசா மன்மத ராசா மன்மத ராசா மன்மத ராசா
கன்னி மனச கிள்ளாதே கண்ணுல லேசா கண்ணுல லேசா ! என்ன கணக்கு பண்ணேன் டா

MUSIC TALKS - YEDHO SEIGIRAI YENNAI EDHO SEIGIRAAI YENNAI YENNIDAM NEE ARIMUGAM SEIGIRAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்
ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்


உன்னோடு பேசினால் உள் நெஞ்சில் மின்னல் தோன்றுதே 
கண்ணாடி பார்க்கையில் என் கண்கள் உன்னை காட்டுதே
பெண்ணே இது கனவா நிஜமா உன்னை கேட்கின்றேன் 
அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா 
இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே உன்னால்
இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே


பெண்ணே எந்தன் கடிகாரம் எந்தன் பேச்சை கேட்கவில்லை 
உன்னை கண்ட நொடியோடு நின்றதடி ஓடவில்லை
இது வரை யாரிடமும் என் மனது சாயவில்லை
என்ன ஒரு மாயம் செய்தாய் என் இடத்தில் நானும் இல்லை
என்ன இது என்ன இது என் நிழலை காணவில்லை 
உந்தன் பின்பு வந்ததடி இன்னும் அது திரும்பவில்லை
எங்கே என்று கேட்டேன் உன் காலடி காட்டுதடி 

அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா 
இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே உன்னால்
இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே


காதல் நெஞ்சம் பேசிக்கொள்ள வார்த்தை ஏதும் தேவை இல்லை
மனதில் உள்ள ஆசை சொல்ல மௌனம் போல மொழி இல்லை
இன்றுவரை என் உயிரை இப்படி நான் வாழ்ந்ததில்லை 
புத்தம் புது தோற்றம் இது வேறெதுவும் தோன்றவில்லை
நேற்று வரை வானிலையில் எந்த ஒரு மாற்றமில்லை
இன்று எந்தன் வாசலோடு கண்டு கொண்டேன் வானவில்லை
ஒரே ஒரு நாளில் முழு வாழ்க்கை வாழ்ந்தேனே

அன்பே இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா 
இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே உன்னால்
இந்த உலகம் யாவுமே புதிதாய் தெரிகிறதே

ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்
ஏதோ செய்கிறாய் என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ அறிமுகம் செய்கிறாய்

GENERAL TALKS - பிரச்சனைகள் கடல் நீரை போல மனிதனை மூழ்கடிக்க முயற்சிக்கின்றன !

 


என்ன செய்தாலும் சரிபண்ண முடியாமல் போகும் நிலை உருவாவதால் தீர்க்க முடியாத தன்னுடைய பிரச்சனைகளைப் பற்றியே கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்ற ஒரு மனிதன் இருந்தான். அவன் அதிகமாகக் கவலைப்பட்ட போது அவனுடைய அதைரியமும் அதிகமாயிற்று. முடிவில் தற்கொலை செய்து கொள்ளத் தீர்மானித்தான். தன்னுடைய இந்த முடிவு தன்னுடைய குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தெரியக்கூடாது என்று அவன் விரும்பினான். கட்டடத்தைச் சுற்றி சுற்றி ஓடி இயற்கையான மாரடைப்பை உண்டாக்கி மரணம் அடைய வேண்டும் என்று எண்ணினான். ஆகவே ஓட ஆரம்பித்தான். ஓடிக் கொண்டே இருந்தான். அதிகமாக ஓட ஓட அவனுடைய களைப்பும் அதிகமாயிற்று. களைப்பு மிகுதியாகவே களைப்பைத் தவிர வேறு எதையும் அவனால் உணர முடியிவில்லை. படுக்கைக்குச் சென்று ஓய்வு எடுக்க வேண்டும் என்று மட்டும்தான் அவனால் எண்ண முடிந்தது. படுக்கையில் படுத்து உறங்கிப் போனான். பன்னிரண்டு மணி நேரம் கனவுகளே இல்லாத ஆழ்ந்த உறக்கத்தில் அவன் கழித்தான். எழுந்த போது புத்துணர்ச்சியுடன் இருந்தான். எந்தப் பிரச்சனையும் சந்திக்க முடியும் என்கிற ஆர்வம் தன்னுள் தோன்றி இருப்பதையும் உணர்ந்தான். சாகறதை விட வாழ்வது சுலபம் !!நீங்கள் சக்திகள் யாருக்கு கொடுக்க வேண்டுமோ அவர்களுக்கு போதுமான சக்திகளை கொடுத்தால்தான் சண்டைபொட முடியும். கொடுக்க மாட்டேன் என்று பெரிய மயிரை போல பேசுவது எதுக்கு ? இதுதான் தவறான செயல் இங்கே போதுமான சமையல் கலைஞர்கள் இருந்தாலும் சமையல் பொருட்கள் கொடுக்காமல் சாப்பாடு செய்ய சொல்வதை போன்ற முட்டாள்தனமான கான்ஸெப்ட்தான் சக்திகள் தேவைப்படுபவர்களுக்கு சக்திகளை கொடுக்காமல் இருக்கும் பாலிஸி ! நீங்கள் எப்போதுதான் திருந்த போகின்றீர்கள் ! இந்த மாதிரியான தற்காலிக தீர்வுகளை வைத்து வாழ்க்கையை கடைசி வரைக்கும் நகர்த்துவது என்பது கஷ்டமான விஷயம் ஆகும் ! 

கண்ணோடு காண்பதெல்லாம் தலைவா ! - TAMIL SHORT STORY !

 



ஒரு NANO கார் ஹைவே'ல பழுதாகி நின்னிருச்சு. அதுக்கு உதவி செய்ய ஒரு AUDI கார் உரிமையார் முன்வராரு.

"நான் உங்க NANO காரை அடுத்த ஊர்வரைக்கும் கயிறு கட்டி இழுத்துக்கிட்டுப் போறேன் .
எப்பவாவது வேகம் அதிகமாயிருச்சுனு தோனுனா நீங்க உங்க ஹெட்லைட்ட டிம்/பிரைட் பண்ணுங்க'ன்னாரு
டோப்பிங் ஆரம்பிச்சு ஒரு கிலோமீட்டர் போயிருக்கும் போது,
அந்த AUDI கார ஒரு BMW கார் செம வேகத்துல ஓவர்டேக் செய்யுது...! AUDI கார்க்காரர் காண்டாயிடுராரு...

"AUDI காரை, BMW கார் ஓவர்டேக் பண்ணுறதா ? நெவர்..."

ரெண்டு பெரிய காருக்கும் பலத்த போட்டி...
150 கிலோமீட்டர் ஸ்பீடு...
NANO க்காரர் லைட்ட போட்டுப்போட்டு அணைக்கிறாரு, பயந்துகிட்டு...
ஆனா AUDI காரர் கண்டுக்கவே இல்ல. வேகமும் குறைக்கல.

இதப் பாத்த ஒரு போலீஸ்க்காரர் தன்னோட வாக்கிடாக்கிய எடுத்து அடுத்த செக் போஸ்ட்ல கூப்பிட்டு சொல்றாரு...

ஒரு AUDI காரும், BMW காரும் போட்டி போடுறாங்க 150 கிலோமீட்டர் ஸ்பீடு...!

அதுல முக்கியமான விஷயம் என்னன்னா? ஒரு NANO கார் அவங்கள ஓவர்டேக் பண்ண லைட்ட அடிச்சுக்கிட்டே பின்னாடியே விரட்டிக்கிட்டு போகுது...!

யாருக்கு என்ன பிரச்சினைன்னு இங்கே யாருக்கும் தெரியாது. எதையோ பாக்குறது, கேக்குறத வச்சு அவர்களாவே ஒரு யூகத்துக்கு வந்து முடிவும் பண்ணிடுவாங்க...!

MUSIC TALKS - MUDHAL NAAL INDRU EDHUVO ONDRU VERAAGA ENNAI MAATALAAM ANGANGU ANAL YETRALAAM - TAMIL SONG LYRICS ! - VERA LEVEL PAATU !

முதல் நாள் இன்று எதுவோ ஒன்று  வேறாக உனை மாற்றலாம் அங்கங்கு அனல் ஏற்றலாம் என் உள்ளம் பாடுகின்றது யார் சொல்லி கற்று கொண்டது நில் என்றால் சட்ட...