திங்கள், 1 டிசம்பர், 2025

நமது வாழ்க்கையின் மோட்டிவேஷன் ! - #TAMILMOTIVATION-EP.007




சில வார்த்தைகள் எப்போதும் ஆழமான அர்த்தத்தை தருகின்றன. நாம் ஆயிரம் பேரிடம் ஆலோசனை கேட்கலாம், அவர்களின் கருத்துகளை கேட்டு புரிந்துகொள்ளலாம். ஆனால் இறுதியில் நாம் எடுக்கும் முடிவு, நமக்கே நம்முடைய அறிவுக்கு உட்பட்டு சரியானதாகத் தோன்றும் முடிவாக இருக்க வேண்டும். 

அந்த முடிவு தவறாகிப் போனாலும் அதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை, ஏனெனில் அது நம்முடைய சிந்தனை, நம்முடைய தேர்வு. ஆனால் இந்த சுதந்திரத்தை நாம் முடிவெடுக்க வேண்டிய நேரங்களில் இழந்துவிட்டால், பின்னாளில் எவ்வளவு பாடுபட்டாலும் மன திருப்தி அடைய முடியாது. 

நமக்குப் பிடித்த விஷயத்தை நாம் செய்தோம் என்ற அந்த உள்நிலை மகிழ்ச்சி, அந்த மன நிறைவு எப்போதும் நம்மை விட்டு விலகிவிடும். வாழ்க்கையில் உண்மையான திருப்தி என்பது, பிறர் சொன்ன வழியைப் பின்பற்றுவதில் அல்ல; நம் உள்ளம் விரும்பியதைச் செய்து, அதன் விளைவுகளை தைரியமாக ஏற்றுக்கொள்வதில் தான் இருக்கிறது.

இதனால் தான் இன்னொரு முக்கியமான உண்மையை மக்கள் அடிக்கடி கூறுகிறார்கள்: பிறர் சொல்வதைக் காட்டிலும் நம்முடைய சொந்த அனுபவம் மிகுந்த மதிப்புடையது. ஏனெனில், நம்முடைய அனுபவத்தின் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகள் சில நேரங்களில் தவறாகிப் போகலாம். 

ஆனால் அந்த தவறுகளும் நமக்கு பாடமாகி, அடுத்தடுத்த முடிவுகளில் நல்ல பலன்களைத் தரும். பிறர் சொன்ன வார்த்தைகள் தற்காலிகமாக வழிகாட்டலாம், ஆனால் நம்முடைய அனுபவம் நமக்கு நிலையான அறிவையும் உறுதியையும் அளிக்கிறது. வாழ்க்கையில் உண்மையான முன்னேற்றம் என்பது, நம்முடைய சொந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டு, அதனை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் முடிவுகளில்தான் இருக்கிறது.

சொந்தமாக முடிவெடுக்க பயப்பட வேண்டாம். ஏனெனில், உண்மையான வாழ்க்கை முன்னேற்றம் அந்த நமக்கே சொந்தமான அடுத்தவர்கள் கட்டுப்படுத்தாத முடிவுகளில்தான் இருக்கிறது. பிறர் தரும் ஆலோசனைகளை முழுமையாகக் கேட்டு, அவற்றை ஆராய்ந்து, அதையும் மீறி நம்முடைய அனுபவத்தில் சரியானதாகத் தோன்றினால் மட்டுமே அந்த முடிவை எடுக்க வேண்டும். 

மேலும் நான் சொல்வது என்னவென்றால், நீங்கள் உங்களுடைய சுய ஆலோசனையை மட்டும் அல்லாமல், பொதுவாக இருக்கக்கூடிய அனைத்து கருத்துக்களையும் கருத்தில் கொண்டால் தான் உண்மையான நிலைத்தன்மை எப்படி இருக்கிறது என்பதையும், சூழ்நிலையை புரிந்துகொண்டு முடிவெடுப்பது எப்படி என்பதையும் கற்றுக்கொள்வீர்கள். 

அடாவடியாக ஒரு ராஜாவைப் போல சொந்த முடிவை எடுப்பதைவிட, மிகுந்த அறிவும் அனுபவமும் கொண்ட ஒரு பேரரசரைப் போல சிந்தித்து முடிவெடுப்பது மிகச் சிறந்த விஷயமாகும்.

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - இது ஒரு பிரபலமான சீன நாட்டுப்புற கதை !

  சீனாவில் ஒரு பெரியவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். முதல் இரண்டு மகன்களுக்கும் திருமணம் செய்து வைத்திருந்தார். வீடு...