செவ்வாய், 2 டிசம்பர், 2025

GENERAL TALKS - மனிதநேயம் எப்போதும் நிறைந்த தலைவர் !




சமீபத்தில் தயாரிப்பாளர் ஆர்.எம். வீரப்பன் அவர்கள் நமது மக்கள் ஹீரோ எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி சொன்ன சம்பவத்தை பற்றிய இணைய பதிவு பார்த்தேன் - அந்த பதிவு உங்களுக்காக ! எம்.ஜி.ஆர் – மனிதநேயத்தின் கதை ராமாவரம் தோட்டத்தில் ஒரு நாள்.அங்கு வந்திருந்தார் ஒரு பழைய நாடக நடிகர். முகத்தில் கவலை, மனதில் சங்கடம். “எதற்காக வந்தீர்கள்?” என்று கேட்டபோது, அவர் மெதுவாகச் சொன்னார்: “குடும்பமே பட்டினி. ஒன்றும் முடியவில்லை. சின்னவரோட நாடகத்தில நடிச்சிருக்கேன். ஏதாவது உதவி கிடைக்குமோ என்று வந்திருக்கேன்.” சிறிது நேரத்தில் எம்.ஜி.ஆர் வெளியே வந்தார். தூரத்தில் நின்று அந்த நடிகரைப் பார்த்தார். சைகையால் “எப்படி வந்தே?” என்று கேட்டார். பின்னர், “இருந்து சாப்பிட்டுவிட்டு தான் போகணும்” என்று சொல்லிவிட்டு காரில் ஏறிச் சென்றார். அந்த நடிகர் குழப்பத்தில் நின்றார். நான் அவரிடம், “மதியம் சாப்பிட்டு போங்க” என்றேன். அவர் பதற்றமாக, “என் குடும்பமே பட்டினி இருக்கும்போது நான் எப்படி சாப்பிடுவது?” என்றார். நான் ஐநூறு ரூபாய் கொடுத்தேன். அவர் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டார். மதியம் எம்.ஜி.ஆர் மீண்டும் வந்தார். “சாப்பிட்டீர்களா?” என்று கேட்டார் அவர் “ஆம்” என்றதும், எம்.ஜி.ஆர் காரில் ஏறினார். கார் சில அடிகள் சென்றதும் நின்றது. சைகையால் நடிகரை அழைத்தார். அவர் காருக்கு அருகில் சென்றார். எம்.ஜி.ஆர் யாருக்கும் தெரியாமல் அவரது பாக்கெட்டில் ஒரு கவரை வைத்துவிட்டு, காரை முன்னேற்றினார். அவர் கவரைத் திறந்தார்.அதில் பத்தாயிரம் ரூபாய். கண்களில் கண்ணீர். ஆனந்தக் கண்ணீர். அந்த கண்ணீரைக் கண்ட நான், அவரைவிட அதிக மகிழ்ச்சி அடைந்தேன். மறுநாள், தோட்டத்தில் எம்.ஜி.ஆரிடம் கேட்டேன் “அந்த நடிகரை சாப்பிடச் சொன்னீர்கள். ஆனால் அவரிடம் எதுவும் கேட்கவில்லை. பிறகு காரில் ஏறிச் சென்றீர்கள். அவர் பதற்றத்தில் இருந்தார். பின்னர் அழைத்து பத்தாயிரம் ரூபாய் கொடுத்தீர்கள். ஏன் அண்ணே அப்படிச் செய்தீர்கள்?” எம்.ஜி.ஆர் அமைதியாக என்னைப் பார்த்தார். பின்னர் சொன்னார்:“கஷ்டப்பட்டு வர்றவங்களை அவங்க வாயால் பணம் கேட்க வைக்கக் கூடாது. அவர் கூச்சம் உள்ளவர். கேட்டால் கம்மியாத் தான் கேட்டிருப்பார். அதனால் நம்மளா கொடுத்திடனும்.” இதுவே எம்.ஜி.ஆர்.
அவர் இறந்தும் வாழ்வது – மனிதநேயத்தால் மட்டும்தான் ! 


2 கருத்துகள்:

DX சொன்னது…

10 நாட்களாக திணறிய வாலி, 5 நிமிடத்தில் மெகாஹிட் பாடல் எழுதிய கண்ணதாசன்; ஆங்கில டியூனுக்கு வந்த அசத்தல் பாட்டு!

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நம்பியார். நாகேஷ் ஆகியோர் இணைந்து நடித்த இந்த படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.

ஆங்கில டியூன் ஒன்றுக்கு பாடல் எழுத முடியாமல் கவிஞர் வாலி 10 நாட்களாக திணறிய நிலையில், அந்த டியூனுக்கு 5 நிமிடங்களில் அசத்தலாக பாடல் எழுதி கொடுத்து அனைவரையும் கவர்ந்துள்ளார் கவியரசர் கண்ணதாசன்.

சிவாஜி கணேசன் நடிப்பில், தங்கமலை ரகசியம், வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், பலே பாண்டியா, கர்ணன் என தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்த இயக்குனர் பி.ஆர்.பந்தலு. எம்.ஜி.ஆர் நடிப்பில் இயக்கிய படம் தான், ஆயிரத்தில் ஒருவன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, நம்பியார். நாகேஷ் ஆகியோர் இணைந்து நடித்த இந்த படத்திற்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.

இந்த படம் தமிழ் சினிமாவில் அப்போது பெரிய வெற்றியை பெற்ற நிலையில், பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படம் உருவான காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் – கண்ணதாசன் இடையே மோதல் போக்கு இருந்து வந்தது. இதனால் அவரை தவிர்த்து கவிஞர் வாலி அனைத்து பாடல்களையும் எழுதுவது என்று முடிவு செய்யப்பட்டது. இந்த படத்தில் அடிமைகளை மீட்டு அழைத்து வரும்போது அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு பாடல் எழுத வேண்டிய சூழல் வருகிறது.

இந்த பாடலுக்காக ஆங்கில டியூன் ஒன்றை போட்டுள்ளார் எம்.எஸ்.வி, ஆனால் 10 நாட்களாக இந்த பாடலை எழுத கவிஞர் வாலி திணறியுள்ளார். இந்த விஷயம் எம்.ஜி.ஆருக்கு தெரியவர அவரோ, கண்ணதாசனிடம் கேளுங்கள் அவர் பாடல் கொடுப்பார் என்று கூறியுள்ளார். அதன்பிறகு, கண்ணதாசனிடம் கேட்க, எம்.ஜி.ஆரா என்னிட்டம் பாட்டு கேட்க சொன்னார் என்று கேட்டுவிட்டு, உடனே அனுப்புகிறேன் என்று சொல்லி 5 நிமிடத்தில் பாடலை எழுதி கொடுத்துள்ளார்.

இந்த பல்லவியை கேட்ட எம்.ஜி.ஆர் அருமையாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு தேவையில்லாமல் சண்டை போட்டுவிட்டேன். அவனால் மட்டும் தான் இதுபோன்ற பாடல்களை எழுத முடியும். கண்ணதாசனை சந்திக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அரசியலில் ஏற்பட்ட மோதல் இந்த ஒற்றை பாடலால் மீண்டும் ஒன்றினைந்தது.

அந்த பாடல் தான் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் இடம்பெற்ற ‘’அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்’’ என்ற பாடல். இந்த பாடல் இன்றும் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு பிடித்தமான ஒரு பாடலாக நிலைத்திருக்கிறது.

பெயரில்லா சொன்னது…

வாலி பாடலில் எம்.ஜி.ஆருக்கு வந்த சந்தேகம்: பயந்து நடுங்கிய எம்.எஸ்.வி: இறுதியில் நடந்தது என்ன?

வாலி எழுதிய பாடலில் எம்.ஜி.ஆர் சந்தேகம் எழுப்பியதால், இசையமைப்பாளர் எம்.எஸ்.வி பயந்து நடுங்கியுள்ளார்.

எம்.ஜி.ஆர் நடிப்பில் ஏ.வி.எம் தயாரித்த க்ளாசிக் ஹிட் திரைப்படமாக அமைந்த அன்பே வா திரைப்படத்தில், ஒரு பாடலுக்கு எம்.ஜி.ஆர் தனது சந்தேகத்தை கேட்க, எம்.எஸ்.வி அடுத்து என்ன நடக்க போகிறதோ என்று பயத்தில் நடுக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பழமையான தயாரிப்பு நிறுவனம் என்று அழைக்கப்படும் ஏ.வி.எம். நிறுவனம் சார்பில், 1966-ம் ஆண்டு வெளியான படம் அன்பே வா. எம்.ஜி.ஆர், சரோஜா தேவி, நாகேஷ், டி.ஆர்.ராமச்சந்திரன், மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை ஏ.சி.திரிலோகச்சந்தர் இயக்கியிருந்தார்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வாலி எழுதியிருந்தார்.

ஏ.வி.எம் நிறுவனம் தயாரிப்பில் எம்.ஜி.ஆர் நடித்த முதல் படம், கலர் படம் என்ற அறிவிப்பு வெளியான உடனே இந்த படத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்துள்ளது.

அதேபோல் எம்.ஜி.ஆர் தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி முழுக்க முழுகக் ஒரு காதல் படத்தில் நடித்தது இது தான் முதல் முறை. அதனால் இந்த படத்தின் அனைத்து பாடல்களும் வரவேற்பை பெற வேண்டும் என்று ஏ.வி.எம் நிறுவனம் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

இந்த படத்தில் எம்.ஜி.ஆரை கலாய்க்க வேண்டும் என்பதற்காக, சரோஜா தேவி குருப் ஒரு பாடலை பாடுவார்கள். இந்த பாடலில் நாடோடி ஓடோடி என்ற வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும். அப்போது எம்.ஜி.ஆர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் என்று, ஒரு விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த பாடலை பார்த்த எம்.ஜி.ஆர் அது என்ன நாடோடி ஓடோடி என்று எழுதி இருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர் இப்படி கேட்டவுடன் எம்.எஸ்.வி அடுத்து என்ன நடக்க போகிறதோ என்று நடுங்கியுள்ளார்.

அதன்பிறகு படத்தின் வசனகர்த்தா ஆரூர் தாஸ், இந்த பாடல் முதலில் இப்படி தான் இருக்கும்.

பிறகு நீங்கள் இதற்கு பதிலடி கொடுப்பீர்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் பாடலை மாற்றிவிடலாம் என்று சொல்ல, பரவாயில்லை.

இருக்கட்டும் எனக்கு சந்தேகம் வந்தது. நீங்கள் தீர்த்து வைத்தீர்கள் அவ்வளவு தான் பாடலை மாற்ற வேண்டாம்.

ஏ.வி.எம்.செட்டியாரிடமும் சொல்ல வேண்டாம். அப்புறம் எம்.ஜி.ஆர் மறுத்துவிட்டார் என்ற வதந்தி பரவி விடும் என்று கூறியுள்ளார்.

எம்.ஜி.ஆர் இப்படி சொன்னதை கேட்டவுடன், எம்.எஸ்.வி நிம்மதி பெருமூச்சி விட்டுள்ளார். இந்த தகவலை ஏ.வி.எம்.குமரன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

வெற்றியாரளர்கள் இங்கே உருவாக்கப்படுகிறார்கள் !!

  வாழ்க்கையில் பல பிரச்சனைகள் நம்மை பாதிக்கின்றன; அவற்றை முழுமையாக குறைக்க முடியாது. கடைசி ஆதரவு கடவுள் என்பதால், நம்முடைய பாரத்தை அவரிடம் ஒ...