தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் நிர்வாக அமைப்பு மாநிலம் முதல் கிராமம் வரை படிநிலைகளாகத் துல்லியமாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மாநில அளவில், கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் (CRA) முழுமையான தலைமைப் பொறுப்பை வகிக்கிறார். நில நிர்வாக ஆணையர் (CLA) அரசு நிலங்கள் மற்றும் பட்டா தொடர்பான விவகாரங்களை கவனிக்கிறார்; நிலச் சீர்திருத்த ஆணையர் நில உச்சவரம்பு மற்றும் சீர்திருத்தங்களைப் பார்த்துக்கொள்கிறார்.
மாவட்ட அளவில், மாவட்ட ஆட்சியர் (Collector) மிக உயரிய அதிகாரி. அவருக்கு அடுத்த நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் (DRO) வருவாய் நிர்வாகத்தை கவனிக்கிறார். துணை ஆட்சியர்கள் (Deputy Collectors) சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் Collector-க்கு நேர்முக உதவியாளர்களாக செயல்படுகின்றனர். கோட்ட அளவில், வருவாய் கோட்டாட்சியர் (RDO) ஒரு கோட்டத்தின் தலைவராக இருப்பார்; சார் ஆட்சியர் (Sub-Collector) பொதுவாக IAS பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பதவியாகும்.
வட்ட அளவில், வட்டாட்சியர் (Tahsildar) ஒரு தாலுக்காவின் முழுப் பொறுப்பாளராக “Miniature District Collector” என அழைக்கப்படுகிறார். அவருக்கு HQ Deputy Tahsildar மற்றும் Deputy Tahsildar உதவுகின்றனர். அடிமட்டத்தில், வருவாய் ஆய்வாளர் (RI) ஒரு குறுவட்டத்தை (Firka) மேற்பார்வையிடுகிறார்; கிராம நிர்வாக அலுவலர் (VAO) ஒரு வருவாய் கிராமத்தின் பொறுப்பாளர்; கிராம உதவியாளர் (Village Assistant) VAO-வுக்கு உதவியாகச் செயல்படுகிறார். இவ்வாறு, மாநிலம் முதல் கிராமம் வரை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒழுங்குபடுத்தப்பட்ட படிநிலைகளில் செயல்படுகிறது. ✨
3 கருத்துகள்:
இந்த உலகில் தான் வாழும் ஒரு ஒரு நாளுக்கும் காசு கொடுத்து வாழ்ந்துகொண்டு இருக்கும் ஒரே ஒரு உயிரினம் மனித இனம்தான்.
ரொம்ப கேவலமான வெட்க கேடு இது, மனுஷன் மாறுவதே இல்லை.
யார் எழுதிய பதிவு இது?
WhatsApp-ல் வலம்வருகிறது.
தவெக ஆட்சி அமைக்க,
மேலதிகமாக 13 பேர் ஆதரவு தேவை
13 பேரை நேரடி அரசியல் எதிரியான திமுக கூட்டணியில் இருந்து விலை கொடுத்து வாங்க முடியாது.
அது நடக்கவும் நடக்காது.
அல்லது கொள்கை எதிரியான பாஜக கூட்டணியில் இருந்து விலை கொடுத்து வாங்க அதுவும் முடியாது.
காரணம் பாஜக 1 இடம்தான்.
மற்ற கட்சிகள் பற்றி கீழே கொடுத்துள்ளேன்.
தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையில் தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது.
அடுத்தடுத்த நகர்வுகள் என்னென்ன?
மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளை தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப் பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.
ஆனால் தனிக் கட்சியாக 107 இடங்களை மட்டுமே த.வெ.க. வென்றுள்ளது.
அதிலும் த.வெ.க. தலைவர் விஜய், 2 தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலுமே வெற்றி பெற்றிருக்கிறார்.
அதில் ஒன்றை அவர் ராஜினாமா செய்ய வேண்டும்.
எனவே அதில் ஒரு தொகுதி குறைந்து 106 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.
அடுத்ததாக சபாநாயகராக ஒருவரை நியமிக்க வேண்டும்.
அதிலும் ஒரு சீட் குறைந்து 105-ஆக குறையும்.
எனவே த.வெ.க. கட்சி கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு இன்னும் 13 இடங்கள் வேண்டும்.
தி.மு.க. கூட்டணியில்: (திமுக: 60)
காங்கிரஸ்: 5
வ. கம்யூனிஸ்ட்: 2
மா. கம்யூனிஸ்ட்: 2
தேமுதிக: 1
இயூமுலீக்: 2
விசிக: 2
இடங்கள் கிடைத்துள்ளன.
அதிமுக கூட்டணி: (அதிமுக: 46)
பாமக: 5
பாஜக: 1
அமமுக: 1.
இடங்கள் கிடைத்துள்ளன.
பிரதான கட்சிகளான
தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளை தவிர்த்து,
அதிலுள்ள மற்ற கட்சிகள் ஆதரவு கணக்கு பார்த்தால்:
திமுக கூட்டணியில்:
இயூமுலீக் 2 போகவே போகாது.
அப்போ அங்க மிச்சம் இருப்பது 12 தான்.
இன்னும் 1 குறையுது.
அப்படியானால்
பாஜக கூட்டணியில் 7 தான் இருக்கு.
இது கூட கூட்டணி வச்சா 6 குறையுது.
ஒன்னு:
தேமுதிக வாய் இருக்கே,
அத சேர்த்தா 3 மாசம் கூட ஆட்சி தாக்கு பிடிக்காது.
விசிக பிஜேபி இருக்கும் இடத்தில் இருக்காது.
பாஜகவும் காங்கிரஸும் எப்படி ஒரே இடத்தில் இருக்க முடியும்?
மாணிக் தாக்கூர் பேச்ச இங்குள்ள காங் கேட்க மாட்டாங்களே
சோடேங்கரை சொடக்கு போட்டு அனுப்பிடுவாங்க.
ஒருவேளை ராகா
மானமாவது மரியாதையாவது என்று வழக்கம் போலவே தவறான முடிவு செய்தால் பின் விளைவுகள் பெருத்த செய்கூலி சேதாரத்தை கொடுக்கும்.
ஏற்கனவே தீதீ மம்தா வெறில இருக்கா!
அவர்களென்ன அதிமுக அமமுக மாதிரி மானங்கெட்டவர்களா?
ஒரே இடத்தில் இருக்க?
ம.தி.மு.க.விற்கு 2 இடங்கள் கிடைத்திருந்தாலும்,
தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்றிருப்பதால்,
அவர்கள் த.வெ.க.விற்கு ஆதரவு அளிக்க முடியாது.
இந்த சூழ்நிலையில் தமிழக கவர்னர் ஆர்.வி.அர்லேகர்
நாளை வரவுள்ளார்.
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதற்கு 2 வழிகளில் ஒன்றை கவர்னர் தேர்வு செய்வார்.
அதன்படி,
அதிக இடங்களில் வென்றுள்ள கட்சியான த.வெ.க. தலைவரை அழைத்து,
பெரும்பான்மையை சட்டசபையில் நிரூபிக்க வாய்ப்பை வழங்குவார்.
இதற்கு ஒரு வாரம் வரை அவகாசம் தரப்படலாம்.
இல்லாவிட்டால்,
மற்றொரு வாய்ப்பாக,
த.வெ.க. தனக்கு ஆதரவு தரும் கட்சிகளின் கடிதங்களை அந்தந்த கட்சிகளிடம் இருந்து பெற்று, கவர்னரிடம் வழங்க வேண்டும்.
118 இடங்களுக்கு மேல் ஆதரவு கடிதம் கிடைத்திருந்தால்,
ஆட்சி அளிக்கும் உரிமையை த.வெ.க.வுக்கு கவர்னர் வழங்குவார்.
ஆனால் அந்தக் கட்சிகளின் ஆதரவு கிடைக்காமல் போனால், த.வெ.க.விற்கு ஆட்சி அமைக்கும் உரிமை கிடைக்காது.
2-வதாக அதிக இடங்களை வென்றுள்ள கட்சியான தி.மு.க.வை ஆட்சி அமைக்க கவர்னர் வாய்ப்பளிப்பார்.
அவர்கள் அதற்கு தயார் இல்லை.
ஏற்கனவே எதிர்கட்சியாக அமர முடிவு செய்து அறிவித்தும் விட்டார்கள்.
இதன் காரணமாக:
6 மாதங்கள் கவர்னர் ஆட்சியை தமிழகம் எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
அதன் பின்னர் அடுத்த சட்டமன்ற தேர்தல் முழுமையாக நடைபெற வாய்ப்பு வரலாம்.
அதற்குள் நம்ம ஜண்டா சாணக்கியர்
என்ன தக்காளி தொக்கா?
அவர் பங்குக்கு என்னென்ன கணக்குகள் போடுறாரோ!
1. அதிமுகவை ஓடிப்போய் ஆதரவு கொடுக்கச் சொல்லி அனுப்பிவிடலாம்.
2. அதிமுகவிலிருந்து 3 ல் 2 பங்கு 32 சூப்பர் பார்டிகளை (அடிமைகள் என்று நான் குறிப்பிடவில்லை) உடைத்தெடுத்து ஆதரவு கொடுக்க சொல்லலாம்.
3. எஸ்பிவேலுவை துணை முதல்வர் ஆக்கலாம்.
அல்லா தான் அறிவான்.
ஆனால் பெருத்த பணம் புழங்கும் மாநிலமாக தமிழ் நாடு மாறலாம்.
“சிறியோர் செய்த வெள்ளாமை
விளைஞ்சாலும் வீடு வந்து சேறாது”
என்ன அருமையா பெரியவங்க சொல்லி இருக்காங்க.
கருத்துரையிடுக