Tuesday, July 22, 2025

GENERAL TALKS - இன்று ஒரு தகவல் - எபிசோட் - 022


தனிமையில் இருந்தால் மட்டுமே ஜெயித்துவிட முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தவறானது. ஒவ்வொருவருக்கும் தனக்கென செலவு செய்ய நேரம் தேவை,  மேலும் அவ்வாறு செலவு செய்ய கிடைக்கும் நேரத்தில் சரியான விஷயங்களை செய்வதற்கான செயல்களை படிப்பா படித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமும் எந்த ஒரு மனிதனுக்கும் இருக்கிறது.


அமைதியான தனிமையில் இருப்பது என்பது மன அழுத்தத்தைக் குறைக்கும் நன்மைகளைக் கொண்டுள்ளது, ஆனால் அது உங்கள் மீது அளவுக்கு அதிகமகா செலுத்தப்படும்போது அல்லது கட்டாயப்படுத்தப்படும் போது தனியாக இருப்பது முற்றிலும் மாறுபட்ட பரிமாணத்தைப் பெறுகிறது.

அப்படியானால் அளவுக்கு அதிகமான தனிமையின் விளைவுகள் எப்படி இருக்கும் ? ஆச்சரியப்படும் விதமாக இருக்கும் !!. இந்த ஆய்வை விரிவானதாகவும் தெளிவானதாகவும் மனிதர்களிடம் செய்து பார்த்தபோது வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு நேரங்களில் தனித்துவமான விளைவுகளை அனுபவித்தாலும், நீண்ட நேரம் தனிமைப்படுத்தப்படுவதால் அறிகுறிகள் மிகவும் கடுமையானதாகவும் தொடர்ந்து ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கும் விதமாகவும் இருக்கும். 

ஒருவர் விருப்பமின்றி நாட்கள், வாரங்கள், மாதங்கள் அல்லது வருடக்கணக்கில் தனியாகவும் செய்ய வேலைகள் இல்லாமல் ஒரு இடத்தில் காலவரையின்றி அடைத்து வைக்கப்பட்டிருக்கும்போது, அவர்களின் உடல் பல மாற்றங்களுக்கு உள்ளாகும்.

 என்ன நடக்கக்கூடும் என்பதைப் பார்ப்போம் !!. ஆரம்பத்தில், மன அழுத்தம் அதிகரிக்கக்கூடும், மேலும் நேரம் செல்லச் செல்ல, அந்த மன அழுத்தம் அதிகமகா வரலாம். உணர்ச்சிகள் ஒரு அளவுக்குள்ளே இருக்கவேண்டிய நிலைத்தன்மைக்கு நாள்பட்ட சமூக தொடர்புகள் மற்றும் அர்த்தமுள்ள செயல்பாடுகள் அவசியம். 

ஏனெனில் அவை ஆராய்ச்சியாளர்கள் சமூகத்தின் ரியாலிட்டி தெரிந்துகொள்ளும் சோதனை என்று சொல்லும் விளைவை நமக்கு வழங்குகின்றன. நமது உணர்வுகள் எவ்வளவு பகுத்தறிவு மிக்கவை என்பதை நாம் அளவிடக்கூடிய ஒரு வகையான ஸ்கேல் இந்த சோசியல் கம்யுனிக்கேஷன். 

எனவே ஒருவர் அந்த வகையான தொடர்பு மற்றும் பணிகளை இழக்கும்போது, அவர்களின் அடையாள உணர்வு மற்றும் ரியாலிட்டி தெரிந்து வாழும் ஒரு புத்திசாலி மனிதனாக இருக்கிறேன் என்ற உணர்வு அச்சுறுத்தலுக்கு ஆளாகிறது, அவர்களின் எண்ணங்கள் சுழல்கின்றன, அவர்களின் தூண்டுதல்கள் கட்டுப்பாடுகளை மீறுகின்றன. 

இது அமர்வுகளின் மனச்சோர்வு, வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் எண்ணம் மற்றும் சிலருக்கு மனதின் தளர்வு ஏற்படுவதற்கான மோசமான உணர்வுகள் மனதோடு விளையாட தேவையான ஆடுகளத்தை அமைக்கிறது. 

காலப்போக்கில், இந்த நீடித்த கிளர்ச்சி பயம் மற்றும் மன அழுத்தத்தை ஒழுங்குபடுத்தும் மூளையின் பகுதிகள் தவறாக பதிலளிக்கக்கூடியதாகவும், அதிவேகமாகவும் மாற்றக்கூடும். இதற்கிடையில், பகுத்தறிவு மற்றும் தார்மீக தீர்ப்புக்கான மூளை மையமான ப்ரீஃப்ரொன்டல் கோர்டெக்ஸ் சுருங்கி, கவனம், நினைவகம் மற்றும் அறிவாற்றலைக் குறைக்கலாம்.

ஒட்டுமொத்தமாக, சமநிலை பகுத்தறிவு சிந்தனையிலிருந்து உணர்ச்சியை நோக்கி மாறுகிறது, மேலும் ஒருவர் இந்த நிலையில் இருப்பதால், ஏற்றத்தாழ்வு ஆழமாக வேரூன்றி, பதட்டம், வரம்பு மற்றும் பகுத்தறிவற்ற செயல்களுக்கு அதிக வாய்ப்புள்ளது. தனிமை என்பது நபரின் ஆரோக்கியத்தின் பிற பகுதிகளையும் பாதிக்கும். அவர்கள் நேர உணர்வை இழந்து தூங்குவதில் சிரமப்படலாம் இருந்தாலும் இதனை கண்டுகொள்ளாமல் சரி பண்ணாமல் விட்டுவிட்டால் வாழ்க்கையே பாதிக்கும் !

GENERAL TALKS - இன்று ஒரு தகவல் - எபிசோட் - 021

 


இங்கே எல்லோருமே ஆன் டிவிஷனல் இண்டெலிஜெண்ட் தொழில்நுட்பத்தை தவறான ஒரு விஷயமாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்ற தொழில்நுட்பம் இப்பொழுது எந்த வகையில் மக்களுக்கு தோன்றுகிறது என்றால் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் என்ற தொழில்நுட்பம் இருந்தால் மட்டும் தான் இனிமேல் வரப்போகும் வாழ்க்கையில் மிகவும் சிறப்பாக இருக்க முடியும்.

ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் தொழில்நுட்பத்தை வைத்துக்கொண்டு இப்போது அதிகமாக மக்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு செயல் என்னவென்றால் இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து தகவல்களையும் ஒரு டேட்டா பேஸாக கொண்டு சென்று அந்த டேட்டா பேஸின் டெக்ஸ்ட்கலை சோர்ஸ் என்று வைத்துக் கொண்டு அந்த டேட்டா பேஸின் விஷயங்களை நிறைய மக்களுக்கு உடைத்து சின்ன சின்ன விஷயங்களாக கொடுத்துக்கொண்டிருக்கிறது.

உதாரணத்துக்கு நாம் ஒரு கேள்வி கேட்க வேண்டுமென்று ஒரு தேடுபொறியை சொடுக்கினால் அந்த தேடு பொறி.சரியான முடிவுகளை மட்டும் தான் காட்டும் என்று சொல்ல முடியாது. அந்த தேடுபொறி என்ன செய்யும் என்றால் அந்த முடிவுகள் இருக்க கூடிய இணையதளங்களை லிங்குகள் மற்றும் லிங்குகள் ஆக நம்முடைய பக்கங்களில் இணைத்து கொடுத்து வைத்திருக்கும். ஆனால் அறிவியல் இண்டெலிஜன்ஸ் வகையறாக்களில் இதுபோன்ற ஒரு கேள்வி கேட்டால்.அந்த கேள்விக்கான தகுந்த பதிலை சரியாக இருக்கிறதோ அல்லது இல்லையோ ஒரு மேலோட்டமாக 99% அளவுக்கு மிக நுணுக்கமான பதில்களாக இருக்கக்கூடிய அளவுக்கு அந்த ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் என்பது இப்பொழுதெல்லாம் கொடுத்து விடுகிறது.

உதாரணத்துக்கு "இந்தியாவில் இணையத்தில் வேலை செய்து பணத்தை சம்பாதிக்க சில இணையதளங்களை கொடுப்பாயா ? - என்று AI- கேட்டால் மிகத் தெளிவாக ஒரு LIST போட்டு இந்த இணையதளங்களில் இப்படி வேலை செய்தால் பணம் கிடைத்துவிடும் என்று தெளிவாக சொல்லிவிடுகிறது.

ஆனால் தேடுபொறியில் தேடினால் இந்த இணையதளங்களின் பக்கங்கள் மட்டும் தான் நம் கண்களுக்கு தெரிகிறது. அது தவிர்த்து அந்த இணையதளங்களில் நாம் இன்னும் அதிகமாக தேடினால்தான் இவைகளில் எந்த அளவுக்கு பணம் சம்பாதிக்க முடியும் என்ற கருத்துக்கள் நமக்கு தெரிய வருகிறது. இதனால்தான் ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் இப்பொழுதெல்லாம்

GENERAL TALKS - இன்று ஒரு தகவல் - எபிசோட் - 020


ஒரு சில நேரங்களில் மிகவும் தர்ம சங்கடமான விஷயமாக இருப்பது என்னவென்றால் உண்மையான நேரங்களில் உண்மையான ரியாலிட்டி என்ற    விஷயம் எப்படி நடந்து கொள்கிறது என்பதை யாருமே புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறார்கள். உண்மையாகவே ஒருவருடைய மனது எந்த அளவுக்கு கஷ்டப்படும் என்பதையும் யாருமே கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள். ஒரு சில விஷயங்களை நம்மால் எளிமையாக செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது மிக மிகவும் கடினமானது. சமீபத்தில்தான் டிராகன் என்ற திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. டிராகன் என்ற திரைப்படத்தின் கதையம்சம் எவ்வாறு இருக்கும் என்றால் ஒரு சராசரியான இளைஞர் அதிகமாக படிப்பின் மீது ஆர்வம் செலுத்தாமல் இருக்கிறார். இதற்கு காரணமாக தன்னுடைய இளம் வயதில் காதலித்த பெண் தோழி தன்னை விட்டு பிரிவதற்கு காரணமாக இருந்ததற்கு தன்னுடைய ஒழுக்கமான மற்றும் நேர்மையான வாழ்க்கை மட்டும் தான் காரணம் என்று தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார். ஒரு சில விஷயங்களை நம்மால் எளிமையாக செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அது மிக மிகவும் கடினமானது. சமீபத்தில் தான் டிராகன் என்ற திரைப்படத்தைப் பார்க்க நேர்ந்தது. டிராகன் என்ற திரைப்படத்தின் கதையம்சம் எவ்வாறு இருக்கும் என்றால் ஒரு சராசரியான இளைஞர் அதிகமாக படிப்பின் மீது ஆர்வம் செலுத்தாமல் இருக்கிறார். அதற்கு காரணமாக தன்னுடைய இளம் வயதில்.ஒரு தண்ணீர் சேர்த்து ஒரு பெண் தன்னை விட்டு பிரிவதற்கு காரணமாக இருந்ததற்கு தன்னுடைய ஒழுக்கமான மற்றும் நேர்மையான வாழ்க்கை மட்டும் தான் காரணம் என்று தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார். இருந்தாலுமே ஒரு கட்டத்தில் ரியாலிட்டி என்பது நிஜமாக ஜெயிப்பவர்களுக்கு மட்டும் தான் சொந்தமானது என்றும் நம்முடைய வாழ்க்கையில் என்னதான் நிபந்தனைகள் மற்றும் கட்டுப்பாடுகள் என்பதை இருந்தாலும் மிகவும் சோகமான விஷயங்கள் நடந்தாலும் அவற்றை தவிர்க்க நினைக்காமல் அதனை தடுத்து அதிலிருந்து நல்ல விதமாக யோசனை செய்து வாழ்ந்தால் மட்டும் தான் வாழ்க்கையில் நன்றாக இருக்க முடியும் என்றும் ஒரு மேலோட்டமான சிந்தனையை இந்த படம் மக்களுக்கு கொடுத்து இருக்கிறது என்று சொல்வது தான் நிதர்சனமான உண்மை. இந்த படத்தை பற்றிய விமர்சனத்தை கொடுக்க நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.

GENERAL TALKS - இன்று ஒரு தகவல் - எபிசோட் - 019


நம்முடைய சினிமாக்களில் இருக்க கூடிய பிரச்சினை என்னவென்றால் நம்முடைய சினிமா வெளியிடப்படவதே மிகப் பெரிய அரசியலாக கொண்டு இருக்கிறது. ஒரு சினிமாவை எடுத்து வெளியிட்டு பணத்தை சம்பாதித்து விடலாம் என்று நினைக்கிறார்கள். ஆனாலும் சினிமாவுக்கான உலகம் என்பது ஒரு மிகப்பெரிய போராட்டமான அமைந்திருக்கிறது. இந்த காலத்தில் இந்த தமிழ்நாட்டில் சினிமாவை வெளியிட வேண்டுமென்று ஒரு தயாரிப்பாளர் ஆசைப்பட்டால் இங்க தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய முதன்மையான பிரச்சனை என்னவென்றால் அதிகமான படங்களை ஒருவர் ஒரு படத்துக்கு மேல் இன்னோரு படம் என்று கம்பேரிஸன் செய்து செய்து மட்டமான அறிவிப்புகளை நல்ல படங்களுக்கு அளித்து நல்ல படங்கள் வருவதையே நம்முடைய தமிழ் நாடு ஆடியன்ஸ் தடுத்து விடுகிறார்கள். சும்மா காரணமே இல்லாமல் நிறைய சண்டைக் காட்சிகள், துப்பாக்கி காட்சிகள் என்று ஹாலிவுட்டில் நிறைய படங்கள் வருகிறது. இந்த படங்களில் எல்லாம் சுத்தமாக லாஜிக் என்பதே கிடையாது. இருந்தாலும் இந்த படத்தை எல்லாம் கிட்ட செய்துவிட்டு ஹாலிவுட் சந்தோஷமாக இருக்கிறது. ஆனால் நம்முடைய தமிழ்நாட்டில் நல்ல கதையமைப்பு கொண்ட ஒரு படம் வந்தாலும் போதுமான மார்க்கெட்டிங் இல்லாமல் டிஸ்ட்ரிபியூட்டர்கள் உள்ளூர் அரசியல் காரணமாக அந்த படங்கள் மிகவும் கடினமாக வெளியிடப்பட்டு மிகவும் கடின உழைப்பு கொடுக்க செய்து மிகவும் கடினமாக பணத்தை எடுக்க முடியாமல் தோற்றுப் போகிறது. கருப்பு பணத்தை வெள்ளை பணமாக மாற்றுவதற்கு மட்டும் தான் இங்கே சினிமா தேவைப்படுகிறது என்று உங்களில் எத்தனை பேருக்குத் தெரிகிறது? மலையாளம் மிகவும் தெளிவான கதையமைப்பு கொண்ட படங்களை சப்போர்ட் செய்கிறது. பெரிய பட்ஜெட் படமாக இருந்தால் மட்டும் தான் சப்போர்ட் செய்வேன் என்ற கலாச்சாரம் மலையாளத்தில் இல்லை. இதனால் தான் இன்று வரையில் மலையாள திரைப்படங்கள் கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் அதிகமான மக்களின் பாராட்டுக்களையும் மக்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது என்பதை யாராலும் மறுக்க முடியாது.

 

GENERAL TALKS - இன்று ஒரு தகவல் - எபிசோட் - 022

தனிமையில் இருந்தால் மட்டுமே ஜெயித்துவிட முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது தவறானது. ஒவ்வொருவருக்கும் தனக்கென செலவு செய...