Friday, March 29, 2024

MUSIC TALKS - VENNILA VELIYE VARUVAYA VIZHIYILE VELICHAM THARUVAYA - SONG LYRICS - பாடல் வரிகள் !


வெண்ணிலா வெளியே வருவாயா  ?
விழியிலே வெளிச்சம் தருவாயா ?
இரவிலே தவிக்க விடுவாயா ?
 அருகிலே அணைக்க வருவாயா ?
பாலொளி குடிக்க தருவாயா ?
தாகத்தில் தவிக்க விடுவாயா ?
 
ஹேய் நிலவே நீ பூக்கள் சூடி 
என் வாசல் வந்துவிடு 
உன் காதல் இல்லை என்றால் 
நீ என்னை கொன்றுவிடு 
 
வெண்ணிலா வெளியே வருவாயா 
விழியிலே வெளிச்சம் தருவாயா 
இரவிலே தவிக்க விடுவாயா 
 
ஹேய் புரண்டு நீ படுக்கும் போது 
உதிர்ந்திடும் கூந்தல் பூவில் 
என் காதல் வாசம் இருக்கும் நீ பாரம்மா 
அதை நீயே மறந்தாயே 
கொடி பூவே !
 
உதிர்ந்ததும் முளைத்திடும் 
ஒரு விதை காதல் தான் 
விதைகளை புதைக்கிறாய் 
சிரிக்கிறேன் நான் தான் 
 
வெண்ணிலா வெளியே வருவாயா ?
விழியிலே வெளிச்சம் தருவாயா ?
இரவிலே தவிக்க விடுவாயா ?
 
கண்களை கொஞ்சம் தந்தால் 
நான் கொஞ்சம் தூங்கி கொள்வேன் 
என்றாலும் காதல் நெஞ்சம் தூங்காதம்மா.. 
என் அன்பே
என் அன்பே
என் அன்பே 

காதலி காதலி கனவுகள் தோன்றாதா ?
கனவிலே என் விரல் உன்னை எழுப்பாதா ?
 
வெண்ணிலா வெளியே வருவாயா  ?
விழியிலே வெளிச்சம் தருவாயா ?
இரவிலே தவிக்க விடுவாயா ?
 அருகிலே அணைக்க வருவாயா ?
பாலொளி குடிக்க தருவாயா ?
தாகத்தில் தவிக்க விடுவாயா ?
 
ஹேய் நிலவே நீ பூக்கள் சூடி 
என் வாசல் வந்துவிடு 
உன் காதல் இல்லை என்றால் 
நீ என்னை கொன்றுவிடு 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...