Thursday, October 17, 2024

GENERAL TALKS - பொதுவாக அவசரப்பட கூடாது , நிதானமாக யோசிக்க வேண்டும் !




ஒரு சிறுகதை இருக்கிறது. பணத்தை எப்போதுமே அவசரத்தை உருவாக்க பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்தினால் விளைவு நெகட்டிவ்வாக முடிய வாய்ப்பு இருக்கிறது. ஒரு முறை வேட்டைக்குப் போன அரசன் தன்னுடைய குழுவினரை விட்டு ஒரு காட்டிற்குள் தனியாக வந்து சிக்கிக் கொண்டான். நிறைய நேரம் தேடி காட்டுவாசிகளின் இருப்பிடத்தை அடைந்து அங்கே இருப்பவர்களிடம் பேசவே இப்போது அரசனைப் பல்லக்கில் வைத்துக் கொண்டு அவனது நாட்டிற்கு கொண்டு போய் சேர்க்க அங்கே இருந்த காட்டுவாசிகள் நான்கு பேர் ஒப்புக் கொண்டார்கள். அவர்களிடம் பேசிய போது நாட்டிற்குப் போய் சேர ஆறு நாட்களாகும் என்று அறிந்து கொண்டான். இருந்தாலும் அரசனுக்கோ வெகுவிரைவாக நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்ற விருப்பம். எனவே. அரசன் அவர்களிடம். "என்னை மூன்று நாட்களில் கொண்டு போய் சேர்த்தால் மூன்றாயிரம் தருகிறேன். இரண்டே நாட்களில் கொண்டு போய் சேர்த்தால் 5000 பொற்காசுகள் தருகிறேன். " என்றான். பல்லக்கு சுமந்தக் காட்டுவாசிகள் பொன்னுக்கு ஆசைப்பட்டு வேகத்தை கூட்டிக் கொண்டே போனார்கள். ஆனால். நடந்ததோ வேறு. ஆறு நாட்கள் கழிந்தும் காட்டுக்குள் உள்ளேயே சுற்றிக் கொண்டு இருந்தார்கள். ஒரு கட்டத்தில் சோர்ந்து போய் பல்லக்கை கீழே இறக்கி வைத்து விட்டார்கள். அரசனுக்கு கோபம். ஆனால். அவர்கள் மன்னிக்க வேண்டும் மன்னா, "பொறுமையும், நிதானமும்" இல்லாமல் வேகத்திலேயே கவனம் வைத்தக் காரணத்தால் வழியைத் தவற விட்டு விட்டோம் என்று வேதனையுடன் கூறினார்கள். இங்கே அவசரப்பட்டதால் பொருளாதார இழப்பும் இருக்கிறது. மேலும் யோசித்து நிதானமாக வேலை பார்ப்பவர்களை கூட எதுவும் யோசிக்காமல் கண்மூடித்தனமாக முடிவெடுக்க வைத்துவிடுகிறது என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். வேலை பார்ப்பவர்களை இப்படித்தான் நடத்த வேண்டும் எந்த மமதை இருப்பது தவறானது. உங்களிடம் பணம் இருந்தால் என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்று நினைப்பது ஒரு பக்கம் இருந்தாலும் எந்த பொருளையும் சேவையையும் தகவலையும் வாங்கிவிடலாம் என்று நினைப்பது வேல்யூயேஷன் எரர் என்று சொல்லப்படுகிறது. இந்த தவறை நீங்கள் செய்யாதீர்கள். நீங்கள் நிதானமாக யோசித்து முடிவெடுக்க கற்றுக்கொள்ள வேண்டும். 

GENERAL TALKS - சந்தோஷமான வாழ்க்கை என்பது இதுதான் !




இந்த கதையும் படித்தபோது பிடித்து இருந்தது ! ஒரு காலத்தில் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட பேரரசன் ஒருவன் இருந்தான். இருந்தாலும் அவனுக்கு தன் மனதை தூய்மைப்படுத்திக் கொள்ளவும், இறை வழியில் வாழ்வை செலுத்தவும் விருப்பம்.”அதற்கு என்ன செய்வது?” என்று வழி தேடியவன், குரு ஒருவரை சந்தித்தான். தன்னுடைய விருப்பத்தை அவரிடம் வெளிப்படுத்தியவன், ”குருவே! நான் என்ன செய்ய வேண்டும்?” என்றான் மன்னனின் விருப்பத்தைக் கேட்ட அந்த குரு, ”நீ ஒரு தோட்டம் போடு” என்றார். “தோட்டம் போட்ட பிறகு என்ன செய்வது?” என்று கேள்வி கேட்டான் மன்னன். “நீர் பாய்ச்சு. பிறகு மரம் வளர்த்து அதன் பிறகு அந்த மரங்களை பராமரித்து வா.” என்றார் குரு. எப்போதும் குரு ஒரு விஷயம் சொல்கிறார் என்றால், அதில் ஆயிரம் பொருள் புதைந்திருக்கும் என்பதை உணர்ந்த மன்னன், தன்னுடைய அரண்மனை திரும்பினான். அரண்மனைக்கு அருகிலேயே பெரிய இடத்தில் தோட்டம் உருவாக்கத் தொடங்கினான். ஆயிரக்கணக்கானவர்களின் துணையுடன் இதற்கான பணியில் ஈடுபட்டான். ஒரு சில ஆண்டுகள் பெரும்பாடுபட்டு, அற்புதமான ஒரு தோட்டத்தை உருவாக்கினான். அந்தத் தோட்டம் ஏராளமான மரங்களுடன் பச்சைப்பசேல் என்று காட்சியளித்தது. பல மரங்கள் பல்வேறு வண்ண பூக்களுடன் பூத்துக் குலுங்கின. பார்க்கும் போதே அந்த இடம் மனதிற்கு இதம் அளிப்பதாக இருந்தது. அத்துடன் மிக ரம்மியமாகவும் அந்த இடம் காட்சியளித்தது. மன்னன், ஒரு நாள் குருவை சந்திக்கச் சென்றான். தான் ஒரு தோட்டத்தை உருவாக்கி விட்டதாகவும், அந்தத் தோட்டத்தை வந்து பார்வையிடும்படியும் குருவை அழைத்தான். அவரும் மறுநாள் வருவதாக கூறினார். குருவை வரவேற்க தடபுடலான ஏற்பாடுகளைச் செய்தான் மன்னன். தன் பணியாளர்களை வருத்தி எடுத்து, அங்கிருந்த காய்ந்த சருகுகள் அனைத்தையும் அப்புறப்படுத்தினான். காய்ந்த சுள்ளிகள், சருகுகள் எதுவும் இல்லாமல், அந்த இடம் மிகவும் தூய்மையாக பளிச்சென்று காட்சி தந்தது. சிறிது நேரத்தில் குரு வந்தார். மன்னன் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றான். தான் உருவாக்கிய தோட்டத்தை சுற்றிக் காண்பித்தான். தூய்மையாக வைத்திருப்பதைப் பார்த்து, குரு தன்னை பாராட்டுவார் என்று மன்னன் மிகவும் ஆவலோடு காத்திருந்தான். ஆனால் அவரது முகத்தில் கோபமும், வருத்தமும் மட்டுமே தென்பட்டது. இதைக் கண்ட மன்னன், ”குருவே! தோட்டம் எப்படி இருக்கிறது? நாங்கள் எதாவது தவறு செய்து விட்டோமா?” என்று கேட்டான். “எல்லாம் சரிதான். தூய்மையான தங்கக் காற்றைக் காணவில்லையே? எங்கே அந்த புனிதமான பொன்னிறக் காற்று எங்கே?” என்றார் துறவி. மன்னனுக்கு எதுவும் புரியவில்லை. குரு எதையோ தேடுவதுபோல் அங்கும் இங்குமாக ஓடினார். இறுதியாக ஓரிடத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த காய்ந்த சருகுகளையும், பழுத்த இலைகளையும் அள்ளி வந்து தோட்டத்திற்குள் கொட்டினார். அந்த நேரம் பார்த்து வீசிய காற்றில், வீசிய காற்றில் இலைகளும் சறுகுகளும் ஆட ஒரு சலசலப்பு. இப்பொழுதுதான் இந்த தோட்டம் உயிரோட்டமாக உள்ளது. இலைகளின் நடனமும் ஒலியும் இல்லாமல் இதுவரை இந்த தோட்டம் உயிரோட்டம் இல்லமால் ஒரு ஓவியம் போல இருந்தது. மஞ்சள் நிறத்தில் இருந்த பழுத்த இலைகள் தோட்டமெங்கும் சுழன்று பறந்தோடின. அதைக் கண்ட குரு, ”பிரமாதம். இது தானப்பா நான் கேட்ட பொன்னிறக் காற்று. இப்போது பார். உன்னுடைய தோட்டம் உயிரோட்டமாக மாறிவிட்டது” என்றார் குதூகலமாக. இதனை கேட்ட மன்னன், ”குருவே! மரங்களில் உள்ள இலைகள் எல்லாம் உதிர்ந்துவிட்டால் என்ன நிகழும்” என்றான். அதற்கு அந்த துறவி “அங்கே பொன்னிற காற்று தவழும்” என்றார். பின்னர் மன்னனிடம் கூறினார், ”ஒரு நாள் என்பது பகல் மட்டுமல்ல. இரவும்தான். மரணம் என்பது வாழ்க்கையின் நிறைவே. வாழ்க்கையின் கடைசி பருவம். அந்த பருவத்தையும் நேசிக்க வேண்டும். மரணத்தை எண்ணி பயம் கொள்ள கூடாது. தோட்டத்தில் இருக்கும் இந்த சருகுகளும், பழுத்த இலைகளும். எண்ணங்கள் சுழன்று ஓடுவதுதான் புனிதமான பொன்னிறக் காற்று. தெளிவு என்பது அந்த எண்ணங்களை அப்புறப்படுத்தி. வெற்றி கொள்வது அல்ல. மாறாக அதனைக் கடந்து சென்றுவிடுவதே” என்றார்.

GENERAL TALKS - போறாமைப்பாடுவது என்பது தவறானது !




இந்த கதை நான் படித்தபோது பிடித்து இருந்தது !அது ஒரு அடர்ந்த காடு. கிழட்டு சிங்கம் ஒன்று, அந்த காட்டிலுள்ள விலங்குகளை ஆளுமை செய்து வந்தது. காட்டின் நடுவிலுள்ள பாறை முகப்பில் படுத்துக் கிடக்கும் சிங்கத்தை அனைத்து விலங்குகளும் வணங்கி, தாங்கள் வேட்டையாடிய இறைச்சியை போட்டுச் செல்லும். இதையே நாள்தோறும் பார்த்துக் கொண்டிருந்த குள்ளநரிக்கு பயங்கர ஆத்திரம் வந்தது. சிங்கத்திற்கு மட்டும் ஏன் இந்த மரியாதையை கொடுக்க வேண்டும். அப்படி என்ன சாதனையை அது செய்துவிட்டது என, தனக்குதானே யோசித்துக் கொண்ட குள்ளநரி, சிங்கத்தின் ஆசனத்தை கைப்பற்ற சதி செய்தது. அருமையான சிங்க ராஜாவே. நீங்கள் அமர்வதற்கு இலை, பூக்களுடன் நிறைந்த ஆசனத்தை அதோ அங்கே தயார் செய்து வைத்துள்ளேன். இனிமேல் நீங்கள் அங்கிருந்தபடியே இந்த காட்டை ஆட்சி செய்யலாம், வாருங்கள் என்று, பணிவுடன் அழைத்தது. சிங்கம் அமைதியாக கிடந்தது. அந்த ஆசனம் மலை உச்சியில் உயரமான இடத்தில் இருப்பதால், யார் எதை, எதை வேட்டையாடுகிறார்கள் என்பதை அங்கிருந்தபடி நீங்கள் பார்த்து, அவர்களிடம் கறாராக உங்களுக்கான உணவை கேட்டுப் பெறலாம், வாருங்கள் என்று கூறி சிங்கத்தின் ஆசையை நரி தூண்டியது.அந்த ஆசைக்கு மயங்கிய கிழட்டு சிங்கம், நரி கூறிய ஆசனத்தில் அமர அதன் பின்னே மலை உச்சியை நோக்கி தள்ளாடியபடி நடந்து சென்றது. மலை முகட்டின் அருகே வந்தபோது, திடீரென கிழட்டு சிங்கத்தை நரி கீழே தள்ளிவிட்டது. பல நூறு அடி பள்ளத்தில், பாறைகளில் தலை மோதி கிழட்டு சிங்கம் பரிதாபமாக பலியானது. தனது திட்டம் வெற்றிப் பெற்றதாக குஷியடைந்த குள்ளநரி, இனிமேல் இந்த காட்டிற்கு தானே ராஜா என பேராசை பொங்க, கிழட்டு சிங்கம் வழக்கமாக படுத்துக்கிடக்கும் பாறையில் வந்து அமர்ந்தது. அந்த வழியாக செல்லும் விலங்குகள் தன்னை வணங்கிச் செல்லும் என நரி எதிர்பார்த்தது. ஆனால், எந்த விலங்குகளுமே நரியை பொருட்படுத்தவே இல்லை. ஏமாற்றமடைந்த குள்ளநரி அனைத்து விலங்குகளையும் தடுத்து நிறுத்தி, இங்கே படுத்திருந்த கிழட்டு சிங்கத்திற்கு நீங்களெல்லாம் மரியாதை கொடுத்ததைப்போல என்னையும் வணங்கிச் செல்லவ வேண்டும் என்று கூறியது. இதை கேட்ட மற்ற விலங்குகள், குள்ளநரியை கடித்தும், உதைத்தும் விரட்டியடித்தன. உயிர் தப்பினால் போதும் என குள்ளநரியும் தலைதெறிக்க ஓடி தப்பியது. பவர் என்பது இருக்கற இருக்கை இல்ல, அதுல வந்து இருப்பான் பாரு ஒருத்தன். அவனைப் பொருத்ததே என்பதை நரி உணர்ந்தது. ஒருவருடைய வலிமை பண்ணப்பட்டது என்றால் பேரசைப்படுவது ஒரு சில விஷயங்களில் போறமைப்படுவது தவறானது ! நம்முடைய வாழ்க்கையை நாம் பார்த்துக்கொண்டால் போதும் !

Wednesday, October 16, 2024

MUSIC TALKS - GUNDU MAANGA THOPPUKKULLE NANDU POLA VANDHAYE - YAARUM ILLA NERAM PAARTHU KAI PUDICHAYE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



குண்டு மாங்கா தோப்புக்குள்ளே நண்டு போல வந்தாயே
யாரும் இல்லா நேரம் பாத்து கை புடிச்சாயே 
கையபுடிச்சா என்ன தப்பு வளையல் போல கத்துறயே
அந்த இடத்தில் விட்டுபுட்டு இப்போ திட்டுறியே

தண்டவாள நரம்பு மேல ரயிலு போல ஒடுறயே
துண்டு துண்டா உயிரை வெட்டி தூக்கி போடுறியே
வெயில் கால வேர்வை போல மார்பு மேல பூக்குறியே
எந்தன் கண்ணின் இமையை தொறந்து எட்டி பாக்குறியே

முந்தான சேலைக்குள்ள உன்ன நானும் மூட்டகட்டி வைக்கபோறேன்
என்னோட கூந்தலை உன்னோட மீசைய ஒண்ணாக தைக்கபோறேன்
குத்தால மழை நானே உடம்பு மேல கொட்டோனு கொட்டபோறேன்
கண்ணாடி மேனியின் முன்னாடி நின்னு தான் கண்ணலே முட்டப்போறேன்
திருப்பாச்சி திருப்பாச்சி கத்தியாக நீ என்னைக் கீறாதே
தூங்காத சூரியன் சுட்டு விரல் பட்டதும் தாங்காத காயமே ஆறாதே

பாவாடை பச்சகிளியே என்னை பாத்து ஆளான இச்சகிளியே
பச்சகிளி உதட்டில் இச்சு தந்து வெளுப்பேன் என்னோடு வாடி வெளியே
சிங்கார சின்ன புலியே என்னை பார்து சீறாத செல்லப்புலியே
பூவாசம் வேணுமா மாமிசம் வேணுமா எங்கிட்ட சொல்லு புலியே
புள்ளி மானே உன்னை நானே குண்டூசி மீசையால் குத்தப்போறேன்
பஞ்சான மேனிய நெஞ்சோடு தூக்கியே பஞ்சாங்கம் பாக்காம சுத்தபோறேன்





GENERAL TALKS - பொதுவாக அவசரப்பட கூடாது , நிதானமாக யோசிக்க வேண்டும் !

ஒரு சிறுகதை இருக்கிறது. பணத்தை எப்போதுமே அவசரத்தை உருவாக்க பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்தினால் விளைவு நெகட்டிவ்வாக முடிய வாய்ப்பு இருக...