திங்கள், 23 மார்ச், 2026

GENERAL TALKS - கொடுத்த கடன் , அன்பு , மரியாதை - இவை மூன்றும் திரும்ப பெற்றே ஆகவேண்டும் !!



வாழ்க்கை என்பது ஒரு நேர்மையான வணிகம் என்று நினைப்பவர்களுக்கு இந்தத் தத்துவம் ஒரு மிகப்பெரிய ஆறுதல், ஆனால் நடைமுறையில் இது ஒரு தீராத தாகம் என்றுதான் சொல்லவேண்டும். மக்களே. 

"நான் கொடுத்த கடன், அன்பு, மரியாதை" என ஒவ்வொன்றையும் கணக்குப் போட்டுப் பார்த்து, அது வட்டியும் முதலுமாகத் திரும்ப வரும் என்று காத்திருப்பது ஒரு வகையான உணர்ச்சிப்பூர்வமான சூதாட்டம். நிஜ வாழ்க்கையில் சூதாட்டம் பிடிக்காத போதிலும், அவர்கள் இந்த வகையான சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.

நாம் ஒருவருக்குக் கொடுக்கும் அன்பு என்பது ஒரு விதை போன்றது; அது மரமாகி நிழல் தரும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால், அந்த நிழல் நம்மை விட அதிகமாக மற்றவர்களுக்குச் சேரும்போதுதான் இங்கே எரிச்சல் பிறக்கிறது. நீங்கள் எப்போதாவது இந்த அளவுக்கு எரிச்சலாக உணர்ந்திருக்கிறீர்களா? நிச்சயமாக, உண்மையைச் சொல்லுங்கள்.

கொடுத்தது அப்படியே திரும்பக் கிடைத்தால் அது சமநிலை, ஆனால் "அளவுக்கு அதிகமாக" திரும்பக் கிடைக்கும்போதுதான் வாழ்க்கை சுவாரசியமாகிறது என்பது, நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் அந்த அங்கீகாரத்திற்காக ஏங்கும் ஒரு பேராசை கலந்த நியாயமான எதிர்பார்ப்பு. கொடுத்த விஷயத்துக்குத் திரும்ப எதுவும் எதிர்பார்க்காமல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றால் நாம் வாழ்க்கையே தவறானதாக அனுபவித்துக்கொண்டிருக்கிறோம். 

காரணம் என்னவென்றால், நம்முடைய முன்னோர்களுடைய வாழ்க்கையை சரியான பண்ட மாற்ற முறை இருந்தால்தான் சிறப்பாக மாறியது.இலவசமாக கொடுத்தல், உதவி  செய்தல் என்பதெல்லாம் இலக்கிய காலத்தில் வந்த விஷயங்கள் தான்.

மரியாதை என்பது ஒரு வழிப்பாதை அல்ல என்பது உலகறிந்த உண்மை, ஆனால் இன்றைய காலத்தில் அது ஒரு "தேவைப்பட்டால் மட்டும்"  என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டது. நாம் ஒருவரை உச்சாணிக் கொம்பில் வைத்து மதிக்கும்போது, பதிலுக்கு அவர்கள் நம்மை ஒரு பொருட்டாகவே மதிக்காத தருணங்கள் ரணமானவை. 

கடனாகக் கொடுத்த பணத்தைத் திரும்பக் கேட்பதற்கே நாம் கூனிக்குறுகி நிற்க வேண்டிய அவலநிலை இருக்கும்போது, அன்பையும் மரியாதையும் எப்படி யாசித்துப் பெற முடியும்? "கொடுத்தால் கிடைக்கும்" என்ற விதியை விட, "எதிர்பார்க்காமல் கொடு" என்ற போதனைதான் இங்கே அதிகம் விற்கப்படுகிறது. 

ஆனால், ஒரு மனிதனாக நம்மிடம் இருக்கும் அந்தச் 'சொரணை', நாம் இழந்ததை விடக் கூடுதலாக எதையாவது அடையும்போதுதான் ஒருவிதமான வெற்றிக் களிப்பை அடைகிறது. அந்தப் போனஸ் அன்புதான் நம்மை அடுத்த அடி எடுத்து வைக்கத் தூண்டுகிறது. நாம் எல்லோருக்கும் இத்தகைய போனஸ் வேண்டும் மக்களே இல்லை என்றால் வாழ்க்கை சுவாரஸ்யமாக இருக்காது

உண்மையில், இந்த  கருத்து ஒரு எச்சரிக்கை மணி. யாரிடம் எதைக் கொடுக்கிறோம் என்பதில் தெளிவு இல்லாதவர்கள், இறுதியில் ஏமாற்றத்தின் விளிம்பில்தான் நிற்கிறார்கள். அன்பு என்ற பெயரில் அள்ளித் தெளிப்பதும், மரியாதை என்ற பெயரில் அடிபணிந்து போவதும் நம்மை நாமே தரம் தாழ்த்திக் கொள்வதற்குச் சமம். 

எப்போது நம்முடைய முதலீட்டிற்கு உரிய பலன் - அதுவும் நாம் எதிர்பார்த்ததை விடக் கூடுதலாக - கிடைக்கவில்லையோ, அப்போதே அந்த உறவோ அல்லது நட்போ அதன் சுவாரசியத்தை இழந்துவிடுகிறது. "கொடுத்தது திரும்ப வரவில்லை" என்று புலம்புவதை விட, "யாருக்குக் கொடுக்கிறோம்" என்பதில் கவனம் செலுத்துபவர்கள் மட்டுமே வாழ்க்கையை அதன் முழு வீச்சில் ரசிக்க முடிகிறது. 

மற்றபடி, மார்ஜின் போட்டு கணக்குப் பார்ப்பவர்களுக்கும், வட்டிக்கு அன்பு தேடுபவர்களுக்கும் வாழ்க்கை ஒரு புரியாத புதிராகவே நீடிக்கும் ! நம்ம வீட்டு பிள்ளை என்ற படத்தில் இடம்பெற்ற காட்சியைப் போல கடனாக கெட்ட பையனுக்கு நேரடியாக பணம் கொடுத்தால் அதனை திரும்ப கேட்க முடியாது. 

இவன் திரும்ப தரமாட்டான் என்று அவர்களாகவே கற்பனை செய்து கொண்டு சொந்தக்காரனிடம் கொடுத்து அவனிடமிருந்து கடன் பெற்றதாகவே சொந்த பணத்தையே உதவி என்று கேட்டவருக்கு அடுத்தவன் கணக்கில் கொடுக்கக்கூடிய சுத்தமான சுயநல சொந்தக்காரர்கள் இருப்பதையெல்லாம் பார்க்கும்போது ஒன்று மட்டும் தான் தோன்றுகிறது. "டேய் நீங்க எல்லாம் எங்க இருந்துடா வர்றீங்க?' 

கருத்துகள் இல்லை:

TECH TALKS - டெய்லிமொஷன் இணையத்தில் சம்பாதிப்பது குறித்த தகவல்கள் !

  Dailymotion offers an accessible Partner Program that lets creators monetize their content via native uploads and website video em...