திங்கள், 13 ஜனவரி, 2025

ARC - 065 - கை கொட்டி சிரிப்பார்கள் , ஊரே சிரிப்பார்கள்

 




இங்கே எப்போதும் சாத்துக்குடி கம்பெனியை நம்பவே கூடாது. சாத்துக்குடி கம்பெனியின் கஷ்டங்கள் என்னவென்றால் நீங்கள் இந்த கம்பெனியில் கம்ப்யூட்டர் துடைக்கும் துணியை வாங்கினால் கூட உங்களுக்கு 2000 ரூபாய் செலவு வைத்துவிடும். இந்த கம்பெனியிஸ் சி.பி.யூ வாங்கினால் அதனை நகர்த்த பொருத்தப்படும் நான்கு சக்கரங்கள் 80000/- க்கு விற்கப்படுகிறது. மேஜிக் எலி - சுட்டியை வாங்கினால் உங்களுக்கு சார்ஜ் பண்ணும் போர்ட் எலிக்கு அடியில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கம்பெனியில் ஃபோன் வாங்கினால் சார்ஜர் கிடையாது. இந்த கம்பெனியில் எந்த சாதனம் வாங்கினாலும் ஒரு வருஷத்துக்கு மேலே அதுவே புட்டுக்கும் உங்களுக்கு வாரேன்டி எல்லாம் கிடையாது. திரை திடீரென்று பச்சையாக மாறி ஃபோன் ரிப்பேர் ஆகும். நீங்கள் இவர்களின் சர்வீஸ் சேவை சென்ட்டருக்கு எடுத்து சென்றால் உங்களை மனுஷனாகவே மதிக்க மாட்டான். மேலும் அவர்களும் உங்கள் சாதனத்தை சரி செய்து கொடுக்க மாட்டார்கள். உங்களிடம் காசு பிடுங்கத்தான் பார்ப்பார்கள். இருந்தாலும் சாத்துக்குடிதான் நம்பர் 1 ல் இருக்கிறது. இதில் இருந்து நீங்கள் புரிந்துகொள்ளும் விஷயம் கெட்டவர்களைத்தான் எல்லோருக்கும் பிடிக்கும் ஆனால் நேர்மையாக வேலை பார்ப்பவர்களை யாருக்கும் பிடிக்கவும் பிடிக்காது. யாருமே அவரை நம்பவும் மாட்டார்கள். கெட்டவர்களை மட்டும் தலைமையில் கொண்டு சென்று அழகு பார்ப்பார்கள். இவர்களிடம் வேண்டுமென்றே ஏமாந்து இவர்களுக்கு நாங்கள் அடிமை ஆடுகள் என்பதை நிரூபித்துக்கொண்டே இருப்பதால் என்ன பிரயோஜனம். உண்மையாக இருப்பவர்களை கொஞ்சமாவது மதித்து நடக்கலாமே !  கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு விசுவாசமாக இருக்கவேண்டும் என்று தலையெழுத்தாக மண்டையில் பதிக்கப்பட்டு விட்டதா என்ன ?


GENERAL TALKS - ஆசை ஆசை இப்பொழுது

 




ஜெயிலில் மூன்று தூக்குதண்டனைக் கைதிகள் இருந்தனர். அவர்கள் இறக்கும் முன் உங்களின் கடைசி மூன்று ஆசைகள் என்ன? என்று கேட்கப்பட்டது.

முதல் கைதியின் ஆசை:
நல்ல பெண், நல்ல சாப்பாடு, நல்ல மது, அந்த நாட்டின் புகழ் பெற்ற தலைவரின் சமாதிக்கு, அருகில் புதைக்கப்பட வேண்டும், என்றன், அவனது மூன்று ஆசைகளும் நிறைவேற்றப்பட்டன.

இரண்டாவது கைதியின் ஆசை;
நல்ல பெண், நல்ல உணவு, அந்த நாட்டின் புகழ் பெற்ற இன்னொரு தலைவரின் சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும். என்று கூறினான். அவனுடைய ஆசைகளும் நிறைவேற்றிவைக்கப்பட்டன.

மூன்றாவது கைதியின் ஆசைகள்:

தனது முதல் ஆசையாக மாம்பழம் வேண்டும் என்று, கேட்டான். அப்போது மாம்பழ, சீசன் இல்லை, எனவே.. தூக்கு தண்டனை. ஆறு மாதகாலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஆறு மாதகாலத்திற்குப்பின் மாம்பழம் வாங்கிக் கொடுத்து, .

இரண்டாவது ஆசை என்ன? என்று, கேட்டனர்! செர்ரிப் பழம் வேண்டும் என்று பதில் வந்தது. அப்போது, செர்ரிப் பழ சீசன் இல்லை என்பதால் மறுபடியும், தூக்கு தண்டனை ஆறு மாதம் தள்ளி வைக்கப்பட்டு, பின் செர்ரிப்பழம் வாங்கிக் கொடுக்கப்பட்டது.

இப்பொழுது மூன்றாவது ஆசை என்னவென்று KETTATHUKKU! அவன் சொன்னான், “என் உடல் தற்போதைய அதிபரின், சமாதிக்கருகில் புதைக்கப்பட வேண்டும் என்று,!!!”

அதிகாரிகள் அதிர்ந்து விட்டனர்,.. நீ “என்ன சொல்கிறாய்? அவர் உயிருடன் அல்லவா இருக்கிறார!”

கைதி அமைதியாகச் சொன்னான்" அவர் இறக்கும் வரை நான் காத்திருக்கிறேன்“ என்று!





ARC - 064 - KANNAALANE ENADHU KANNAI NETRODU KAANAVILLAI - EN KANGALAI PARITHUKONDU YEN INNUM PESAVILLAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU (MUSIC TALKS)


சல சல சல சோலை கிளியே சோலைய தேடிக்க
சிலு சிலு சிலு சா்க்கரை நிலவே மாலைய மாத்திக்க
மாமன்காரன் ராத்திாி வந்தா மடியில கட்டிக்க 
மாமன் தந்த சங்கதி எல்லாம் மனசுல வைச்சுக்க

கண்ணாளனே 
எனது கண்ணை 
நேற்றோடு காணவில்லை

என் கண்களை 
பறித்துக்கொண்டு
ஏன் இன்னும் பேசவில்லை 

ஆளான
ஒரு சேதி அறியாமலே 
அலைபாயும்
சிறு பேதை 
நானோ 

உன் பேரும் 
என் பேரும் 
தொியாமலே 
உள்ளங்கள் 
இடம் மாறும் 
ஏனோ 

வாய் பேசவே 
வாய்ப்பில்லையே
வலி தீர 
வழி என்னவோ 

உந்தன் கண்ஜாடை
விழுந்ததில் நெஞ்சம் 
நெஞ்சம்
தறிகெட்டுத் தளும்புது 
நெஞ்சம்

எந்தன் நுாலாடை 
பறந்ததில் கொஞ்சம் 
கொஞ்சம் 
பிறை முகம்
பாா்த்தது கொஞ்சம்

ரத்தம் கொதிகொதிக்கும்
உலை கொதித்திடும் 
நீா்க்குமிழ் போல
சித்தம் துடிதுடிக்கும் 
புயல் எதிா்த்திடும்
ஓரு இலை போல 

பனித்துளிதான் 
என்ன செய்யுமோ 
மூங்கில் காட்டில் 
தீ விழும்போது
மூங்கில் காடென்று 
மாறினாள் மாது

ஒரு மின்சார 
பாா்வையின் வேகம் 
வேகம் 
உன்னோடு 
நான் கண்டுகொண்டேன் 

ஒரு பெண்ணோடு
தோன்றிடும் தாபம் 
தாபம் என்னோடு
நான் கண்டுகொண்டேன்

என்னை மறந்துவிட்டேன்
இந்த உலகத்தில் 
நானில்லை நானில்லை 
உன்னை இழந்துவிட்டால்
எந்த மலாிலும் 
தேனில்லை தேனில்லை

இது கனவா இல்லை 
நனைவா 
என்னை கிள்ளி 
உண்மை தெளிந்தேன் 
உன்னைப் பாா்த்தெந்தன் 
தாய்மொழி மறந்தேன்


ARC - 062 - நாணயமும் நன்மதிப்பும் சேர்க்க அரிது



ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் வாழ்ந்து வந்தார். அவருக்கு ஒரு மகன் அவன் ஊதாரித்தனமாக தனது தந்தை சேர்த்த செல்வத்தை எல்லாம் செலவழித்து வந்தான். அதனால் கவலை அடைந்த செல்வந்தர் அந்த ஊருக்கு வந்த துறவியிடம் தமது கவலையை கூறினார்.
.
அதற்கு அந்த துறவி உங்கள் மகனை இங்கு அனுப்பி வையுங்கள் என்று கூறினார். செல்வந்தர் தம் மகனிடம் நமது ஊருக்கு வந்திருக்கும் துறவி மிகவும் சக்தி வாய்ந்தவர் அவரை பார்த்து ஆசி வாங்கி வா என்று அனுப்பி வைத்தார்.
.
அவனும் வேண்டா வெறுப்பாக சரி என்று ஒப்புக் கொண்டு துறவியை பார்க்க சென்றான். துறவியை சந்தித்து தம் தந்தையார் உங்களைக் காண அனுப்பினார் என்று கூறினான். துறவியும், நல்லது என் பின்னால் அந்த மலைக்கு வா உனக்கு ஒரு உபதேசம் செய்ய சொல்லி இருக்கிறார் உன் தந்தை.
.
அவனும் துறவியை பின் தொடர்ந்து மலை மீது ஏறத் தயாரானான் அப்போது துறவி ஒரு சிறய பாறாங்கல்லை சுமந்து வருமாறு கூறினார். அவனும் சரி என்று அந்த கல்லை தூக்கிக் கொண்டு கஷ்டப் பட்டு மலை மீது ஏறினான் மேலே வந்தவுடன் அந்த கல்லை உருட்டிவிடும் படி துறவி கூறினார்.
.
அவனுக்குக் கோவம் வந்தது, என்ன விளையாடுகிறீர்களா என்று கேட்டான் அதற்கு துறவி இல்லை மகனே எதனால் உனக்கு இந்த கோபம் வந்தது என்று கேட்டார், அவன், எவ்வளவோ கஷ்டப்பட்டு கொண்டு வந்த என் உழைப்பை ஒரு நொடியில் வீணடிக்க சொல்கிறீர்கள் பிறகு கோபம் வராதா என்று கேட்டான்.
.
அதற்கு துறவி உன் தந்தை மிகவும் கஷ்டப்பட்டு சேர்த்த செல்வமும் அவருக்கு இருக்கும் நன்மதிப்பும் இப்படித்தான் கஷ்டப்பட்டு சேர்த்தது ஆனால் நீ அதையெல்லாம் பாழ் செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று கேட்டவுடன் அவன் வெட்கித் தலைகுனிந்து துறவியிடம் நன்றி சொல்லி விட்டு தனது தந்தையிடம் சென்று மன்னிப்பு கேட்டான்.

♡ଘ(੭ˊᵕˋ)੭=❤︎ପ(๑•ᴗ•๑)ଓ

நம்ம வாழ்க்கை ஒரு அப்டேட் அடைய வேண்டும், இன்று போல எப்போதுமே எல்லாமே சிறப்பானதாக இருக்காது. வாழ்க்கையின் நாட்கள் கடந்து செல்ல கடந்து செல்ல உ...