சனி, 19 அக்டோபர், 2024

GENERAL TALKS - கண்ணை மூடிக்கொண்டு நம்பவேண்டிய கட்டாயம் !




எப்போதுமே உண்மையை சொல்பவர்களை மக்கள் நம்புவதே இல்லை. நம்புமபடி பொய்களை சொன்னால் அதனை கொண்டுதான் நல்ல விஷயமாக இருந்தாலும் பண்ண வேண்டியது உள்ளது. இது குறித்து ஒரு கதை சமீபத்தில் கிடைத்தது. ஒரு நாட்டில் கடும் பஞ்சம் நிலவுகிறது. மக்கள் உணவில்லாமல் தவிக்கிறார்கள். இதைத் தாங்கள் அரசரிடம் எடுத்துக் கூறிப் பசியால் வாடும் மக்களுக்கு உதவி கிடைக்கச் செய்ய வேண்டும்!" என்றார் தனாதிகாரி. "அதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அரசாங்கத்தின் உணவு தானியக் கிடங்குகளிலிருந்து உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும். ஆனால் மக்களுக்கு இலவசமாக எதையும் வழங்குவது அரசருக்குப் பிடிக்காது. மன்னரிடம் எப்படிச் சொல்லிப் புரிய வைப்பதென்றே தெரியவில்லை!" என்றார் அமைச்சர்.  "மழை பெய்தால்தான் நிலைமை மேம்படும். மழை வருவதற்கான அறிகுறிகளே தென்படவில்லையே!" என்றார் தனாதிகாரி கவலையுடன். அமைச்சரின் முகம் சட்டென்று மலர்ந்தது. "எனக்கு ஒரு யோசனை பிறந்திருக்கிறது!" என்றார் அவர். "நாட்டின் பல பகுதிகளிலும் அன்னதானத்துக்கு ஏற்பாடு செய்து விட்டீர்கள். மழை வரும் வரை அன்னதானம் தொடரும் என்றும் மன்னர் அறிவித்து விட்டார். இதை எப்படிச் சாதித்தீர்கள் அமைச்சரே?" என்றார் தனாதிகாரி வியப்புடன்.  "நம் அரசருக்கு தர்மசிந்தனை கிடையாது. நீங்கள் என் நம்பிக்கைக்குரியவர் என்பதால் உங்களிடம் நான் இதை வெளிப்படையாகச் சொல்கிறேன். ஆனால் அரசருக்கு ஆன்மீகம், சோதிடம் போன்றவற்றில் நம்பிக்கை உண்டு. நாட்டில் ஒரு சாபம் நிலவுவதாகவும், தொடர்ந்து அன்னதானம் செய்தால்தான் அந்த சாபம் நீங்கி நாட்டில் மழை பொழிந்து சுபீட்சம் ஏற்பட்டு அரசாங்கப் பெட்டகத்தில்பணம் வந்து நிறையும் என்றும் ஒரு புகழ் பெற்ற சோதிடரைக் கொண்டு அரசரிடம் சொல்ல வைத்தேன்" என்றார் அமைச்சர். "சோதிடர் எப்படி இதற்கு ஒப்புக் கொண்டார்?" என்று கேட்டதும் "நாட்டுக்கு நன்மை பயக்கும் என்பதால் சோதிடர் இதற்கு ஒப்புக் கொண்டார். அதுவும் அவர் சொன்னது பொய் இல்லையே! பசியால் வாடும் மக்களுக்கு உணவளித்தாலே அது பீடை நீங்குவதுதானே! அரசர் இதற்கு உடனே ஏற்பாடு செய்து விட்டார்.  "அரசாங்கம் மட்டும் அன்னதானத்துக்குப் பணம், தானியங்கள் கொடுத்து உதவினால் போதாது, வசதி படைத்தவர்கள், வியாபாரிகள், பெருந்தனக்காரர்கள் ஆகியோரும் இதற்குப் பணம் கொடுத்து உதவினால்தான் அன்னதானத்தைத் தொடர்ச்சியாகவும், பெரிய அளவிலும் நடத்த முடியும் என்று நான் அரசரிடம் கூறினேன். அவர் அதை ஏற்றுக் கொண்டு பொருள் படைத்தவர்கள் அனைவரும் இந்த அன்னதானத்துக்கு உதவ வேண்டும் என்று அறிவிப்புச் செய்து விட்டார். "அதனால் ஓரளவுக்கு வசதி உள்ளவர்கள் கூட அன்னதானத்துக்குப் பணம், பொருட்கள், தானியங்கள் கொடுத்து உதவுகிறார்கள். நிலைமை சரியாகும் வரை பசியால் வாடும் ஏழைகளுக்கு ஒருவேளை உணவாவது வழங்குவதற்கான ஏற்பாட்டைச் செய்து விட்டோம் என்ற திருப்தி எனக்கு இருக்கிறது.  "நீங்கள் அன்று மழை வருவதற்கான அறிகுறிகளே தென்படவில்லையே என்று கூறியதைக் கேட்டதும்தான் எனக்கு இந்த யோசனை தோன்றியது. அதானால் உங்களுக்குத்தான் நான் நன்றி கூற வேண்டும்! தானாதிகாரியைக் கனிவுடன் பார்த்துச் சிரித்தார் அமைச்சர்.

2 கருத்துகள்:

Siva Gurunadh சொன்னது…

ஒரு மனுசன் எத்தனை முறை வெற்றியடைகிறாரோ அதனை பொறுத்தது வலிமை என்பார்கள், உண்மையில் எத்தனை அளவுக்கு போராடுவாரோ அதனையே பொறுத்து வலிமை என்றுரைத்திட வேண்டும்.

சக்தி சொன்னது…

விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆர்யா, கிருஷ்ணா நடிப்பில் வெளியான **'யட்சன்'** திரைப்படத்தைப் பற்றிய விரிவான விமர்சனம் இதோ:
எழுத்தாளர்கள் சுபாவின் திரைக்கதை 'தனி ஒருவன்' படத்தில் எந்த அளவு பிரமாதமாக அமைந்ததோ, அதற்கு நேர்மாறாக இதில் சொதப்பலாக அமைந்துள்ளது. ஆனந்த விகடனில் தொடராக வந்த கதையை சினிமாவுக்காக 'பட்டி டிங்கரிங்' செய்கிறேன் என பஞ்சராக்கியுள்ளனர். ஒரே நேர்க்கோட்டில் கதை சொன்னாலே குழம்பும் ரசிகர்களுக்கு முன்னால், இதில் மூன்று கிளைக்கதைகளை (Tracks) இணைக்க முயன்று திரைக்கதையில் சறுக்கியிருக்கிறார்கள்.
**கதைக்களம்:**
தூத்துக்குடியில் கொலை செய்துவிட்டு தப்பிக்க சென்னை வரும் ஆர்யா, ஒரு கொலை ப்ராஜெக்ட்டை ஏற்கும் சூழலுக்கு தள்ளப்படுகிறார். இன்னொரு பக்கம், சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற லட்சியத்துடன் சென்னை வரும் கிருஷ்ணா. எதிர்பாராத விதமாக இருவரும் இடம் மாற, கொலை செய்ய வந்தவர் சினிமா ஹீரோவாகிறார். இவர்களுடன், தொட்டாலே மற்றவர்களின் எதிர்காலத்தை கணிக்கும் 'பேராநார்மல்' சக்தி கொண்ட தீபா சன்னிதி மற்றும் சுட்டித்தனமான ஸ்வாதி ரெட்டி ஆகியோரின் கதைகள் எப்படி இணைகிறது என்பதே மீதிக்கதை.
**நடிப்பு மற்றும் கதாபாத்திரங்கள்:**
* **ஆர்யா:** அஜித் ரசிகராக வரும் காட்சிகளில் விசில்களை அள்ளுகிறார். வழக்கம் போல அசல்ட் நடிப்பும், ரொமான்ஸ் காட்சிகளில் தன் முத்திரையையும் பதித்துள்ளார்.
* **கிருஷ்ணா:** இவரது டயலாக் டெலிவரியும் முக பாவனைகளும் மிகச் சுமார். இன்னும் முன்னேற வேண்டும்.
* **தீபா சன்னிதி:** முக பாந்தமும், கவர்ச்சியும் கலந்த கலவையாகத் தெரிகிறார். இவரது கதாபாத்திரத்திற்கு கொடுக்கப்பட்ட 'எதிர்காலத்தை கணிக்கும்' அம்சம் சுவாரஸ்யம்.
* **ஸ்வாதி ரெட்டி:** 'ஆரஞ்சு மிட்டாய்' உதடுகளுடன் மின்னினாலும், சுட்டித்தனம் என்ற பெயரில் காட்டும் தெனாவெட்டு சில இடங்களில் ரசிக்கவில்லை.
* **பிறர்:** ஆர்.ஜே. பாலாஜியின் குரலும் காமெடியும் படத்திற்கு பெரிய பலம்; அவர் முன்னணி காமெடியனாக வாய்ப்புள்ளது. தம்பி ராமையா ஓவர் ஆக்டிங் செய்தாலும் கவர்கிறார். வில்லனின் நடிப்பும், கிளைமாக்ஸ் ட்விஸ்டும் சிறப்பு.
**தொழில்நுட்பம் மற்றும் இயக்கம்:**
யுவன் சங்கர் ராஜாவின் இசை சுமார் ரகம். ஆர்யா மற்றும் கிருஷ்ணா இடையே திரைக்கதையை பேலன்ஸ் செய்ய முயன்ற இயக்குநர், 'ஆரம்பம்' படத்தில் காட்டிய புத்திசாலித்தனத்தை இதில் தவறவிட்டுள்ளார். ஆள்மாறாட்டக் காட்சிகளில் இருக்கும் லாஜிக் மீறல்கள் (உதாரணமாக, அடியாள்கள் போட்டோ கூட இல்லாமல் ஆளைத் தேடுவது, கொலைக் குற்றவாளியின் புகைப்படம் மீடியாவில் வராமல் இருப்பது) இயக்குநரின் கேள்விக் குறியான இடங்கள். அஜித் பற்றிய குறிப்புகள் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்றாலும், பொது மக்களுக்கு அது துருத்திக்கொண்டு தெரிகிறது.
**வசனங்கள் மற்றும் ஹைலைட்ஸ்:**
"நீ என்னை குழப்பி குழம்பு வைக்கப் பார்க்கறே", "சினி ஃபீல்டுல ஜெயிக்க டேலண்ட் மட்டும் முக்கியம் இல்லை, டைமிங்கும் முக்கியம்" போன்ற வசனங்கள் கவனம் பெறுகின்றன. குண்டு ஆர்த்தியின் குத்துப்பாடல் மற்றும் எஸ்.ஜே. சூர்யாவின் கெஸ்ட் ரோல் ஆகியவை இயக்குநரின் பாராட்டத்தக்க முயற்சிகள்.
மொத்தத்தில், **யட்சன்** - கொஞ்சம் கலகலப்பு, கொஞ்சம் இளமை, ஆனால் ஆங்காங்கே கடுப்பேற்றும் திரைக்கதையால் ஒரு **சுமார் ரகப் படமாக** முடிகிறது.
**சி.பி. கமெண்ட்:**
* **விகடன் மார்க் (கணிப்பு):** 40
* **குமுதம் ரேங்க் (கணிப்பு):** சுமார்
* **ரேட்டிங்:** 2.5/ 5

SPECIAL TALKS - FT. HTML ARTWORKS - EP.4

---  போனைப் பார்க்காமலேயே சட்டைப் பைக்குள் கையை வைத்து 'Good Morning' அல்லது 'Good Night' என்று தப்பும் இல்லாமல் டைப் செய்யு...