மற்றவர்களுக்கு தீங்கு செய்ய நினைக்காமல் நம் வாழ்க்கையை வாழும்போது, ஒவ்வொரு கணமும் ஒரு நல்ல தருணமாக இருக்கும் என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்த விஷயத்தில் உண்மை என்ன என்பதில் ஒரு சிக்கல் உள்ளது. மக்களே. காரணம், மற்றவர்கள் நம்மைப் பாதிப்பார்கள். அந்த விளைவுகளை நாமே தாங்கிக் கொள்ள வேண்டும் என்று நாம் வாழ்ந்தால், நாம் வாழவே முடியாது.
ஒரு தவறான கருத்தை பலர் ஆதரித்தாலும் அது தவறாகவே இருக்கும். பலர் ஆதரிக்காவிட்டாலும் ஒரு சரியான கருத்து சரியாகவே இருக்கும். இந்த உலகம் போட்டிகளும் பிரமைகளும் நிறைந்தது என்பதே மனித வாழ்வின் சிக்கலான உண்மை. சொத்து, அதிகாரம், உறவுகள், சமூக நிலை ஆகிய அனைத்தும் மனிதர்களிடையே ஒப்பீடு, போட்டி, ஆசை, வெறுப்பு போன்ற உணர்வுகளை உருவாக்குகின்றன. இவ்வாறு உருவாகும் வெறுப்புகள், சண்டைகள், பஞ்சாயத்துகள் அனைத்தும் சுயநலம் மிக்க வெறுப்பு பரப்பும் மக்களுடைய வெளிப்புற நன்மைகளைப் பெறுவதற்கான கருவிகளாகவே மாறுகின்றன.
அறம் - என்பது வாழ்வின் அடிப்படை. அறம் இல்லாமல், சொத்து, உறவுகள், அதிகாரம் அனைத்தும் வெறும் மாயை. ஆனால் மனிதர்கள் பெரும்பாலும் அந்த மாயையைப் பிடித்துக் கொண்டு, பஞ்சாயத்துகளில் கிடைக்கும் சிறிய நன்மைகளில் மனம் குளிர்கொள்ள முயல்கிறார்கள். இது தற்காலிக திருப்தியை அளித்தாலும், நிலையான அமைதியை தருவதில்லை.
தீங்கைத் தடுத்து எதிர்க்க எழுந்து நிற்பது என்பது நாம் தீங்கு செய்வோருக்கு பதிலுக்கு தீங்கு செய்கிறோம் என்று எப்போதும் அர்த்தமல்ல. கொஞ்சம் பொது அறிவு என்பது நம்மை நாமே கவனித்துக் கொள்ள நம் வாழ்க்கையைக் கொண்டு செய்யக்கூடிய ஒரு தற்காப்பு. மக்களே, இது எந்த வகையிலும் நம்மை மோசமானவர்களாக மாற்றாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக