1984-ஆம் ஆண்டு இயக்குனர் ஆர். சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்த வைதேகி காத்திருந்தாள் திரைப்படம், தமிழ் சினிமாவின் மறக்க முடியாத படைப்புகளில் ஒன்றாகும். விஜயகாந்த், ரேவதி, கவுண்டமணி, செந்தில் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம், கிராமிய சூழலை மையமாகக் கொண்டு எளிமையான கதைக்களத்துடன் உருவானது. உணர்வுபூர்வமான நடிப்பும், இளையராஜாவின் மனதை கவரும் இசையும் இணைந்து, இந்த படத்தை ஒரு காவியமாக உயர்த்தின. இந்த படத்தின் சிறப்பம்சம், அதன் பாடல்கள் உருவான விதமே. பொதுவாக, திரைக்கதை எழுதப்பட்ட பின் பாடல்களுக்கு மெட்டுகள் அமைக்கப்படும். ஆனால் வைதேகி காத்திருந்தாள் படத்தில் அது தலைகீழாக நடந்தது. இளையராஜா முதலில் ஆறு பாடல்களுக்கு இசை அமைத்து, அவற்றை ஒரே படத்தில் பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையை வைத்தார். தயாரிப்பாளர் அந்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டதால், அந்த ஆறு பாடல்களை மையமாகக் கொண்டு திரைக்கதை எழுதப்பட்டது. இதனால், பாடல்களே கதைக்கான அடித்தளமாக அமைந்தன. இந்த தனித்துவமான சம்பவத்தை இளையராஜா பல நேர்காணல்களில் பகிர்ந்துள்ளார். பாடல்களைப் போலவே, கவுண்டமணி–செந்தில் இணையின் நகைச்சுவையும் இன்றளவும் பேசப்படுகிறது. குறிப்பாக “பெட்டர்மேக்ஸ் லைட்” காமெடி, காலத்தைக் கடந்து இன்னும் சிரிப்பை ஏற்படுத்தும் வகையில் பிரபலமானது. பல்வேறு நிகழ்ச்சிகளில் மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்பட்ட இந்த காமெடி, ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகர் செந்தில், அந்த காமெடி ஒரே டேக்கில் படமாக்கப்பட்டதாகவும், கவுண்டமணியை நோக்கி பேசியதால் தான் அது ஹிட்டானதாகவும் கூறியுள்ளார். இல்லையெனில், அந்த காமெடி இவ்வளவு பிரபலமாகி இருக்காது என அவர் சிரிப்புடன் நினைவுகூர்ந்துள்ளார்.
1 கருத்து:
தனது இரசிகப் பட்டாளங்களை வைத்துக் கொண்டு, VIBE ஆன கூட்டத்தை காட்டி, அதை செய்தியாக விளம்பரம் செய்தால், நான் தான் முதலமைச்சர் என்ற கனவு உலகில் இருந்த விஜய், தனது கட்சிக் கூட்டத்தைக் கூட்டி கொள்கை விளக்கங்கள், கட்டமைப்பு, கட்சி விதிமுறைகளை வகுக்காமல் VIBE ஆன போதைக் கொடுத்தால் போதும் முட்டாள் மக்கள் ஓட்டு போட்டுவிடுவார்கள் என்ற மமதையில் இருந்தார். கட்சி ஆரம்பிக்கும் போது வாழ்த்து சொன்ன தலைவர்கள் எல்லாம், கட்டுப்பாடற்ற கூட்டதத்தால் பொதுமக்களுக்கும் ஆபத்து என திட்டி, எச்சரித்துக் கொண்டிருக்கும்போதே கரூர் துயரச்சம்பவம் நடந்தேறியது. நடந்த தவறுக்கு தார்மீக பொறுப்பு ஏற்காமல், காவல் துறை மீதும் , திமுக மீதும் பலியைப் போட்டு தப்பித்துக் கொண்டிருந்தார்.
இவர் அரசியல் போக்கு அநாகரிகமாக இருப்பதைக் கண்டு, இவருடன் அரசியல் செய்வதை தமிழக அரசியல் கட்சிகள் அநாகரிகம் எனக் கருதி புறக்கணித்து வருகின்றனர்.
இதுவரை VIBE மோடில் இருந்த விஜய்க்கு, தங்கள் கட்சியினர், கட்சிக்குள் நடக்கும் ஊழலை எதிர்த்து பனையூருக்கு வந்து போராடியது பெரும் தலைவலியை ஏற்படுத்தியது.
கரூர் பிரச்சினையை கையாளத் தெரியாமல், தலைமறைவாக இருந்த விஜய்க்கு, கட்சியின் ஊழல் பிரச்சினைகளையும் கையாளத் தெரியாமல் கைப் பிசைந்துக் கொண்டிருக்கும் போதே, மேலும் தற்போது நாமக்கல் மாவட்ட நிர்வாகி ,மகளிரணியின் படுக்கையறையில் நுழைந்த பிரச்சனை பூதகராமாக ஆகி இருப்பது. மேலும் தலைவலியை ஏற்படுத்தி உள்ளது. ஒருப்புறம் கட்சிப் பதவிக்காக பணத்தை வாங்கிக் கொண்டு ஊழல் நடைப்பெற்றுக் கொண்டிருக்க மறுபுறம் பெண்களிடம் சினிமாவைப் போல அட்ஜஸ்ட்மெண்ட் செய்யச் சொல்லி பதவிகளை போடுவது பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
நடிச்சா ஹீரோதான், என்பதை போல அரசியலுக்கு வந்தா CM தான் என்ற பஞ்ச் பேசிக் கொண்டிருந்த விஜய்க்கு, அரசியலில் உட்கட்சி கட்டமைப்பு , கட்டுப்பாடு, விதிமுறைகளும் அரசியலில் ஒரு அங்கம் என்பதை தெரியாமல் இருந்து வருகிறார்.
பணம் வசூலித்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்தால் கட்சிக்கு செலவு செய்ய ஆட்கள் இல்லாமல் போய்விடுவார்கள் எனவும், அட்ஜஸ்ட்மெண்ட் நிர்வாகி மீது நடவடிக்கை எடுத்தால் ,அதுவே கட்சியின் விதியாக மாறி, அந்த விதி தன்னையும் கட்டுப்படுத்தும் என்பதால், அவர் மீது தற்காலிக நீக்கம் மட்டும் அறிவித்துள்ளார்கள்.
முதல் கட்டத்திலே தனது கட்சிக்கு தலைமைத் தன்மையை காட்டத் தவறும் விஜய், மக்களிடத்தில் எப்படி தலைமைப் பண்பைக் காட்டப் போகிறார் ?
கருத்துரையிடுக