மற்ற சின்ன பட்ஜெட் படங்களை பார்க்கும்போது 2024-ல வந்த HIT MAN படம் ரொம்ப வேற லெவல். ரிச்சர்ட் லிங்க்லேட்டர் டைரக்ட் பண்ணி, கிளென் பவெல் ஹீரோவா நடித்திருக்கிறார். கதை என்னன்னா, கேரி ஜான்சன் அப்படின்னு ஒரு சோஷியாலஜி, சைக்காலஜி ப்ரொஃபசர். அவன் சாதாரணமாக கிளாஸ் எடுத்து, பூனைகளோட சும்மா இருக்கிறான். ஆனா போலீஸ் கிட்ட சின்ன சின்ன வேலை பண்ணுறான் “ஹிட்மேன்” மாதிரி வேடம் போட்டு, கொலைக்காரரை வாடகைக்கு எடுக்க நினைக்கிறவர்களை சிக்க வைக்கிறான். அவன் வேடம் போடுற ஸ்டைல், குரல், காஸ்ட்யூம் எல்லாம் செம்ம. அதுவே அவனுக்கு ஒரு யாருக்கும் சொல்லாத ரகசிய திறமையை மாதிரி இதனை எடுத்துக்கொள்ளலாம் அந்த வேலையில அவன் மேடிஸன் அப்படின்னு ஒரு கியூட் ஆன பெண்ணை சந்திக்கிறான். அவள் கொடுமைக்கார வீட்டுக்காரரை-ஐ விட்டு வெளியேறணும் என்று நினைக்கிறாள். அவளை சிக்க வைக்காமல், கேரி அவளோட சீரியஸ்சாக லவ் பண்ணி ஒரு நல்ல காதலனாக ஆகிறான். அங்கிருந்து எக்கச்சக்கமாக ரொமான்ஸ் காட்சிகள் ஆரம்பிக்குது. ஆனா இதே நேரம், போலீஸ் வேலையும், காதலும் கிளாஷ் ஆகுது. கேரி, அவளை பாதுகாப்பு பண்ணணுமா இல்ல போலீஸ் கடமையை பண்ணணுமா என்று குழப்பப்படுகிறான். படம் மொத்தமாக காமெடி ரொமான்ஸ் மிஸ்ட்டரி போல நிறைய காட்சிகளை இணைத்து பண்ணி, சராசரி படங்களை விட கொஞ்சம் புதுமையான யோசனைகளை இந்த படத்தில் கொடுத்து இருக்கிறார்கள். கிளைமாக்ஸ் கொஞ்சம் புதுமையாக முடித்து இருப்பார்கள், கண்டிப்பாக பாருங்கள் !! இந்த படத்தை பெரியவர்கள் மட்டும் பார்ப்பது நல்லது !!
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த உங்களின் விருப்பமான தமிழ் கருத்துப்பகிர்வு தளம்! COPYRIGHT © 2023 - 2026 | NICE TAMIL BLOG | ALL RIGHTS RESERVED | DMCA PROTECTED SUPPORT • SHARE • SUBSCRIBE - ENJOY OUR BLOG - DON'T MISS THE ENTERTAINMENT OF READING THE BIGGEST PERSONAL BLOG EVER ! ENGLISH VERSION IS UNDER DEVELOPMENT ! ✔❤ #TAKE-CARE #BE-WELL ! GREETINGS FROM NTB!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
LIFE TALKS - நமது அடையாளத்துக்கு ஒரு தனியுரிமை !
திரைத்துறையில் ஒரு படம் மாபெரும் வெற்றியடைந்துவிட்டால், உடனே அந்தப் படத்தின் பெயரைத் தங்களின் பெயருக்கு முன்னால் ஒட்டிக்கொள்வது தமிழ் சினி...
-
EN-2026/03 The 2010 film Prince of Persia: The Sands of Time follows the journey of Dastan, an orphan in the Persian Empire who is adopt...
-
The 2012 film The Avengers begins with the asgardian god Loki striking a bargain with an alien force known as the Chitauri. In exchange for ...
4 கருத்துகள்:
உதயநிதி ஸ்டாலினும் - விஜய் சந்திரசேகரும். விஜய் அரசியலை யாருடனும் ஒப்பிட முடியாத ஒரு தற்குறித்தனம். பெரிய வாக்கு வங்கி அவருக்கு வரப்போவதில்லை என்றாலும் கிடைக்கும் வாக்கு யாருக்கோ சேதாரத்தை உண்டு பண்ண போகிறது என்றளவில் அவரும் களத்தில் இருக்கிறார் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும். இதில் அவர் அல்லது அவரின் ரசிக தற்குறிகளை அவ்ருக்கு எதிராக நிறுத்துவது உதயநிதியை. ஸ்டாலின் அளவுக்கு எல்லாம் விஜய் வொர்த் இல்லை என்பது விஜய் கார் ஓட்டுநருக்கே தெரியும்.
இருவருக்குமே அப்பாவின் அடையாளம் பெரிய உதவி என்றால் யாராலும் மறுக்க முடியாது. அதற்காக இருவருக்கும் திறமை இல்லை என்றாகிவிடாது. இருவருமே அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு எழுந்து நின்றவர்கள். உதயநிதி எப்படி அரசியல்வாதிகள் சூழ வளர்ந்தாரோ விஜய் அப்படி சினிமா நடிகர்கள் சூழ வளர்ந்தார். அந்த வகையில் அவர்களின் தேர்வு ஒன்றும் வியக்க வைத்த ஒன்று இல்லை.
விஜய் சினிமாவில் தொட்ட உச்சம் என்பதில் ( கடைசி எட்டு ஆண்டுகள் நீங்கலாக ) அவரின் மெனக்கெடல் அதிகம். அவரின் எல்லா படங்களும் அப்பா எஸ் ஏ சி கேட்டு ஒகே சொன்ன பிறகு கேட்ட கதைகள் தான். சில சமயம் அப்பாவின் நம்பிக்கைகாக மட்டுமே சில படங்களில் நடித்திருக்கிறார். விஜயை இந்தளவு உயர்த்தியதில் அவரின் அப்பாவின் பங்கு பெரியது. விஜயின் கடைசி பதினைந்து படங்களுக்கு அவரின் தலையீடு இல்லாமல் இருந்திருக்கலாம். மத்த படி விஜயின் பாதையை உருவாக்கியவர் சந்திரசேகர்.
இந்த பக்கம் நேரதிர். உதயநிதிக்கு என ஸ்டாலின் எதையும் செய்யவில்லை. காரணம் அவரே கட்சிக்குள் பல்டி அடித்துதான் வந்தார். அப்போதைய பல பெருந்தலைவர்கள் கட்சிக்குள் பெரிய பொறுப்பு என்பதையோ, அமைச்சரவையில் பெரிய பொறுப்பு என்பதையே ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகையால் காத்திருக்க வேண்டிய நிலையில் தான். அன்புமணி, துரைவைகோ பொல தட்டில் வைத்து எல்லாம் எந்த பதவியும் அவருக்கு வரவில்லை. அடுத்து உதயநிதியை வளர்த்தேன் என சொல்ல அவரால் முடியாது. அது முழுக்க முழுக்க அம்மாவை சார்ந்தது. உதயநிதியின் நண்பர்கள் எல்லாரும் கட்சியை சார்ந்தவர்களாகவும் சினிமாவை சார்ந்தவர்களாகவும் அமைந்து போனது அவரின் இயல்பான சூழல்.
விஜயும் உதயநிதியும் சினிமா நட்பு கிடையாது. சென்னையில் உதயநிதி தொடங்கிய ஸ்னோ புவுலிங் கேமில் தொடங்கியது அது. விஜய் ரசிகரான உதயநிதியை படம் தயாரிக்க அழைத்தது வந்தது விஜய் தான். தயாரித்தால் கில்லி பட அமைப்பில் தான் தயாரிப்பேன் என நுழைந்தார். முதல் படம் பப்படம் ஆனது வேறு கதை. பிறகு அவர் படத் தயாரிப்பாளராகவும், விநியோகஸ்தராகவும் தன் பயணத்தை தொடங்கினார். இன்றளவும் கண்ணியமான விநியோகஸ்தர் என்ற பெயர் அவருக்கு உண்டு. பண விவகாரங்கள் எல்லாமே மிக தெளிவாக நடந்த நிகழ்வும் உண்டு. ஆனால் விஜயால் தன் பயணத்தை தொடங்கியவர் ஒரு கட்டத்தில் விஜய் படங்கள் வாங்கி வெளியிடுவதை தவிர்க்க தொடங்கினார். தமிழ்நாடு முழுக்க நேரிடையாக தொடர்பு உள்ள ஒரு நிறுவனம் தன்னை தவிர்ப்பதை விஜயால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. உதயநிதி தவிர மற்ற நிறுவனங்கள் இருந்தாலும் தமிழ்நாடு முழுக்க நேரிடையாக என்ற அழுத்தம் கிடையாது. உதயநிதிக்கு முன்பாக அந்த வேலையை தொடங்கியவர் பாஸ்கரன் என்பவர். வசீகரா படத்தை அப்படித்தான் வெளியிட்டார்கள். பாஸ்கரன் யார் என்பதை தினகரன் குழுவிடம் கேட்டால் சொல்லுவார்கள்.
சினிமாவில் விஜய் மூத்தவர். அரசியலில் உதயநிதி மூத்தவர். வயதில் விஜய் மூத்தவர். இருவரின் அரசியலை பார்க்கும் போது உதயநிதிக்கு ஒரு கட்டுகோப்பான இயக்கம் கிடைத்திருக்கிறது. அதனை அப்படியே காப்பாற்றி கொண்டார். அவரின் முதல் இளைஞர் மாநாடு பற்றி ஒரு நியாயமான ஊடகவியலாளரிடம் கேட்டால் சொல்லுவார் அவரின் திட்டமிடலை. உதயநிதிக்கு ரசிகர்கள் கிடையாது என்பது ஒரு வரம். அவருக்கு நண்பர்கள் அதிகம் என்பது இன்னொரு வரம். விஜய்க்கு ரசிகர்களுக்கு மட்டுமே என்பது சாபம். நண்பர்கள் கிடையாது என்பது இன்னொரு சாபம். இதனாலே அரசியலில் தெளிவில் ஒரு படி முன்னே நிற்கிறார் உதயநிதி. இயல்பாகவே பணக்கார வீட்டு செல்ல பிள்ளை, அரசியல் அடக்குமுறை எல்லாம் பார்த்து செய்து வளர்ந்த பிள்ளை என்பதால் கொஞ்சம் பேசவும் செய்கிறார். இந்த பக்கம் அப்படி இல்லை. வந்த ஒரு பிரச்சினைக்கு கைகட்டி நின்ற வரலாறே இருக்கிறது. அதுவும் எடப்பாடிக்கு எல்லாம் பயந்த கதை என்பது வரலாற்றில் காமெடி சோகம். கூடுதலாக பிரச்சினை எல்லாம் வேண்டாம் நா வரேன் பேசுரேன் மத்த எல்லாம் நீங்க பார்த்துகோங்க என்ற மனப்பாங்கே விஜயிடம் இருக்கிறது. திருப்பரங்குன்றம், திட்டங்கள் பெயர் மாற்றம் என எதற்குமே வாய்திறக்காத விஜய் மறைமுகமாக தான் யாரின் ஏவல் என்பதை சொல்லிவிடுகிறார். ஆனால் ஸநாதானம் குறித்த தன் பேச்சை அழுத்தமாகவே பதிய வைத்தார் உதயநிதி.
உதயநிதி இதுதான் நம் வாழ்வு என்ற புரிதலோடு வந்து அதற்காக நேரம் ஒதுக்கி கற்றுகொண்டே வருகிறார். இவரின் மேடைப்பேச்சுகள் திராவிட மரபில் ஆஹோ ஒஹோ இல்லை என்றாலும் சொதப்பவில்லை. தனக்கு முன்னால் தன்னைவிட பெரிய பேச்சாளர்கள் என்ற அறிவு அவருக்கு தெளிவாகவே இருக்கிறது. கிடைக்கிர கேப்பில் கவனத்தை ஈர்க்க வேண்டுமென்ற மெனக்கெடலும் இருக்கிறது. தன் அரசியல் பொறுப்பை ஓரளவு செய்தே நகர்ந்திருக்கிறார் என்பதை உணர முடிகிறது.
விஜய் யாரோ விரட்டிவிட்டது போல அரசியல் வந்து அதற்காக நேரம் ஒதுக்காமல் கற்றுக்கொள்ளவும் முயலாமல் முடங்கியே இருக்கிறார். சினிமா வசனம் போலவே கத்தி கத்தி பேசிவிட்டு புகைப்படம் எடுக்க அந்த ஆக்ஷனை அப்படியே நிறுத்தி வைக்கிறார். சினிமாவில் இயக்குநர் கட் சொன்ன பிறகு அந்த மொமெண்டில் நிற்பார்கள். அது போலவே மேடையில் நிற்கிறார். தன் முன்னால் இருக்கும் கூட்டம் பேச்சை ரசிக்காது தன்னைதான் ரசிக்கும் என்ற அறிவு அவருக்கு தெளிவாக இருக்கிறது. அதனையே முதலீடாக மாற்றவும் செய்கிறார். அந்த கூட்டம் ரசிக்கவும் செய்கிறது.
ஸ்டாலின் - விஜய் என களம் உருவாக்க விஜய் நினைக்கிறார். ஆனால் நிஜம் என்னவோ திமுக மாவட்ட செயலர் - விஜய் அளவுக்கு கூட இன்னும் வரவில்லை.
விஜய் அரசியல் கோடாரி. உவைசி, மாயாவதி போல பிஸ்கட் வளர்ப்பு. இன்னும் காலம் இருக்கிறது விஜய்க்கு. விடுபட்டு வெளியே வந்து சுயமாய் அரசியலை கற்றுக்கொள்வாரா என பார்க்கலாம்.
நன்றி :
பா. சரவணகாந்த்.
#DontFallTVKTrap
கருத்துரையிடுக