சமீபத்தில் இணையதளத்தில் ஒருவர் தன்னுடைய தனிப்பட்ட கருத்து இவ்வாறு பகிர்ந்து கொண்டார் : கடவுள் மீது அதீத பக்தி கொண்டவர்கள் அனைவரிடமும் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்! நான் உங்களிடம் ஒரு பேனாவை அன்பளிப்பாக கொடுத்தால், சில நேரங்களில் நீங்கள் அதை மறுக்கலாம், சில நேரங்களில் அதை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் நீங்கள் அந்த பேனாவை வாங்கிக் கொண்டால், ஒரு நாள் அல்லது இரண்டு நாள் அதை பத்திரமாக பாதுகாப்பீர்கள். மூன்றாவது நாளில் அது வீட்டின் ஏதோ ஒரு மூலையில் கிடந்து போய்விடும் இதுவே எதார்த்தம். சரி, இப்போது கடவுளே திடீரென உங்கள் முன் தோன்றி உங்களுக்கு ஒரு பேனாவை அன்பளிப்பாக கொடுத்தால், உங்கள் மனநிலை எப்படி இருக்கும்? சந்தோஷத்தின் உச்சத்தில் இருப்பீர்கள் அல்லவா? அந்த பேனாவை பயபக்தியுடன் பெற்றுக் கொண்டு, ஒரு பொக்கிஷத்தை விட மேலான அக்கறையுடன் பாதுகாப்பீர்கள். ஒவ்வொரு மணி நேரமும் அதை தொட்டு பார்க்க தோன்றும். வேறு எந்த பொருளையும் தொலைத்தாலும், அந்த பேனாவை வாழ்நாள் முழுவதும் கண்ணும் கருத்துமாக பாதுகாப்பீர்கள். ஏனெனில் அது கடவுள் கொடுத்த பேனா. இப்போது உங்களை இந்த உலகிற்கு கொடுத்தது கடவுள் தான் என்று நீங்கள் உறுதியாக நம்பினால், உங்கள் பக்கத்து வீட்டுக்காரனையும், பிற சாதி, மதத்தைச் சேர்ந்தவர்களையும் கடவுள் தான் படைத்தார் என்பதையும் அதே உறுதியுடன் நம்ப வேண்டும். கடவுள் கொடுத்த பேனாவை நீங்கள் எப்படி கண்ணும் கருத்துமாக பார்த்தீர்களோ, அதேபோலவே உங்கள் பக்கத்து வீட்டுக்காரனையும், பிற மதத்தவர்களையும் பார்த்துக் கொள்ள வேண்டும். இரண்டுமே கடவுள் கொடுத்தவை தானே? ஆனால் உண்மையில் என்ன நடக்கிறது? கடவுள் இருக்கிறார் என்று நம்புபவர்களே கடவுளின் படைப்புகளை மதிப்பதில்லை, பாதுகாப்பதில்லை. கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டு, உன்னுடன் வாழும் சக மனிதர்களை அதாவது கடவுளே கொடுத்த பேனாக்களை கஷ்டப்படுத்தி பார்க்கும் நீங்கள் , உண்மையில் கடவுளின் மீது அன்பு உள்ளவரா ?எதிரியை கூட மன்னிக்கலாம், ஆனால் நம்பவைத்து ஏமாற்றுபவர்களை மன்னிக்கக் கூடாது என்று சொல்வார்கள். கடவுளின் பெயரை சொல்லிக்கொண்டு, கடவுளின் படைப்புகளையே அவமதிக்கும் நீங்கள்தான் தான் உண்மையான ஏமாற்றுபவர்களை போல இருப்பதால் உங்களை மன்னிக்கலாமா? கடவுள் இல்லை என்று சொல்வதை விட, கடவுள் இருக்கிறார் என்று சொல்லிக்கொண்டு அவருக்கு எதிராக செயல்படும் நீங்கள்தான் தான் உண்மையான கடவுள் மறுப்பு சிந்தனை உள்ள மனிதர், இந்த விஷயங்கள் உங்களுக்கு கசப்பாக இருந்தாலும் அதீத பக்தி என்ற வகையில் நியாயமற்ற செயல்களை எவ்வாறு செய்ய முடிகிறது. - இந்த விவாதத்தின் முக்கிய நோக்கம் இதுதான். மற்றவர்களைத் துன்பப்படுத்துவது பார்த்து நாம் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், அது கடவுளின் அன்பாகக் கருதப்படுவதில்லை. உலகம் முழுவதும் உள்ள அனைத்து மனிதர்களும் ஒருவருக்கொருவர் அன்பையும் மதிப்பையும் வழங்கி, ஒருங்கிணைந்த சமூகமாக வாழ வேண்டும். குடும்பங்களையும் குழந்தைகளையும் பாதுகாப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதே மனிதர்களின் மிகப்பெரிய ஆசையாகும். உண்மையான மகிழ்ச்சி, சுயநலத்தை விட்டு விலகி, பிறருக்காக வாழும் மனப்பான்மையில்தான் இருக்கிறது. சுயநலத்தில் மூழ்கியவரால் எத்தனை விஷயங்களையும் சாதிக்க முடியாது; ஆனால் அன்பும் ஒற்றுமையும் கொண்டவரால் சமூகத்தில் நிலையான மாற்றத்தை உருவாக்க முடியும். மனித வாழ்க்கையின் உயர்ந்த நோக்கம், அனைவரும் பாதுகாப்பாகவும் மதிப்புடன் வாழும் சூழலை உருவாக்குவதே.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த உங்களின் விருப்பமான தமிழ் கருத்துப்பகிர்வு தளம்! COPYRIGHT © 2023 - 2026 | NICE TAMIL BLOG | ALL RIGHTS RESERVED | DMCA PROTECTED SUPPORT • SHARE • SUBSCRIBE - ENJOY OUR BLOG - DON'T MISS THE ENTERTAINMENT OF READING THE BIGGEST PERSONAL BLOG EVER ! ENGLISH VERSION IS UNDER DEVELOPMENT ! ✔❤ #TAKE-CARE #BE-WELL ! GREETINGS FROM NTB!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
LIEE TALKS - விளையாட்டு முறை கோட்பாடு என்று சொல்லப்படுவது என்ன ?
1. மூலோபாய சார்புநிலை மற்றும் ஆட்டக் கோட்பாட்டின் அடிப்படை (Strategic Interdependence) ஆட்டக் கோட்பாடு (Game Theory) என்பது மூலோபாய ரீதியா...
-
EN-2026/03 The 2010 film Prince of Persia: The Sands of Time follows the journey of Dastan, an orphan in the Persian Empire who is adopt...
-
டிஸ்னி நிறுவனம் தனது ஒட்டுமொத்தப் பூங்காக்கள் மற்றும் அனுபவங்கள் (Experiences) துறையிலிருந்து 2025 ஆம் நிதியாண்டில் மட்டும் சுமார் $36 பில்ல...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக