சம்சோன் மிகவும் அசாதாரணமான உடல் வலிமை கொண்டவர். அவர் கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாசிரியராக இருந்ததால், அவரது தலைமுடி வெட்டப்படாமல் இருப்பதே அவரது வலிமையின் அடையாளமாக இருந்தது. அவர் பல சமயங்களில் எதிரிகளை வெற்றி கொண்டு தன் மக்களை காத்தார். ஒரு காலத்தில் சம்சோன் டெலிலா என்ற பெண்ணை காதலித்தார். சம்சோனின் வலிமையின் ரகசியம் என்ன என்பதை அறிய அவரது எதிரிகள் டெலிலாவை தூண்டினர். டெலிலா மீண்டும் மீண்டும் சம்சோனை கேட்டு அவரது நம்பிக்கையைப் பெற்றாள். இறுதியில் சம்சோன் தனது வலிமையின் ரகசியம் தலைமுடி வெட்டப்படாததில்தான் இருப்பதாக கூறினார். அதை அறிந்த டெலிலா, சம்சோன் தூங்கிக் கொண்டிருந்தபோது அவரது தலைமுடியை வெட்டச் செய்தாள். அதனால் அவரது வலிமை குறைந்து, எதிரிகள் அவரை பிடித்து சிறையில் அடைத்தனர். பின்னர் கடவுளை நோக்கி பிரார்த்தித்த சம்சோன் மீண்டும் சிறிது வலிமையைப் பெற்று, தன்னைப் பிடித்திருந்தவர்களின் அரண்மனையை இடித்து வீழ்த்தினார். இந்த கதை காதல், நம்பிக்கை மற்றும் துரோகம் மனித வாழ்க்கையில் எவ்வாறு பெரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதை உணர்த்துகிறது. நாம் வைக்கும் நம்பிக்கையை பெறுவதற்கு தகுதியான சரியான ஆட்களை தேர்ந்தெடுப்பது என்பதே மிக கடினமான செயல்முறை என்றால் காதலில் அவை இன்னும் கடினமானதாகவே இருக்கும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக